முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாக்., பயங்கர தாக்குதல்: ஒருவர் பலி

புதன்கிழமை, 8 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, அக்.09 - எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பெண் பலியானார், 11 பேர் காயமடைந்தனர்.

நேற்று காலை, ஜம்முவின் சம்பா, குத்வா மாவட்டங்களில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்திய நிலைகளை குறிவைத்து அவர்கள் சரமாரியாக நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார். ராணுவ வீரர்கள் 4 பேர், எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில்: "பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர், எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர், கிராம மக்கள் 11 பேர் காயமடைந்துள்ளனர். கத்துவா மாவட்டம், ஹிரா நகர் பகுதியிலும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்" என்றார்.

அக்டோபர் 6-ம் தேதி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், 5 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் பாகிஸ்தான் இந்தியா மீதான அத்துமீறல்களை அதிகரித்துள்ளது. 8 நாட்களில் 18 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்