எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மார்ச்.15 - அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளான இடது கம்யூனிஸ்ட் மற்றும் வலது கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கான இடங்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளை பெற்ற இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் அ.தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்கு பாடுபடுவோம் என்று உறுதி அளித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தமாதம் 13-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் இந்த தேர்தலை சந்திக்கினறன. அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., வைகோ தலைமையிலான ம.தி.மு.க. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம், மற்றும் இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளஞர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கட்சிகளில் ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவர, மற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. ம.தி.மு.க.வுடனும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்தநிலையில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. முன்னதாக நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வலது கம்யூனிஸ்ட் தலைவர்களான நல்லகண்ணு, தா.பாண்டியன், மகேந்திரன், பழனிசாமி ஆகியோர் போயஸ்கார்டன் சென்றனர். அவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அன்புடன் வரவேற்றார். இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இந்த சந்திப்பின்போது முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் தா.பாண்டியனும் கையெழுத்திட்டனர். பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த தா.பாண்டியன் கூறுகையில் மத்திய மாநில அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தோழமை கட்சிகளின் வெற்றிக்கும் நாங்கள் பாடுபடுவோம் என்று கூறினார்.
ஜனநாயகத்தை மீட்கவும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும் சுறுக்கமாக சொன்னால் தமிழ்நாட்டை மீட்கும் போராட்டமாக எங்கள் கூட்டணியின் போராட்டம் அமையும் என்றும் வலது கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் தா.பாண்டியன் கூறினார். 10 தொகுதிகள் என்னென்ன என்று கேட்டபோது ஜெயலலிதா நாளை (இன்று) அறிவிப்பார் என்று கூறிய தா.பாண்டியன், 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததில் தங்களுக்கு திருப்தியே என்றும் தெரிவித்தார்.
இடது கம்யூனிஸ்டுக்கு 12 தொகுதிகள்
அதன் பிறகு இடதுகம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பிற்பகல் 3.30 மணி அளவில் போயஸ் கார்டன் வந்தார். அவருடன் மத்திய கமிட்டி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். ஜெயலலிதாவின் வீட்டிற்குள் சென்ற ராமகிருஷ்ணன்,அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்த சந்திப்பின்போது இடது கம்யூனிஸ்டு கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் ராமகிருஷ்ணனும்ம் கையெழுத்திட்டனர். பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராமகிருஷ்ணன், அ.தி.மு.க. கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. காங்கிரஸை எதிர்த்து தங்கள் கட்சி கடுமையாக தேர்தல் களத்தை சந்திக்கும் என்றும் ராமகிருஷ்ணன் கூறினார். இந்த கூட்டணி ஒரு மகத்தான கூட்டணி என்று கம்யூனிஸ்டு தலைவர்கள் பூரிப்போடு தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
19 Jan 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
-
வரும் 22-ம் தேதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
19 Jan 2026சென்னை, மத்திய அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை (புதன்கிழமை) சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு
19 Jan 2026பெய்ஜிங், சீனாவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவை கண்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் பலனற்று போயின.
-
லடாக்கில் நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, லே லடாக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமைகிறது நீர்த்தேக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
19 Jan 2026செங்கல்பட்டு, 1.6 டி.எம்.சி.
-
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
19 Jan 2026சென்னை, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –19-01-2026
19 Jan 2026 -
பாகிஸ்தானில் பயங்கரம்: வணிக வளாக திடீர் தீ விபத்தில் 14 பேர் பலி
19 Jan 2026கராச்சி, பாகிஸ்தானில் நாட்டில் வணிக வளாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதை செய்வேன்: அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு
19 Jan 2026நியூயார்க், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத
-
ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழப்பு 21 ஆக உயர்வு
19 Jan 2026மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
-
நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன்' ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Jan 2026மாமல்லபுரம், 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான தொடர் கேள்வி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்
19 Jan 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் 2-வது முறையாக நேரில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் தாமதமாக வர காரணம் என்ன? உள்ளிட்ட அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை சி.பி.ஐ.
-
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்: கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்
19 Jan 2026சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில
-
திபெத்தில் நிலநடுக்கம்
19 Jan 2026பெய்ஜிங், திபெத்தில் ரிக்டர் 4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல்
19 Jan 2026புதுடெல்லி, பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. இன்றே புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்: 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
19 Jan 2026சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
19 Jan 2026சென்னை, சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையானது.
-
செர்பியா நாட்டில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி
19 Jan 2026நோவி சாத், செர்பியா அரசில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.
-
பனையூரில் இன்று நடைபெறுகிறது 12 பேர் அடங்கிய த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
19 Jan 2026சென்னை, பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்.
-
பா.ம.க. எங்களுக்கே சொந்தம்: ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு
19 Jan 2026சென்னை, பா.ம.க. கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
காஸா தொடர்பான அமைதி வாரியம்: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு
19 Jan 2026நியூயார்க், காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்
-
இ.பி.எஸ்.சுடன் தனியரசு சந்திப்பு?
19 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.
-
அவதூறு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகாத ராகுல் காந்தி விசாரணை ஒத்திவைப்பு
19 Jan 2026லக்னோ, பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


