எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை 7 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. பாராளுமன்றம் இன்று கூடுகிறது. நாளை ரயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. 9ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு மற்றும் மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என 45 பேர் பதவியேற்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் பதவியேற்றுக் கொண்டனர். சபாநாயகராக சுமித்ரா மகாஜன் பதவியேற்றார்.
இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. அதாவது பாராளுமன்றம் இன்று கூடுகிறது. நாளை 8ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்கிறார். ஆனால் அதற்கு முன்பே பயணிகள் கட்டணமும், சரக்கு கட்டணமும் உயர்த்தப்பட்டு விட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே.
நாளை மறுநாள் பாராளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பிறகு 10ம் தேதி இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே ஆலோசனைகளை நடத்தி உள்ளார். இந்த பட்ஜெட் மூலம் மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு சலுகை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் கடுமையான வரி விதிப்புகளும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத் தொடரில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சியினர் குரல் எழுப்புவார்கள் என்று தெரிகிறது. இதனால் பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில்,
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 28 நாட்கள் நடைபெறும். அவையின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் சபையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்த போது பாராளுமன்றத்தை பல கட்டங்களில் செயல்பட விடாமல் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் இப்போது சபையின் கண்ணியத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்கிறார் வெங்கையா நாயுடு.
அவர் மேலும் கூறுகையில், நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஈராக்கில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்வார். தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா, ஆந்திர மறு சீரமைப்பு திருத்த மசோதா ஆகியவை பார்லியில் தாக்கல் செய்யப்படும் என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.
பாராளுமன்றம் இன்று கூடும் நிலையில் சபையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூட்டினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல், இ. கம்யூனிஸ்டு, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வு, ரயில் கட்டண உயர்வு, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் முக்கியமாக விவாதிக்க வேண்டும் என்று இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அனைத்து கட்சி கூட்டம் சுமூகமாக நடைபெற்றது. அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள். அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில்,
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். மக்களவையில் பின் வரிசையில் நின்று பேசுபவரை முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களும் காணும் வகையில் ஒளித்திரை அமைக்கப்படும். இது ஒரு புது முயற்சி என்று கூறினார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. 54 உறுப்பினர்கள் இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். ஆனால் காங்கிரசுக்கு 44 எம்.பி.க்களே உள்ளனர். இருந்தாலும் தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வேண்டும் என்கிறார்கள் காங்கிரசார். இல்லாவிட்டால் வழக்கு போடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். இந்த பிரச்சினை எப்படி முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க