முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூக்கி வீசி குழந்தையை கொன்றவருக்கு மரண தண்டனை

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பீஜிங், நவ.04 - சீ னாவை சேர்ந்தவர் ஹன்லேய். குடிபோதையில் இருந்த இவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் பெண் ஒருவர் கார் ஓட்டி சென்றார். காரில் அவருடைய பச்சிளம் குழந்தையை வைத்திருந்தார். அப்போது ஹன்லேய் அந்த பெண்ணிடம் தன்னுடைய காருக்கு வழிவிடுமாறு ஹாரன் அடித்தார். ஆனால் அந்த பெண் வழிவிட மறுத்தார். இதனால் கோபம் அடைந்த ஹன்லேய் அந்த பெண்ணிடம் சென்று தகராறு செய்தார். அதில் ஆத்திரமடைந்த அவர் அந்த பெண்ணின் குழந்தையை தரையில் தூக்கி வீசினார். இதில் குழந்தை படுகாயமடைந்து இறந்தது. ஹன்லேய் கைது செய்யப்பட்டார். அவருக்கு கோர்ட் மரண தண்டனை விதித்தது. இது தொடர்பாக அவர் கோர்ட்டில் கூ றும் போது, காரில் இருந்த பொட்டலத்தை நான் வெளியே தூ க்கி வீசினேன். அதற்குள் கு ழநஅதை இருந்தது எனக்கு தெரியாது என்றார். ஆனால் அவரது விளக்கத்தை கோர்ட் ஏற்கவில்லை. ஹன்லேய்க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்