எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லாகூர், அக்.10 - பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் கிலானியின் மகன் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் முன்னாள் பிரதமர் யூசுப் கிலானி உட்பட பல்வேறு மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், தாஹிர் மாலிக், என்ற வாலிபர், முன்னாள் பிரதமர் யூசுப் கிலானியின் வீட்டுக்கு அருகே விஐபி பகுதியில் மோட்டார் சைக்கிளில், சென்றார். அப்போது யூசுப் கிலானியின் மூத்த மகன் அப்துல் காதிர் உட்பட 5 பாதுகாவலர்கள் தாஹிரை தடுத்தனர். கிலானியின் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தெருவுக்கு செல்ல வேண்டும் என்று தாஹிர் கூறினார்.
அவரை திரும்பி போகுமாறு பாதுகாவலர்கள் எச்சரித்தனர். அதை தாஹிர் பொருட்படுத்தவில்லை. தடையை மீறி செல்ல முயன்ற போது அவரை பாதுகாவலர்கள் சுட்டனர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாஹிரின் தந்தை தன்வீர் ஜாவேத் போலீசில் புகார் செய்தார். யூசுப் கிலானியின் வீட்டின் முன் இறந்துபோன மகனின் உடலை வைத்து தன்வீர் ஜாவேத் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விஐபி கலாசாரத்துக்கு எதிரான போர் என்று தெக்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும் ஆதரித்தார். இதைத் தொடர்ந்து விஐபி பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கையும் தராமல், அப்பகுதி சாலை வழியே சென்ற ஒருவரை சுட்டு கொன்றது தீவிரவாத செயல்பாடுகளில் ஒன்றாகும்.
இது தொடர்பாக முன்னாள் பிரதமர் யூசுப் கிலானியின் மகன் அப்துல் காதிர் உட்பட 5 பாதுகாவலர்கள் மீது கொலை மற்றும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்துல் காதிர் கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


