முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்மீக மாதிரி நகரமாகிறது திருமலை: ஆந்திர அரசு

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி கோவிலுக்கு ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தினமும் சராசரி 50 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள்.
வார விடுமுறை மற்றும் பிரமோற்சவ காலங்களில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை பக்தர்கள் குவிகிறார்கள். தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் வருகிறது.
ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு வசதிகள்–பாதுகாப்பு அளிப்பது தேவஸ்தானத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதனால் திருமலையில் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டு உள்ளது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு என்னென்ன வசதிகள் வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டப்படுகிறது.
மொத்தம் 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட திருமலையில் கோவில் மண்டபம், மாட வீதிகள், மடங்கள், கடைகள், காட்டேஜ்கள், உள்ளூர் மக்கள் குடியிருப்புகள் என பல உள்ளது.
இதனால் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வனப்பகுதியை இணைத்து திருமலையை விரிவுபடுத்த ஆந்திர அரசு திட்டமிட்டு உள்ளது.
அவ்வாறு விரிவுபடுத்தி அனைத்து வசதிகளும் கொண்ட ஆன்மிக மாதிரி நகரியமாக (டவுன்ஷிப்) மாற்ற அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
பாதுகாப்பின் ஒரு அம்சமாக கோவிலை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட உள்ளது. அதில் சாலை வசதிகள், பார்க்கிங் வசதிகள் செய்யப்பட உள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும். வன பகுதியில் தீ விபத்தை தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
முதல் கட்டமாக இரும்பு வேலி அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து