முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான வானிலை விமானங்கள் ரத்து: பயணிகள் தவிப்பு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - ஐதராபாத்தில் பலத்த மழை காரணமாக சென்னையில் இருந்து செல்லக்கூடிய தனியார் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஐதராபாத்தில் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்ததால் மோசமான வானிலை காணப்பட்டது.இதனால் துபாயில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்ற எமிரேட்ஸ் விமானம் அங்கு தரை இறங்க முடியாத நிலை ஏற்பட்டது.262 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தை சென்னைக்கு திருப்பி கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து எமிரேட்ஸ் விமானம் சென்னையில் அதிகாலை 4.30 மணிக்கு தரை இறங்கியது.ஐதராபாத்தில் சீரான வானிலை ஏற்பட்ட பின்னர் காலை 7.30 மணிக்கு அந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து நேற்று காலை ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா செல்லக்கூடிய 3 தனியார் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதில் பயணம் செய்ய தயாராக இருந்த 450 பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.இதே போல சென்னையில் இருந்து நேற்று காலை மும்பை செல்லக்கூடிய ஏர்–இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.பயணம் செய்ய காத்திருந்த 17 பயணிகள் டெல்லி செல்லக்கூடிய விமானத்தில் ஏற்றி அனுப்பி விடப்பட்டனர். அந்த விமானம் மும்பை சென்று பின்னர் அங்கிருந்து டெல்லி போய் சேர்ந்தது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து