எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, ஜூலை 8 - பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. சுமார் ஒரு மாதம் இந்த கூட்டத் தொடர் நடைபெறும். இன்று ரயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டுக்கான தயாரிப்பு பணிகள் அனைத்தையும் ரயில்வே மந்திரி முடித்து விட்டார். பயணிகள் ரயில் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம், புறநகர் ரயில் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. எனவே இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்களை உயர்த்த வாய்ப்பு இல்லை.
ரயில்வே பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் புதிய திட்டங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அறிவிப்புகள் வெளியாகும். பெரும்பாலான ரயில் விபத்துக்களுக்கு ரயில் தண்டவாள விரிசல் காரணமாக கூறப்படுகிறது. எனவே ரயில் தண்டவாளங்கள் விரிசலை தடுக்க நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தும் திட்டம் இன்று வெளியாகலாம்.
பயணிகள் பாதுகாப்புக்கான ரயில்வே குழு பல்வேறு வகை ஆய்வுகளை நடத்தி ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் புதிய தண்டவாளங்கள் அமைக்கவும், ஆள் இல்லாத ரயில்வே கேட்டுகளை அகற்றுவது உள்பட பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு பயணிகள் பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த அந்த நிபுணர் குழு ஆலோசனை கூறியுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
சில வழித்தடங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அத்தகைய வழித்தடங்களை கண்டுபிடித்து அவற்றில் விரிசல்களை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் எக்ஸ்ரே கருவிகள் பொருத்துவது பற்றிய புதிய திட்டமும் இன்று அறிவிக்கப்படுகிறது. மழை, வெயில் காலங்களில் ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் மாற்றத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் விசேஷ கருவிகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் திட்டமும் வரவுள்ளது. இவை தவிர பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகள் அளிக்கும் அறிவிப்புகளும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ரயில்களை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. முதல் கட்டமாக முக்கிய ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளது. விமான நிலையங்களுக்கு இணையாக ரயில் நிலையங்களில் புதுமைகள் கொண்டு வர ஆய்வு நடந்து வருகிறது. பிளாட்பாரங்களில் எல்லா நவீன வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 163 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.
ரயில்வே வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையிலான அறிவிப்புகளும் இன்று வரவுள்ளது. பெரும்பாலான ரயில் நிலையங்கள் அருகில் உள்ள இடங்கள் காலியாக சும்மா கிடக்கின்றன. அந்த காலி இடங்களை தனியார்களுக்கு வாடகைக்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது போல பிளாட்பார காலி இடங்களில் கூடுதல் கடைகளை கொண்டு வரும் திட்டமும் உள்ளது. இவை தவிர ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளிலும் தனியார் முதலீட்டை அதிகரிக்க செய்யும் திட்டங்களும் இன்று அறிவிக்கப்படவுள்ளன.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்கள் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. டிக்கெட் பயண நிலை பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் பயணிகளுக்கு தகவல் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு கட்டண வருமானம் உயர்த்தும் திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ளது. சரக்குகளை எடுத்து செல்ல இனி பெரிய ரயில் பெட்டிகள் பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. சரக்கு போக்குவரத்தில் மேலும் 17 வகை பொருட்கள் கொண்டு செல்லும் அனுமதியும் இந்த பட்ஜெட்டில் வரவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
பகல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
02 Jul 2025வாஷிங்டன், குவாட் அமைப்பு மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
02 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
-
முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா
02 Jul 2025புதுடெல்லி : இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக இந்த மாதத்திற்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியா வரவுள்ளன.
-
நியூயார்க் : அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
02 Jul 2025அமெரிக்காவில் உள்ள இஸ்கான் கோவில் மீது துப்பாக்கி சூடு சம்பம்: இந்தியா கண்டனம்
-
வெய்ன் லார்கின்ஸ் நினைவுதினம்: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா - இங்கிலாந்து அணி வீரர்கள்
02 Jul 2025பர்மிங்காம் : வெய்ன் லார்கின்ஸ் நினைவுதினத்தை முன்னிட்டு 2-வது டெஸ்டி போட்டியிலும் இந்தியா- இங்கிலாந்து அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
-
வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு: அமெரிக்க அரசு முடிவு
02 Jul 2025நியூயார்க், அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
-
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்தினருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆறுதல்
02 Jul 2025சிவகங்கை : போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித்குமார் வீட்டிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சென்றார். அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தி
-
திருப்புவனம் இளைஞர் மரணம்: ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு
02 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் மரணத்தில் தொடர்புடைய ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன.
-
2-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, குல்தீப் நீக்கம் ஏன்..? - கேப்டன் சுப்மன் கில் பதில்
02 Jul 2025பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பும்ரா, குல்தீப் இடம் பெறாதது குறித்து கேப்டன்
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
அஜித்குமார் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க திருமாவளவன் வலியுறுத்தல்
03 Jul 2025சென்னை, போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும், ''என விடுதலை சிறுத்தைகள் கட்சியி
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.