முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரி செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - அதிமுக மாவட்ட,நகர , ஒன்றிய அளவில் புதிய மாற்றங்களை செய்து அக்கட்சியின் பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கிழக்கு மற்றும் மேற்கு என செயல்பட்டு வந்த கன்னியா குமரி மாவட்ட அதிமுக ஒன்றாக இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மாவட்ட, நகர ஒன்றிய அளவில் தொகுதிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நிர்வாக வசதிக்காக இத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மற்றும் மேற்கு என இருபிரிவாக செயல்பட்டு வந்த கன்னியாகுமரி மாவட்ட அதிமுக இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்

3 மாவட்டங்களாக செயல்பட்டு வந்த வேலூர் மாவட்டம், இரண்டாகவும்,சேலம், திருப்பூர், ஈரோடு கோவை , காஞ்சிபுரம்,கரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட நகர ஒன்றிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொகுதி வாரியாகவும் ஒன்றியங்கள் வாரியாகவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே திருச்செந்தூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்