எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லார்ட்ஸ், ஜூலை - 22 - நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 223 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
23 ஓவர்கள் 6 மைடன்கள், 74 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி. தன் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சைச் சாதித்தார் இஷாந்த் சர்மா. இவரது இந்த ஆவேசப்பந்து வீச்சினால் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது. 1986ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் சேத்தன் சர்மாவின் ஆக்ரோஷத்திற்கு தோல்வி கண்ட இங்கிலாந்து இப்போது மற்றொரு சர்மாவிடம் வீழ்ச்சி கண்டது. 50 ரன்களில் கடைசி 6 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.
நேற்று நடந்த ஆட்டத்தில் 105/4 என்று துவங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மென்களான ஜோ ரூட், மற்றும் மொயீன் அலி இந்தியாவுக்கு சில நெருக்கடியான தருணங்களைக் கொடுத்தனர். அலியும், ஜோ ரூட்டும் இணைந்து 5வது விக்கெட்டுகளுக்கு 101 ரன்களைச் சேர்த்தனர். இஷாந்த் சர்மா துவக்கத்தில் ஆஃப் வாலி பந்துகளாக வீச சில பவுண்டரிகளை விளாசினர். ஆட்டம் உணவு இடைவேளையை நெருங்கிய தருணத்தில் ஏதாவது விக்கெட் விழுமா என்று தோனி எதிர்பார்த்த தருணத்தில் தொடங்கியது இஷாந்த்தின் முதல் பவுன்சர் விக்கெட்.
இஷாந்த் சர்மா வீசிய பந்து ஒன்று ஆக்ரோஷமாக எழும்ப பந்திலிருந்து கண்களை எடுத்து விட்டார் மொயின் அலி பந்து கிளவ்வில் பட்டு ஷாட் லெக்கில் புஜாராவிடம் கேட்ச் ஆனது. உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 173/5. என்று இருந்தது. ஜோ ரூட் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். மொயீன் அலி 147 பந்துகள் போராடி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இஷாந்த்தின் ஆவேசம் இந்தியாவுக்கு ஒரு அரிய அயல்நாட்டு வெற்றியை ஈட்டித் தந்தது.
பின்னர் பிரையர் களமிறங்கியவுடன் ஷாட் பிட்ச் பவுன்சர் தாக்குதலைத் தொடர்ந்தார் இஷாந்த், ஆனால் பிரையர் 2 பவுண்டரிகளை விளாசி 12 ரன்கள் எடுத்திருந்தபோது தோனி 2 ஃபீல்டர்களை டீப் ஸ்கொயர் லெக் மற்றும் மிட்விக்கெட்டிற்குக் கொண்டு சென்றார். மீண்டும் பவுன்சர் புல் ஆடினார் மேட் பிரையர் பந்து நேராக முரளி விஜய்யிடம் கேட்ச் ஆனது.
அடுத்ததாக ஆட்டத்தின் 82வது ஓவரின் 2வது பந்தில் ஸ்டோக்ஸ் மீண்டும் இஷாந்த் சர்மாவின் ஷாட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்றார். பந்து சரியாக மட்டையில் சிக்காமல் புஜாராவிடம் கேட்ச் ஆனது. ஸ்டோக்ஸ் ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.
அடுத்ததாக 66 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட், அதே ஓவரின் 5வது பந்தில் இன்னொரு இஷாந்த் ஷாட் பிட்ச் பந்தை புல் ஆடினார். பந்து நேராக மிட்விக்கெட்டில் ஸ்டூவர்ட் பின்னி கையில் கேட்ச் ஆனதால் கடும் அதிருப்தியுடன் அவர் வெளியேறினார்.
ஸ்டூவர்ட் பிராடிற்கு ஒரு ஓவர் முழுதும் பவுன்சராகவே வீசினார், இஷாந்த், இதில் ஒரு பந்து அவரையறியாமல் கை கிளவ்வில் பட்டு லெக் திசையில் பவுண்டரி ஆனது. அதே ஓவரில் மீண்டும் ஒரு பவுன்சர் லெக் திசையைக் குறிவைக்க பிராட் தொட்டார், தோனி அருமையாக அதனை லெக் திசையில் பிடித்தார். இஷாந்த் சர்மா 7 விக்கெட்டுகள்.
கடைசியாக ஆண்டர்சன், ஜடேஜா ஓவரில் ஒரு பந்தை சற்றே அருகில் ஆஃப் திசையில் தள்ளி விட்டு ஒரு ரன் எடுக்க ஓடி வந்தார். பிளன்கெட் வாளாயிருந்தார். ஜடேஜாவே ஓடிச் சென்று பந்தை எடுத்து நேராக ஸ்டம்பில் அடித்தார் ஆண்டர்சன் ரன் அவுட் ஆனார். ஆண்டர்சனைத் தன் கையால் ரன் அவுட் செய்ததை ஜடேஜா கொண்டாடினார்.
தோனி வழக்கம்போல் ஒரு ஸ்டம்பைக் கையில் எடுத்துக் கொண்டார். இங்கிலாந்து 88.2 ஓவர்களில் 223 ரன்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்ஸில் அஜின்கியா ரஹானேயின் அபாரமான சதம் பிறகு புவனேஷ் குமாரின் அயராத பந்து வீச்சு, பிறகு 2வது இன்னிங்ஸில் முரளி விஜய், புவனேஷ் குமார், ஜடேஜா ஆகியோரது பேட்டிங், கடைசியாக இஷாந்த் சர்மாவின் ஆவேசம் என்று ஒரு அணியாக இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு ஒரு அரிய வெற்றியை இங்கிலாந்தில் சாதித்துள்ளது. ஆட்டநாயகனாக இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.இந்தியாவின் இந்த வெற்றிக்கு 7 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா, 2வது இன்னிங்ஸில் 68 ரன்களைக் குவித்து, 3 விக்கெட்களைச் சாய்த்த ஜடேஜா, 52 ரன்கள் குவித்து, 6 விக்கெட்களையும் சாய்த்த புவனேஸ் குமார் ஆகியோர்தான் முக்கியக் காரணம். அதேபோல 95 ரன்கள் குவித்த முரளி விஜய்யும் பாராட்டுக்குரியவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.