முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் இணைந்த விஜயகாந்த் நண்பர்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப். 8 - விஜயகாந்த்தின் சிறு வயது முதல் உற்ற தோழனாக விளங்கி, விஜயகாந்த் திருமணத்திற்குப் பிறகு அவரை விட்டு ஓரம் கட்டப்பட்ட இப்ராகிம் ராவுத்தர் நேற்று அ.தி.மு.க.வில் இணைந்தார். விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் மதுரையில் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். விஜயகாந்த சென்னைக்கு வந்து நடிகராக முயன்றபோது அவருக்கு துணையாக இருந்தவர் ராவுத்தர். விஜயகாந்த்தின் வளர்ச்சியில் ஆனந்தம் கண்டவர். விஜயகாந்த்துக்காக பலரிடமும் போய் நடிக்க வாய்ப்பு கேட்டு பாடுபட்டவர். விஜயகாந்த்தை வைத்துப் பல படங்களையும் தயாரித்தார். இவர்களது நட்பு அந்தக் காலத்தில் பெரும் ஆச்சரியமாகப் பேசப்பட்டது. அப்படி ராவுத்தர் பேச்சை விஜயகாந்த் தட்ட மாட்டார், விஜயகாந்த் பேச்சை ராவுத்தர் தட்ட மாட்டார். இந்த நட்புக்கும் பின்னர் பங்கம் வந்தது. விஜயகாந்த்துக்கு திருமணமான பின்னர் படிப்படியாக ராவுத்தர் ஓரம் கட்டப்பட்டார். ஒரு கட்டத்தில் ஒரேயடியாக ராவுத்தரவை விட்டுப் பிரிந்து விட்டார் விஜயகாந்த். இவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை யாருக்குமே தெரியவில்லை.

கடந்த பல வருடங்களாகவே அமைதியாக இருந்து வந்தார் ராவுத்தர். படத் தயாரிப்பிலும் ஈடுபடுவதில்லை. இடையில் சில காலம் காங்கிரசில் இருந்தார் ராவுத்தர். ஆனாலும் ஆக்டிவாக அவர் எதிலும் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று ராவுத்தர் அ.தி.மு.க.வில் வந்து இணைந்தார். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை முறைப்படி அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார் இப்ராகிம் ராவுத்தர். இந்த நிகழ்ச்சி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நேற்று நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்