முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல்

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், ஜன. - 17 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் சுவாமிகளுக்கு மண்பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது.  திருப்பரங்குன்றம் கோயிலில் தினமும் வெண்கல பானையில் பிரசாதம் தயாரிக்கப்பட்டு சுவாமிகளுக்கு படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். தைப்பொங்கலை முன்னிட்டு கோயில் மடப்பள்ளியில் மண் பானையில் பொங்கல் தயாரித்து அதில் மஞ்சள் கிழங்கு, வாழை இலை, கரும்பு துண்டு வைத்து எடுத்து செல்லப்பட்டு மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் முன்பு பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மகாதீப தூபாராதனைகள் நடந்தது. பின்னர் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முன்பு மண் பானைகள் வைக்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. மண் பானையுடன் சுவாமிகளுக்கு பொங்கல் படைக்கப்படுவது தை பொங்கலன்று மட்டுமே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago