முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலாவின் தம்பி திவாகரன் திருச்சியில் சிறையில் அடைப்பு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

நீடாமங்கலம். பி.- 4 - சசிகலாவின் தம்பி திவாகரன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கம் அருகேயுள்ள ரிஷியூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மனைவி கஸ்தூரி என்பவர் தனது வீட்டை இடித்து விட்டதாக சசிகலாவின் தம்பி திவாகரன் உள்ளிட்ட 7பேர் nullமீதி போலீசில் புகார் செய்தார். கடந்த 22ந்தேதி இந்த புகாரின் பேரில் திவாகரன் உள்ளிட்டோர் nullமீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து திவாகரன் தலைமறைவானார். அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்nullநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திவாகரனை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதனால் தாயாரின்  நினைவுதினத்தை சிறப்பாக கொண்டாடும் திவாகரன் அந்த நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் திவாகரனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இந்நிலையில் 9 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். நேற்று முன்தினம் திருச்சி பால்பண்ணை அருகே தஞ்சாவூர் டி.ஐ.ஜி அமல்ராஜ், திருவாரூர் எஸ்.பி. சேவியர் தன்ராஜ், டி.எஸ்.பி.க்கள் நாகை மாணிக்க வாசகம், சீர்காழி நவநீதகிருஷ்ணன், திருவாரூர் சீனிவாசன், நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் 2ந்தேதி நள்ளிரவில் திவாகரனை கைது செய்தனர். பின்னர் திவாரனின் வக்கில் தமிழரசன் முன்னிலையில் அதிகாலை 2.42 மணிக்கு வலங்கைமான் nullநீதிபதி செல்லபாண்டியனின் வீட்டிற்கு கொண்டு சென்று ஆஜர் படுத்தினர். nullநீதிபதி அவரை 15 நாள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் திவாகரனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்