முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி தைப்பூச திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் டி.ஐ.ஜி. பார்வையிட்டார்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

பழனி, பிப். - 4 - பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி. சஞ்சய் மாத்தூர் நேரடியாக பார்வையிட்டார். பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய டி.ஐ.ஜி. சஞ்சய் மாத்தூர் நேற்று பழனி வந்தார். பழனி மலைக் கோயிலுக்கு சென்று பக்தர்கள் நெருக்கடியின்றி எவ்வாறு தரிசனம் செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதே போல் பழனி அடிவாரம், சுற்றுலா பேருந்து நிலையம், வ.உ.சி. பஸ் நிலையம், நகராட்சி தற்காலிக பேருந்து நிலையம், பழனியாண்டவர்  கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதில் கோயில் துணை ஆணையர் மங்கையற்கரசி, போலீஸ் டி.எஸ்.பி. குப்புராஜ், நகராட்சி ஆணையர் முத்து, பொறியாளர் நாச்சிமுத்து, இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்