எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
							
						
ரியோடிஜெனீரோ, மே, 30 - உலகமெங்கும் கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் 2014 ம் ஆண்டிற்கான உலக கால்பந்தாட்டப்போட்டி ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை பிரேசிலில் நடக்கவுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு கிரிக்கெட் ஜூரம் என்றால் உலகில் முக்கால்வாசிப் பேருக்கு கால்பந்துக் காய்ச்சல்தான் அதிகம். இப்படிப்பட்டர்களுக்கு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி வந்து விட்டால் போதும் போட்டது போட்டபடி.. கமான் கமான் என்று டிவி முன்பும் முடிந்தால் போட்டி நடக்கும் ஸ்டேடியங்களில் குவிந்தும் குதூகலிக்க ஆரம்பித்து விடுவார்கள். உலகக் கோப்பைப் போட்டி நடக்கும் இந்த ஒரு மாத காலமும் உலகம் முழுவதும் இதுதான் பேச்சாக இருக்கும். யார் எத்தனை கோல் அடிப்பார்கள்.. எந்த அணிக்குக் கோப்பை.. என்ற ஹேஸ்யங்களும், ஜோசியங்களும் களை கட்டியிருக்கும். உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி எவ்வளவு ஹாட்டானதோ அதை விட ஹாட்டானது அதைப் பார்க்க வரும் ரசிகர் கூட்டம்.. ஆண்கள் மட்டுமல்ல, பெண் ரசிகைகளும்தான். வாருங்கள்.. உலகக் கோப்பைப் போட்டித் தொடர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை கண்கவர் கால்பந்து ரசிகைகளின் புகைப்படங்களி்ன் துணையுடன் ஒரு ரவுண்டு பார்த்து விட்டு வரலாம்.
கால்பந்துக்காக உயிரையே கொடுக்கத் துணியும் ரசிகர்களைக் கொண்ட பிரேசில் நாட்டில்தான் 2014ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதை 2007ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிஃபா எனப்படும் உலக கால்பந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தத் தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் தானாகவே போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றது. மற்றவர்கள் தகுதிப் போட்டிகள் மூலம் தகுதி பெற்றார்கள்.
ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், தென் கொரியா, அல்ஜீரியா, காமரூன், கானா, ஐவரி கோஸ்ட், நைஜீரியா, கோஸ்டா ரிகா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈகுவடார், உருகுவே, பெல்ஜியம், போஸ்னி ஹெர்ஸகோவினா, குரோஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ரஷ்யா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள்தான் இந்த வருடத்து உலகக் கோப்பைப் போட்டியில் மோதப் போகின்றன.
உலக்க கோப்பைக் கால்பந்துப் போட்டியில் மாபெரும் பரிசுத் தொகை காத்திருக்கிறது. மொத்தப் பரிசுத் தொகை 576 மில்லியன் டாலராகும். இது கடந்த 2010 தொடரை விட 37 சதவீதம் கூடுதலாகம்.
குரூப் போட்டிகளுடன் விடைபெறும் 16 அணிகளுக்கு தலா 80 லட்சம் டாலர் பரிசுத் தொகையாக தரப்படும்.
ரவுண்ட் 16 வரை வந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 90 லட்சம் டாலர் பரிசாக தரப்படும்.
காலிறுதிப் போட்டிகள் வரை வந்து வெளியேறும் 4 அணிகளுக்கு தலா 1.4 கோடி டாலர் பரிசாக கிடைக்கும்.
4வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 2 கோடி டாலர் பரிசாக கிடைக்கும். 3வது இடம் பிடிக்கும் அணிக்கு 2.2 கோடி டாலர் பரிசாக கிடைக்கும்.
கோப்பையை வெல்லும் அணிக்கு 3.5 கோடி டாலர் பரிசுத் தொகை கிடைக்கும். 2வது இடம் பெறும் அணிக்கு 2.5 கோடி டாலர் பரிசாக கிடைக்கும்.
ரியோடிடி ஜெனீரோ, பிரேசிலியா, சாவோ பாலோ, போர்டாலெஸா, பெலோ ஹாரிசான்டே, சால்வடார், போர்டோ அல்கெரே, ரெசிபி, குயாபா, மனாஸ், நடால், கரிடிபா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும்.
ஏ, பி,சி, டி, இ, எப், ஜி, எச் என மொத்தம் 8 குரூப்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் போட்டியை நடத்தும் பிரேசில், குரோஷியா, மெக்ஸிகோ, காமரூன் ஆகியவை உள்ளன.
பி பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா ஆகியவை வருகின்றன.
சி பிரிவில் கொலம்பியா, கிரீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான் ஆகியவை உள்ளன.
டி பிரிவில் உருகுவே, கோஸ்டா ரிகா, இங்கிலாந்து, உருகுவே ஆகிய அணிகள் உள்ளன.
இ பிரிவில் சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோண்டுராஸ் ஆகியவை வருகின்றன.
எப் பிரிவில் அர்ஜென்டினா, போஸ்னியா ஹெர்ஸகோவினா, ஈரான், நைஜீரியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஜி பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா ஆகியவை உள்ளன.
எச் பிரிவில் பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷ்யா, தென் கொரியா ஆகிய அணிகள் உள்ளன.
காலிறுதிப் போட்டிகள் ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு அரை இறுதிப் போட்டிகளும் நடைபெறும்.
3வது இடத்துக்கான போட்டி ஜூலை 12ம் தேதி நடைபெறும்.
ஜூலை 13ம் தேதி கோப்பையைப் பெறப் போகும் அணியை இறுதி செய்யும் இறுதிப் போட்டி நடைபெறும்.
கடந்த 201ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்பெயின் அணி அபாரமாக ஆடி கோப்பையைக் கைப்பற்றியது. 2வது இடத்தை நெதர்லாந்தும், 3வது இடத்தை ஜெர்மனியும், 4வது இடத்தை உருகுவேயும் கைப்பற்றின. இந்த முறை கோப்பையை வெல்லப் போவது யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
 -   
          
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
 -   
          
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
 -   
          
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
 -   
          
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 -   
          
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
 -   
          
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
 -   
          
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
03 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் மானியம் நிறுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதியடைந்து வருகின்றனர்.
 -   
          
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
 -   
          
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 -   
          
பீகாரில் பேசியதை தமிழகத்தில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
03 Nov 2025தர்மபுரி, பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 -   
          
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
 -   
          
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
 -   
          
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
 -   
          
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 -   
          
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
 -   
          
அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது: இந்தியாவுடன் வர்த்தக உறவு மேற்கொள்ள கனடா திட்டம்
03 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது என்று நிலைப்பாட்டை அடுத்து இந்தியாவுடன் வர்த்தக உறவு குறித்து கனடா பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
 -   
          
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 -   
          
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
 -   
          
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
 -   
          
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
 -   
          
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
 -   
          
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
 


