எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை
மக்களின் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட இடைவிடாத தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவே இலங்கை யில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் தமிழ்நாட்டில்உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்க முற்பட்டிருப்பது குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர்களின் நலன் மற்றும் தமிழர் வாழ்வின் வளம் ஆகியவற்றுக்காக இடையறாது பாடுபட்டு வருபவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க பலப்பல புதுமைத் திட்டங்களை வடிவமைத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் முறை ஆட்சிப் பொறுப்பை ஏற்ற புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்கள் சிறப்புற பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியுள்ளார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு இந்தத் திட்டங்களை தொடர்ந்து செம்மையாக செயல்படுத்தி வருகிறது.
மிகவும் பழமை வாய்ந்த தொழில்களில் ஒன்றான மீன்பிடித் தொழில் மூலம் உயர்தர புரதச் சத்துடன் கூடிய தரமான உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டுவதிலும் தமிழக மீனவர்கள் முன்னோடியாக விளங்குகிறார்கள். மீனவர்களின் நலனில் தனி அக்கறை செலுத்தி வருபவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். எனவே தான் 2011 ஆம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற அன்றே மீனவர்களின் நலன் பேணும் வகையில், மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை 1000 ரூபாயை 2000 ரூபாய் என இரட்டிப்பாக்கி உத்தரவிட்டார்கள். மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் மீனவக் குடும்பங்களுக்கு 4000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் ஒரு புதிய திட்டத்தை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்தினார்கள். கடல் மீனவ மகளிருக்கு மீன்பிடி குறைவாக உள்ள காலங்களில் 2,700 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம்; கடல் மீனவர்களுக்கான நிவாரணத் திட்டத்தின் கீழ் 2700 ரூபாய் உதவித் தொகை வழங்குதல் என பல்வேறு நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிவாரணத் திட்டங்களுக்காக, ஆண்டொன்றுக்கு 166 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும், மீனவர்களுக்கான குழுக் காப்பீடுத் திட்டத்தில் 50 விழுக்காடு சந்தாத் தொகையை தமிழ்நாடு அரசு செலுத்துகிறது. இதில் 6.51 லட்சம் மீனவர்கள் பயன் பெறுகின்றனர்.
பாரம்பரிய மீன்பிடிக் கலன்களை எந்திரமயமாக்கும் வகையில் நாட்டுப் படகுகளில் இயந்திரங்கள் வாங்கிப் பொருத்துவதற்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது. மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் எந்திரமயமாக்கப்பட்ட நாட்டுப் படகுகளில் பயன்படுத்தப்படும் டீசலுக்கு விற்பனை வரி அறவே விலக்களிக்கப்பட்டுள்ளது. நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையிலான மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வீதம் மாதமொன்றிக்கு 250 லிட்டர் வழங்கப்படுகிறது.
மீனவர்கள் பிடித்து வரும் மீன்களின் தரத்தினைப் பாதுகாத்து, அவற்றின் மதிப்பினைக் கூட்டி மீனவர் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடி இறங்கு தளங்கள், மீன் பதனிடும் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் ஆற்று முகத்துவாரங்களை ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் 508 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், தொலைதூர கடல் பகுதியில் மீன் பிடிக்க ஏதுவாக புதிய சூரை மீன் படகு கட்டுவதற்கான ஆகும் உத்தேச செலவான 60 லட்சம் ரூபாயில் 50 விழுக்காடு, அதாவது 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் ஒரு உன்னதமான திட்டத்தை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினாரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம் அவர்களை மீட்க இடைவிடாத நடவடிக்கைகளை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். 2011-ஆம் ஆண்டு அஇஅதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு 56 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.
ஈரான் நாட்டுச் சிறையில் வாடிக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து தமிழகம் திரும்பிய அவர்களுக்கு புது வாழ்வு ஏற்படுத்த 2 லட்சம் ரூபாயை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழங்கினார்கள். ஒடிசா மாநிலத்தில் புயலில் சிக்கித் தவித்த 18 தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்டு அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்கள். சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 மீனவர்களை மீட்டெடுக்க மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தான். எனவே, கச்சத் தீவை தாரை வார்த்த ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்கக் கோரி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். தமிழக அரசின் வருவாய்த் துறையும் இவ்வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க இயலாமல் போனது கச்சத் தீவு ஒப்பந்தத்தினால் தான். தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டி விட்டார்கள் என சிறை பிடிக்கப்படுவதும், மீனவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதும், பாரம்பரிய மீன்பிடி உரிமையை இழந்த காரணத்தால் தான். எனவே தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அவர்கள் வழியில் செயல்படும் தமிழக அரசும், கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும், பராம்பரிய மீன்பிடி இடங்களில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்டுத் தர வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த திருவாளர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லேங்க்லெட் ஆகிய ஐந்து மீனவர்கள் கடந்த 28.11.2011 அன்று மீன்பிடி விசைப்படகில் ராமேஸ்வரம் மீன்பிடி தளத்திலிருந்து புறப்பட்டு தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
அவர்கள் மீது யாழ்ப்பாணம் மாகாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்துதல் குற்றத்திற்கான பிரிவின்கீழ் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு ஒன்றை இலங்கை அரசு தொடர்ந்தது. இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதால், கைது செய்யப்பட்ட ஐந்து அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அப்போதைய பாரதப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியதோடு, இந்த ஐந்து மீனவர்களையும் விடுவிக்க மீனவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு இலங்கையைச் சார்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமித்திடவும், அவர்களை விடுவிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவும் இராமேசுவரத்திலுள்ள நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு (ஹடடயைnஉந கடிச சுநடநயளந டிக ஐnnடிஉநவே குiளாநசஅநn கூசரளவ) மூலம் நடவடிக்கை எடுத்திட 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி 14.12.2011 அன்று ஆணையிட்டார்கள்.
தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐந்து மீனவர்களை ஜாமீனில் விடுவிக்க 21.3.2012 அன்று யாழ்ப்பாணம் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது 11.6.2012 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மீனவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு மீனவர்களின் நலன் காப்பதில் எப்போதும் முன் நிற்பவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். மீனவர்கள் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவது அஇஅதிமுக அரசு தான். இலங்கை அரசால் பொய் வழக்கு போடப்பட்ட உடனேயே, அந்தப் பொய் வழக்கினை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். இது பன்னாட்டுப் பிரச்சனை என்ற காரணத்தால், இலங்கை அரசுடன் தமிழ்நாடு அரசு நேரடியாக எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள இயலாது. இலங்கை அரசுடன் மத்திய அரசும், வெளியுறவுத் துறையும் மட்டுமே தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க இயலும். தனது இந்தத் தார்மீகக் கடமையை மத்திய அரசு செயல்படுத்திட தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களும், தமிழ்நாடு அரசும் ஆகும். அதற்கேற்ப, மத்திய அரசு செயல்பட்டு, 5 தமிழ்நாடு மீனவர்களும் விடுதலை பெற்றது மகிழ்ச்சிக்கு உரியதாகும். இந்த வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்க முற்பட்டிருப்பது வேதனை அளிக்கக்கூடியது. 5 மீனவர்களின் விடுதலைக்குத் தாங்கள் தான் காரணமென இங்கே உள்ள ஒரு சிலர் மார்தட்டிக் கொள்வது, தமிழ்நாட்டு மீனவர்களை கொச்சைப்படுத்துவது ஆகும். தங்களால் தான் இது நடைபெற்றது என்று இங்கே தமிழ்நாட்டில் கூறிக்கொள்ளும் ஒரு சிலர், கடந்த மூன்றாண்டுகளாக இது பற்றி என்ன நடவடிக்கை எடுத்தனர்? இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு உடனடியாக தாக்கல் செய்யப்பட 20 லட்சம் ரூபாய் அனுப்பும்படி இந்திய தூதரகம் கேட்ட போது, அந்தப் பணத்தை உடனடியாக அனுப்பி வைத்தது, மீனவர் நலனில் என்றும் அக்கறை செலுத்தும் அஇஅதிமுக அரசு தான். மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பினை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்தும் ஒரே இயக்கம் அஇஅதிமுக தான்; ஒரே அரசு அஇஅதிமுக அரசு தான். மீனவர்களின் நலனுக்காக எந்தவித பிரதிபலனும் எதிர்பாராது அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அரசு அஇஅதிமுக அரசு தான். மீனவர்கள் எந்தவித இன்னலுக்கு ஆட்பட்டாலும், ஓடோடிச் சென்று, அவர்கள் துயர்துடைப்பதும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பேணிப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அஇஅதிமுக அரசுதான். உண்மையான மீனவ நண்பன் யார் என்பதும் தமிழ்நாடு மீனவர்களுக்கு நன்கு தெரியும். தமிழ்நாடு மீனவர்கள் நலன் காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.