முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தங்கத் தகடு பொருத்திய கார், பைக்கில் வலம் வரும் இளைஞன்

தங்க ஆபரணங்களை அணிவதில் பெரும்பாலானோருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. ஆனால் அதே வேளையில் உடலில் யாரும் கிலோ கணக்கில் தங்கத்தை நகைகளாக செய்து அணிந்து கொண்டு வலம் வருவதில்லை. வியட்நாமைச் சேர்ந்த 39 வயது இளைஞர் இதில் சற்று வேறு ரகம். இவர் தங்கத்தின் மீது தீராத மோகம் கொண்டவர். இவரது உடலில் இவர் அணிந்திருக்கும் தங்க நகை மட்டும் எவ்வளவு தெரியுமா 2 கிலோ.  ஆன் ஜியாங் மாகாணத்தில் வசித்து வரும் டிரான் டக் லோய் என்ற இளம் தொழில் முனைவோர்தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர்.  இவருக்கு விதவிதமான உருவங்களை தங்க ஆபரணங்களாக செய்து அணிந்து கொள்வதில் தீராத ஆர்வம் உடையவர். ஆப்பிரிக்க பல்லி, டிராகன் போன்ற பல்வேறு உருவங்களை தங்கத்தால் செய்து விரலில் மோதிரமாகவும், கழுத்தில் சங்கிலியாகவும் அணிந்துள்ளார். அது மட்டுமா, தனது காரை முழுக்க முழுக்க தங்கத் தகடுகளால்  வேய்ந்துள்ளார். காரின் டயரில் இருக்கும் இரும்பு பிளேட்களுக்கு பதிலாக தங்கத்தில் செய்து பொருத்தியுள்ளார். அது மட்டுமா தங்கத் தகடுகளால் வேயப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் இவர் வைத்துள்ளார். இதற்காக அந்நாட்டு பணத்தில் மில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளார். இதை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மில்லியன் கணக்கானோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

குளோனிங் மூலம் புதிய உயிரை உருவாக்கியவர்

இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஜான் குர்டான். இவர் தான் முதன் முதலில் குளோனிங் மூலம் புதிதாக ஒரு உயிரை உருவாக்கியவர். விலங்கியல் துறை ஆராய்ச்சியாளரான இவர் 1962ம் ஆண்டில் Xenopus என்ற தவளையின் ஸ்டெம் செல்லில் இருந்து புதிதாக ஒரு தவளையை உருவாக்கினார். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே பின்னர் டாலி என்ற ஆட்டுக் குட்டி ஸ்டெம் செல் மூலம் உருவாக்கப்பட்டது. குளோனிங் மூலம் உயிர்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய இவர் தான், உடலில் உள்ள எல்லா செல்களிலும் உள்ள ஜீன்களும் ஒரே மாதிரியானவை என்று நிரூபித்தார். எந்தவொரு செல்லை கொண்டு அந்த உயிரினத்தை குளோனிங் முறையில் திரும்ப உருவாக்கி விடலாம் என்ற அவரது ஆராய்ச்சியை கண்டு உலகமே திகைத்து நின்றது.  இதற்காக இவருக்கும் ஷின்யா யமனகாவுக்கும் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பீர்க்கங்காய் மகத்துவம்

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்.சொறி, சிரங்கு, புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, அந்த இடங்களில் வைத்துக் கட்டினால் குணமாகிவிடும்.  தோல் நோயாளிகள் இதை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைவாக குணமாகும்.

சோகத்தை வெளிப்படுத்த

ஒரு நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்புக்கு பயன்படுத்திய பேனாவை உடைத்து விடுவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது கடைபிடிக்கப்பட்டு வந்த முறைதான் இது. இதற்கு காரணம், உயிரை குடித்த நிப்பை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதற்காகவும், சோகத்தை வெளிப்படுத்தவும் இதை செய்து வந்துள்ளனர். ஆனால், நமது இந்திய சட்டப் புத்தகத்தில் எந்த இடத்திலும் மரண தண்டனை அளித்த பிறகு பேனா நிப்பை உடைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை. ஆங்கில யர்கள் ஆட்சிக் காலத்தில்தான் இந்த முறை பின்பற்றப்பட்ட து. அதற்காக நாமும் பின்பற்ற வேண்டுமா என்ன?.

'மனித மூளை' ஆச்சரியம்

கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் மனித உறுப்பு மூளைதான். மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாளம் பாளமாக கசங்கிப் போயிருப்பது போன்றவைகள்தான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது. மூளையின் அளவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு இல்லை.  சராசரி மனிதனின் மூளை ஒரு கிலோ 349 கிராம் என்ற அளவில் இருக்கும். இதில், பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. இவற்றுக்கு இடையேயான ஓய்வில்லாத மின் ரசாயன பரிமாற்றம் தான் நம் சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருக்கும்.

உலகின் மிகப்பெரிய குடும்பம் - உறுப்பினர்கள் எண்ணிக்கை 163

உலகின் மிகப் பெரிய குடும்பம் எங்குள்ளது தெரியுமா..இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள பக்த்வாங் என்ற ஊரில் இருக்கும் சியோனா சனா என்பவரின் குடும்பம் தான் உலகிலேயே மிகப்பெரிய குடும்பமாகும். சியோனா சானாவுக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற வியக்கத்தக்க உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் அனைவரும் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். சியோனா சனா கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago