எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.22 - பொங்கல் தினத்தன்று இரவு சென்னை எழிலகத்தில் இயங்கி வந்த தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் தொழில் வணிக வரித்துறையின் தலைமை அலுவலகங்கள் திடீர் தீவிபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானதால், மக்கள் நலப்பணிகளை செய்து வரும் அந்த இரு அலுவலகங்களும் முறையே, சிந்தாதிரிப்பேட்டை மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கவும், அந்த அலுவலகளுக்கு தேவையான தளவாட சாமான்களும் வாங்க ரூ.2.46 கோடி நிதிஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூகநலத்துறை இயக்குனரகம், மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனரகம் ஆகிய அரசு அலுவலகங்கள் இயங்கி வந்த சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள தொன்மை வாய்ந்த கட்டடத்தில் அரசு விடுமுறை தினமான 15.01.2012 அன்று நள்ளிரவு 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் சமூக நலத்துறை இயக்குனரகம் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனரகம் ஆகிய அலுவலகங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின. இவற்றிலிருந்த பல ஆவணங்கள், கோப்புகள், கணினிகள், மேஜை, நாற்காலி போன்ற அனைத்து தளவாடச் சாமான்களும் தீக்கிரையாகி உள்ளன. சமூக நலத்துறைக்கு இதன் மூலம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிற்கும் மற்றும் தொழில் வணிகத்துறை அலுவலகத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அலுவலகங்களின் பணிகள் பொதுமக்கள் சம்பந்தப்பட்டவை என்பதால், இப் பணிகளில் எவ்விதமான தொய்வும் ஏற்படாதிருக்க, உடனடியாக மாற்று இடங்களை தேர்வு செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் இயங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பணித்துள்ளார். இதன் அடிப்படையில் சமூகநலத்துறை அலுவலகம், சிந்தாதிரிப்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி கட்டடத்திலும், தொழில் வணிகத்துறை அலுவலகம், சென்னை ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள சவுத்கெனால் பேங்க் சாலையில் அமைந்துள்ள தொழில் கூட்டுறவு வங்கியின் தலைமையகத்திலும் உடனடியாக இயங்க ஆரம்பித்துள்ளன.
சமூகநலத்துறை இயக்குனரகம் மற்றும் தொழில் வணிகத்துறை அலுவலகம் ஆகியவை முழுவீச்சில் செயல்பட ஏதுவாக, சமூகநலத்துறை இயக்குனரகத்திற்கு தேவையான புதிய கணினிகள், மேசை, நாற்காலிகள், தளவாட சாமான்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் வாங்குவதற்காக முதற்கட்டமாக 96 லட்சம் ரூபாயும், இதேபோன்று, தொழில் வணிகத்துறை அலுவலகத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 2 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த தீ விபத்தில் அழிந்த பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் மற்றும் கோப்புகளை விரைந்து மீண்டும் உருவாக்கவும் ஆணையிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த துரித நடவடிக்கையின் மூலம், பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் சமூக நலத்துறையும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உதவித் திட்டங்கள், சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் போன்ற பல்வேறு மக்கள் நலப் பணிகளை ஆற்றிவரும் தொழில் வணிகத்துறை அலுவலகமும் விரைவில் முழு அளவில் செயல்படத் துவங்கும். மேலும், இத்தொன்மை வாய்ந்த கட்டடத்தின் உறுதித் தன்மையை கண்டறியவும் இதை போன்றே புதிதாக ஒரு கட்டடத்தை இந்த வளாகத்திலேயே கட்டுவது குறித்தும் அல்லது இதனை முன்பிருந்தது போன்ற பழைய நிலைக்கே மீளக் கொண்டு வந்து அதைப் போன்றே புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்ட இயலுமா என்பது குறித்தும் ஆய்வு செய்வதற்காக டாக்டர் ஏ.ஆர்.சாந்தகுமார், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் (ஓய்வு) ஆர்.கோபாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடம்) சி.பழனிவேலு, தலைமை நகர்ப்புற திட்ட அலுவலர் மற்றும் தொன்மைக் குழுமத்தின் தலைவர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து, அக்குழு தனது அறிக்கையினை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இக்குழு, சென்னை பெருநகரில் உள்ள இதர தொன்மை வாய்ந்த அரசு கட்டடங்களை ஆய்வு செய்து, அவற்றின் பாதுகாப்புத்தன்மை குறித்து அறிக்கை ஒன்றினை அளிக்கும்படியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இனி வருங்காலத்தில் அரசு கட்டடங்களில் தீ விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும்பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலக கட்டடங்களில் உள்ள தீயணைப்பு கருவிகளை காலமுறைப்படி பரிசோதனை செய்து, அவைகளை தீ விபத்துக்கள் ஏற்படும் சமயம் உபயோகிப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், அதேபோன்று, மின் சாதனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த அனைத்து இணைப்புகளையும் காலமுறைப்படி பரிசோதித்து, அதில் உள்ள குறைகளை கண்டறிந்து அவைகளை சரிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.