முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல்: 5,300 ரயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை

புதன்கிழமை, 9 ஜூலை 2014      வர்த்தகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.10 - கடந்த ஆண்டு ஊழல் புகாரில் சிக்கிய 5,300 ரயில்வே ஊழியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட 23,362 அதிரடி சோதனைகளில் 77 உயர் அதிகாரிகள் உள்பட 5,297 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதில் வடக்கு ரயில்வேயில் 1,391 பேர், தெற்கு ரயில்வேயில் 545 பேர், மேர்கு ரயில்வேயில் 723 பேர், கிழக்கு மத்திய ரயில்வேயில் 292 பேர், மத்திய ரயில்வேயில் 339 பேர், கிழக்கு ரயில்வேயில் 282 பேர், வட கிழக்கு ரயில்வேயில் 272 பேர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில்வே துறையில் நாடு முழுவதும் உள்ள 16 மண்டலங்களில் 13.1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்