எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,டிச.- 19 - முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கூறிய கருத்தை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென்று வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே. இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் பற்றி பேசினார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் கூறுகையில் முல்லைப்பெரியாறு அணை உடைந்துவிடும் என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு இல்லை. ஒரு இடைத்தேர்தலை பற்றிதான் அவர்களுக்கு அச்சம் என்று கூறினார். ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு கேரள அரசியல்வாதிகள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் தாமஸ், கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் ஒருவர் இப்படி பேசக்கூடாது. இதுகுறித்து பிரதமரிடம் புகார் செய்வோம் என்றார். முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கக்கூடாது. இதுகுறித்து பிரதமர் மற்றும் சோனியா காந்தியிடம் எடுத்துக்கூறுவோம் என்றார். கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில் கூறுகையில், சிதம்பரம் கருத்து குறித்து சோனியா காந்தியிடம் கூறுவோம் என்றார். கேரள மாநில மாநில முன்னாள் முதல்வரும் இடது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான அச்சுதானந்தன் கூறுகையில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும் என்றார். கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் எம்.ஐ.ஷாநவாஸ், பி.டி.தாமஸ், மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எம்.சுதீரன், இடது கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், மாநில முன்னாள் அமைச்சர் பிரேமச்சந்திரன், கேரள காங்கிரஸ் தலைவர் கே.எம்.மணி ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்ட அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றுக்காலையில் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் தன்னுடைய அலுவலகத்திற்கு வந்தார். வந்த பிறகு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது- முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா பயப்படுவதற்கு காரணம் அணை குறித்து அல்ல. இடைத்தேர்தல் பயம்தான் என்று கூறியதை நான் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மற்றவர்கள் பேசுவது மாதிரிதான் சாதாரணமாக நான் பேசினேன். இந்த வார்த்தை தேவையில்லாதது. யாரையும் புண்படுத்துவதற்காக இதை நான் கூறவில்லை. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் இரண்டு மாநில மக்களும் சேர்ந்து சகோதரத்துவ முறையில் சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது. நாம் அனைவரும் கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். முல்லைப்பெரியாறு அணைகுறித்து பயப்படுவதை நியாயப்படுத்த முடியாது. அதேசமயத்தில் அணை குறித்த அச்சத்தை போக்குவது நமது கடமை. அணை பாதுகாப்பு குறித்த கவலை கேரளாவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும்தான். 3 பேர் நீதிபதிகள் குழுவின் அறிக்கை வரும் வரைக்கும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு கூறும் வரைக்கும் நாம் அனைவரும் பொறுமையாக காத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தமிழ்நாட்டில் வரும் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Oct 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 16 -ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
இஸ்ரேலை சேர்ந்த பிணைக்கைதிகள் 20 பேரை விடுவிக்க ஹமாஸ் முடிவு
12 Oct 2025காசா : இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான உடன்படிக்கையின் படி முதல் கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த சுமார் 20 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
-
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாட போராட்டக்குழு முடிவு
12 Oct 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் 15-வது முறையாக பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ஜவுளிக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
12 Oct 2025சென்னை : நெருங்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
-
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்: மூத்த வழக்கறிஞர் பராசரனுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகழாரம்
12 Oct 2025சென்னை : சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, மங்களூருக்கு சிறப்பு ரயில்
12 Oct 2025நெல்லை : தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
இந்தியா-ஆப்கான் கூட்டறிக்கை: ஆப்கன் தூதரிடம் பாக்., கண்டனம்
12 Oct 2025இஸ்லாமாபாத் : இந்தியா வந்துள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முட்டாகி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
12 Oct 2025மதுரை : தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
-
இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்: லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மீண்டும் தாயகம் திரும்புகின்றனர்
12 Oct 2025காசா : காசாவில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்வமுடன் தாயகம் திரும்பி வருகின்றனர்.
-
3 கத்தார் தூதர்கள் விபத்தில் பலி
12 Oct 2025எகிப்து : எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர்.
-
தீபாவளி பண்டிகை, சட்டமன்ற தேர்தல்: சொந்த ஊர் செல்ல தயாராகும் பீகார் மாநில தொழிலாளர்கள்
12 Oct 2025திருப்பூர் : வருகிற 20-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் பணிபுரியும் பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தம
-
நயினார் நாகேந்திரன் பிரசார வாகனம் மதுரை வந்தது
12 Oct 2025மதுரை : பா.ஜ.க.
-
58 பாக்., வீரர்களை கொன்று 25 ராணுவ முகாம்களை கைப்பற்றியது ஆப்கான்
12 Oct 2025காபூல் : தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிவிப்பில், இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும், 25 பாகிஸ்தான் இராணுவ முகாம்
-
அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Oct 2025மிசிசிப்பி : அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
100 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
12 Oct 2025பெய்ஜிங் : அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 100 சதவீதம் வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீனா, ‘நாங்கள் ஒரு வரிப் போரை விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதைப் பற்றி பயப்படவும் இல
-
பார்வையாளர்கள் பார்க்காததை வழங்குவோம்: அல்லு அர்ஜுனின் படம் குறித்து இயக்குனர் அட்லி புதிய தகவல்
12 Oct 2025பெங்களூரு : அல்லு அர்ஜுன் படத்தில் பார்வையாளர்கள் பார்க்காததை வழங்கவிருப்பதாக இயக்குநர் அட்லி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
22 குழந்தைகள் பலியான விவகாரம்: விதிமீறலில் ஈடுபட்ட மருந்து நிறுவனம்
12 Oct 2025புதுடெல்லி : காஞ்சீபுரத்தை சேர்ந்த சிரேசன் பார்மா என்ற அந்த நிறுவனத்தில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழக அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்ததில், அந்த நிறுவனம் பல்வே
-
முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித்ஷா கருத்துக்கு காங். கடும் கண்டனம்
12 Oct 2025புதுடெல்லி : முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித்ஷா வெளிப்படுத்திய கருத்துகளை விமர்சித்துள்ள காங்கிரஸ், ‘கடந்த 11 ஆண்டுகளாக அமித்ஷா என்ன செய்து கொண்டிருந்தார்?'
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Oct 2025சென்னை, லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.