LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, ஜூலை 7 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. பாராளுமன்றம் இன்று கூடுகிறது. நாளை ரயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. 9ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு மற்றும் மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என 45 பேர் பதவியேற்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் பதவியேற்றுக் கொண்டனர். சபாநாயகராக சுமித்ரா மகாஜன் பதவியேற்றார்.
இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. அதாவது பாராளுமன்றம் இன்று கூடுகிறது. நாளை 8ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்கிறார். ஆனால் அதற்கு முன்பே பயணிகள் கட்டணமும், சரக்கு கட்டணமும் உயர்த்தப்பட்டு விட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே.
நாளை மறுநாள் பாராளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பிறகு 10ம் தேதி இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே ஆலோசனைகளை நடத்தி உள்ளார். இந்த பட்ஜெட் மூலம் மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு சலுகை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் கடுமையான வரி விதிப்புகளும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத் தொடரில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சியினர் குரல் எழுப்புவார்கள் என்று தெரிகிறது. இதனால் பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில்,
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 28 நாட்கள் நடைபெறும். அவையின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் சபையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்த போது பாராளுமன்றத்தை பல கட்டங்களில் செயல்பட விடாமல் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் இப்போது சபையின் கண்ணியத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்கிறார் வெங்கையா நாயுடு.
அவர் மேலும் கூறுகையில், நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஈராக்கில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்வார். தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா, ஆந்திர மறு சீரமைப்பு திருத்த மசோதா ஆகியவை பார்லியில் தாக்கல் செய்யப்படும் என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.
பாராளுமன்றம் இன்று கூடும் நிலையில் சபையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூட்டினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல், இ. கம்யூனிஸ்டு, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வு, ரயில் கட்டண உயர்வு, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் முக்கியமாக விவாதிக்க வேண்டும் என்று இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அனைத்து கட்சி கூட்டம் சுமூகமாக நடைபெற்றது. அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள். அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில்,
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். மக்களவையில் பின் வரிசையில் நின்று பேசுபவரை முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களும் காணும் வகையில் ஒளித்திரை அமைக்கப்படும். இது ஒரு புது முயற்சி என்று கூறினார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. 54 உறுப்பினர்கள் இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். ஆனால் காங்கிரசுக்கு 44 எம்.பி.க்களே உள்ளனர். இருந்தாலும் தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வேண்டும் என்கிறார்கள் காங்கிரசார். இல்லாவிட்டால் வழக்கு போடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். இந்த பிரச்சினை எப்படி முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 18 hours 24 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 14 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 17 hours ago |
-
7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை
17 Aug 2022பெய்ஜிங் : அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
-
50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் குழு
17 Aug 2022லாஸ் ஏஸ்சல்ஸ் : 1973-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது.
-
2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை : சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியீடு
17 Aug 2022லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
-
புதிதாக 9,062 பேருக்கு தொற்று: இந்தியாவில் சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
17 Aug 2022இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
-
இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகை: ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு
17 Aug 2022இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகையை முன்னிட்டு தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
-
கென்ய அதிபர் தேர்தலில் வில்லியம் ரூட்டோ வெற்றி: வன்முறை வெடித்ததால் பதற்றம்
17 Aug 2022கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
-
ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்தது : டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
17 Aug 2022புதுடெல்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
-
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு
17 Aug 2022வாஷிங்டன் : நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
-
3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் : கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு
17 Aug 2022சென்னை : 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
-
அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
17 Aug 2022சென்னை : அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
யோகி ஆதித்யநாத்துக்கு இடமில்லை: பா.ஜ.க. பாராளுமன்ற குழுவிலிருந்து நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் விடுவிப்பு
17 Aug 2022பா.ஜ.க.வில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
உடல்நலம் குறித்து சோனியாவிடம் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
17 Aug 2022புதுடெல்லி : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
-
சசிகலா புரடக்சன்ஸ் வெளியிடும் 3 புதிய படங்கள்
17 Aug 2022சினிமா தயாரிப்பு நிறுவனமான சசிகலா புரடக்சன்ஸின் துவக்கவிழாவும், இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புது
-
2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
17 Aug 20222-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: 16 கண் பால மதகுகள் மூடல்
17 Aug 2022மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்ததால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மூடப்பட்டது.
-
உலகின் ஆறு சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு தேர்வு
17 Aug 2022பெங்களூரு : உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.
-
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த வெற்றி: ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் பேட்டி
17 Aug 2022அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.
-
எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படி இருக்கும் : ஓ.பி.எஸ். பேட்டி
17 Aug 2022சென்னை : எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
17 Aug 2022சென்னை : இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரின் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
-
அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு
17 Aug 2022வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இலங்கையில் அவசரநிலை நீட்டிக்கப்பட மாட்டாது : அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
17 Aug 2022கொழும்பு : இலங்கையில் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்கட்டமாக வழங்க தமிழக அரசு திட்டம்: 2.50 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை
17 Aug 2022முதல்கட்டமாக 2.50 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஜோபைடனின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
17 Aug 2022வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
-
செஸ் போட்டி: முதல் சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி
17 Aug 2022சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
-
கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Aug 2022கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.