முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழக்கு மாகாணத்திற்கு கலாம் வராதது ஏமாற்றமளிக்கிறது-மன்சூர்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

கொழும்பு, ஜன. - 30 - இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தராதது பெரும் ஏமாற்றமளிப்பதாக முன்னாள் அமைச்சர் மன்சூர் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை சென்ற அப்துல் கலாம், தமிழர்கள் வாழும் மாகாணங்களில் ஒன்றான வடக்கு பிரதேசத்திற்கு மட்டும் சென்றிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மன்சூர், கிழக்கு மாகாண பல்கலைக் கழக மாணவர்கள், பள்ளி மாணவர்கள் அனைவரும் கலாமின் வருகையை பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். கிழக்கு மாகாணத்திற்கு கலாம் வருகை தர ஏற்பாடு செய்து தருமாறு இந்திய தூதரகத்திடம் கேட்டுக் கொண்ட நிலையில் தூதரகமும் நம்பிக்கை அளித்திருந்தது. எப்போதோ ஒரு முறை வருகை தரும் கலாமை கிழக்கு மாகாண மக்கள் சந்திக்காமல் போனது இளம் தலைமுறையை ஏமாற்றமடைய செய்திருக்கிறது என்றும் மன்சூர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்