எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை 8 - பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. சுமார் ஒரு மாதம் இந்த கூட்டத் தொடர் நடைபெறும். இன்று ரயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டுக்கான தயாரிப்பு பணிகள் அனைத்தையும் ரயில்வே மந்திரி முடித்து விட்டார். பயணிகள் ரயில் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம், புறநகர் ரயில் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. எனவே இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்களை உயர்த்த வாய்ப்பு இல்லை.
ரயில்வே பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் புதிய திட்டங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அறிவிப்புகள் வெளியாகும். பெரும்பாலான ரயில் விபத்துக்களுக்கு ரயில் தண்டவாள விரிசல் காரணமாக கூறப்படுகிறது. எனவே ரயில் தண்டவாளங்கள் விரிசலை தடுக்க நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தும் திட்டம் இன்று வெளியாகலாம்.
பயணிகள் பாதுகாப்புக்கான ரயில்வே குழு பல்வேறு வகை ஆய்வுகளை நடத்தி ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் புதிய தண்டவாளங்கள் அமைக்கவும், ஆள் இல்லாத ரயில்வே கேட்டுகளை அகற்றுவது உள்பட பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு பயணிகள் பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த அந்த நிபுணர் குழு ஆலோசனை கூறியுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
சில வழித்தடங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அத்தகைய வழித்தடங்களை கண்டுபிடித்து அவற்றில் விரிசல்களை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் எக்ஸ்ரே கருவிகள் பொருத்துவது பற்றிய புதிய திட்டமும் இன்று அறிவிக்கப்படுகிறது. மழை, வெயில் காலங்களில் ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் மாற்றத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் விசேஷ கருவிகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் திட்டமும் வரவுள்ளது. இவை தவிர பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகள் அளிக்கும் அறிவிப்புகளும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ரயில்களை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. முதல் கட்டமாக முக்கிய ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளது. விமான நிலையங்களுக்கு இணையாக ரயில் நிலையங்களில் புதுமைகள் கொண்டு வர ஆய்வு நடந்து வருகிறது. பிளாட்பாரங்களில் எல்லா நவீன வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 163 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.
ரயில்வே வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையிலான அறிவிப்புகளும் இன்று வரவுள்ளது. பெரும்பாலான ரயில் நிலையங்கள் அருகில் உள்ள இடங்கள் காலியாக சும்மா கிடக்கின்றன. அந்த காலி இடங்களை தனியார்களுக்கு வாடகைக்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது போல பிளாட்பார காலி இடங்களில் கூடுதல் கடைகளை கொண்டு வரும் திட்டமும் உள்ளது. இவை தவிர ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளிலும் தனியார் முதலீட்டை அதிகரிக்க செய்யும் திட்டங்களும் இன்று அறிவிக்கப்படவுள்ளன.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்கள் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. டிக்கெட் பயண நிலை பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் பயணிகளுக்கு தகவல் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு கட்டண வருமானம் உயர்த்தும் திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ளது. சரக்குகளை எடுத்து செல்ல இனி பெரிய ரயில் பெட்டிகள் பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. சரக்கு போக்குவரத்தில் மேலும் 17 வகை பொருட்கள் கொண்டு செல்லும் அனுமதியும் இந்த பட்ஜெட்டில் வரவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.