முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு மதுரை கோவில்களில் பொது விருந்து

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,பிப்.- 4 - அண்ணா நினைவு நாளான நேற்று மதுரையில் உள்ள முக்கிய கோவில்களில் அரசு சார்பில் பொது விருந்து நடைபெற்றது.  பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மதியம் பொது விருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் சகாயம், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் இந்த பொது விருந்தில் ஆதரவற்ற முதியோர்கள் ஆயிரத்து 500 பேருக்கு இலவச வேட்டி, சேலைகளை கலெக்டர் சகாயம் வழங்கினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து பொது விருந்தில் உணவு சாப்பிட்டனர். கோவில் சார்பில் சுமார் ரூ.50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பொற்றாமரை குளம் மராமத்து பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.   இந்த நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்துக்கண்ணன், இணை ஆணையர் ஜெயராமன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்