எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, ஜூலை 7 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. பாராளுமன்றம் இன்று கூடுகிறது. நாளை ரயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. 9ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு மற்றும் மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என 45 பேர் பதவியேற்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் பதவியேற்றுக் கொண்டனர். சபாநாயகராக சுமித்ரா மகாஜன் பதவியேற்றார்.
இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. அதாவது பாராளுமன்றம் இன்று கூடுகிறது. நாளை 8ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்கிறார். ஆனால் அதற்கு முன்பே பயணிகள் கட்டணமும், சரக்கு கட்டணமும் உயர்த்தப்பட்டு விட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே.
நாளை மறுநாள் பாராளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பிறகு 10ம் தேதி இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே ஆலோசனைகளை நடத்தி உள்ளார். இந்த பட்ஜெட் மூலம் மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு சலுகை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் கடுமையான வரி விதிப்புகளும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத் தொடரில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சியினர் குரல் எழுப்புவார்கள் என்று தெரிகிறது. இதனால் பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில்,
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 28 நாட்கள் நடைபெறும். அவையின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் சபையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்த போது பாராளுமன்றத்தை பல கட்டங்களில் செயல்பட விடாமல் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் இப்போது சபையின் கண்ணியத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்கிறார் வெங்கையா நாயுடு.
அவர் மேலும் கூறுகையில், நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஈராக்கில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்வார். தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா, ஆந்திர மறு சீரமைப்பு திருத்த மசோதா ஆகியவை பார்லியில் தாக்கல் செய்யப்படும் என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.
பாராளுமன்றம் இன்று கூடும் நிலையில் சபையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூட்டினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல், இ. கம்யூனிஸ்டு, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வு, ரயில் கட்டண உயர்வு, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் முக்கியமாக விவாதிக்க வேண்டும் என்று இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அனைத்து கட்சி கூட்டம் சுமூகமாக நடைபெற்றது. அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள். அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில்,
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். மக்களவையில் பின் வரிசையில் நின்று பேசுபவரை முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களும் காணும் வகையில் ஒளித்திரை அமைக்கப்படும். இது ஒரு புது முயற்சி என்று கூறினார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. 54 உறுப்பினர்கள் இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். ஆனால் காங்கிரசுக்கு 44 எம்.பி.க்களே உள்ளனர். இருந்தாலும் தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வேண்டும் என்கிறார்கள் காங்கிரசார். இல்லாவிட்டால் வழக்கு போடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். இந்த பிரச்சினை எப்படி முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-07-2025.
16 Jul 2025 -
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி'
16 Jul 2025சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்திருக்கும்
-
டிஜே அருணாச்சலம் நடிக்கும் உசுரே
16 Jul 2025ஸ்ரீகிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் உசுரே படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
டிராகன் நூறாவது நாள் வெற்றி விழா
16 Jul 2025ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், நடிப்பில் வெளியான படம் டிராகன் திரைப்படம் நூறாவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
-
உருட்டு உருட்டு' பட இசை வெளியீட்டு விழா
16 Jul 2025ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ், சாய் காவியா மற்றும் சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் உருட
-
AI தொழில்நுட்பத்தில் பன் பட்டர் ஜாம்
16 Jul 2025பன் பட்டர் ஜாம் படத்தின் Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். Veo3 AI என்பது, இயற்கையான தோற்றம் மற்றும் சினிமா தரம் கொண்ட வீடியோக்களை உருவாக்க
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
வள்ளிமலை வேலன் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025எம் என் ஆர் பிக்சர்ஸ், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.
-
ஜென்ம நட்சத்திரம் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன் தயாரிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜென்ம நட்சத்திரம்.
-
துருவ் சர்ஜா நடிக்கும் 'கே.டி-தி டெவில்'
16 Jul 2025துருவ் சர்ஜா நடிப்பில் இயக்குநர் பிரேம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கே.டி.
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
மீனாட்சி ஆனந்த் தயாரிக்கும் 'டிரெண்டிங்'
16 Jul 2025ராம் ஃபிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், சிவராஜ் இயக்கத்தில், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’டிரெண்டிங்’.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை
16 Jul 2025வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ம
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
'ஃப்ரீடம்' திரைவிமர்சனம்
16 Jul 2025சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் 1991 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
-
பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு: நொடி பொழுதில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்
16 Jul 2025பாட்னா : பாட்னாவில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
'தேசிங்குராஜா-2' திரைவிமர்சனம்
16 Jul 2025காவல் ஆணையராக இருக்கும் விமல், குற்றவாளிகளுக்கு துணை போவதோடு காவல்துறைக்கே களங்கமாக இருக்கிறார். அவரது நண்பரான ரவுடி ஜனா, அமைச்சர் மகனை கொல்லப்போவதாக சவால் விடுகிறார்.