முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர அமைச்சரவை மேலும் விஸ்தரிப்பு

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,ஜன.20 - ஆந்திரா மாநில காங்கிரஸ் அமைச்சரவை நேற்று விஸ்தரிக்கப்பட்டது. அமைச்சரவையில் மேலும் 2 பேருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆந்திராவில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை உள்ளது. இதில் பிரஜா ராஜ்யம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மற்றும் ராஜ்யசபை உறுப்பினர் ஆகிய இருவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ஆந்திரா அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது. காந்த ஸ்ரீநிவாசராவ், சி.ராமசந்திரய்யா ஆகியோர்களுக்கு கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். ஆந்திர அமைச்சரவையில் 2 பேருக்கு புதியதாக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ள போதிலும் மேலும் 5 அமைச்சர்கள் பதவி காலியாக உள்ளது. பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி, பிரஜா ராஜ்ய கட்சி தலைவரும் திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கே.சிரஞ்சீவி, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் போட்ஸ்சா சத்யநாராயணா மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். தற்போது அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ள இருவரும் பாராளுமன்றத்தில் இருசபைகளின் உறுப்பினர்களாகவும் பதவி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்