முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கோமுக ஆசனம்

கோமுக ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இரத்த அழுத்தம் சீராகும்.பசுவின் முகத்தைப் போன்று தோற்றம் அளிப்பதால், இந்த ஆசனம் இந்த பெயர் பெற்றது. இதை செய்தால் உடல், மனதிற்கு அமைதியைக் கொடுக்கும். சிறுநீரகங்கள் நன்கு வேலை செய்யும். முதுகு, இடுப்புக் கூடு, நரம்பு வாதம், கீல் வாதத்திற்கு நல்ல தீர்வு. ழுத்து தோலின் இறுக்கம் நீங்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

பண்டைய காலத்தில் கண்ணாடி எவ்வாறு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

பண்டைய காலத்தில் எகிப்தில் கண்ணாடி பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் குவார்ட்ஸ் எனும் தனிமத்தை மணலிலிருந்து பிரித்தெடுத்து அதை மரச் சாம்பலுடன் கலந்துள்ளனர். பின்னர் அதை களிமண் கலனின் வைத்து சுமார் 750 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்கப்பட்டது. அந்த கலவை உருகி ஒரு பந்து வடிவை அடையும் வரை இந்த செயல்பாடு தொடரும். பின்னர் குளிர்விக்கப்பட்டு, வண்ணம் சேர்க்கப்படும். மீண்டும் மற்றொரு கலனில் அது செலுத்தப்பட்டு இரண்டாவது முறையாக அதிக வெப்பநிலையில் சூடாக்கப்பட்டு குளிர்விக்கப்பட்டதும் கண்ணாடி பெறப்படும்.

சாணத்திலிருந்து மின்சாரம் தயாரித்து 50 தெருவிளக்குகளை எரிய செய்யும் கிராமம்

நவீன அறிவியலில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த செய்திதான் சாட்சி. முன்பு மாற்று எரிபொருள் என்ற வகையில் சாண எரிவாயு முறைகள் பின்பற்றப்ப்டடன. பெரும்பாலும் தற்போது அதையாரும் தொடர்வதில்லை என்ற போதிலும் இன்றைக்கும் அது ஒரு சிறந்த மாற்று எரிபொருள்தான். அதே போல மாற்று எரிசக்தி என்ற முறையில் தற்போது அறிவியலில் புதிய முறையாக மாட்டுச் சாணம் உள்ளிட்ட கால்நடை கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை மேல்நாட்டு பண்ணைகளில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சண்டிகர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தொடங்கப்பட்ட போதிலும் இன்னும் பரவலாகவில்லை. இதற்கு முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள வரதராஜபுரம் ஊராட்சி திகழ்கிறது. இங்கு கால்நடை கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள 50 தெரு விளக்குகள் எரிய வைக்கப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 12 மணிநேரம் இந்த ஆற்றலை  பயன்படுத்தி விளக்குகள் எரிகின்றன. இதை இன்னும் திட்டமிட்டு விரிவாக்கினால் கிராமத்துக்கான மின் தேவையையே சமாளிக்கலாம் என்கின்றனர். 

இங்கிலாந்து பவுண்ட்ஸ்

இங்கிலாந்து வங்கி திங்களன்று ஒரு ட்வீட் மூலம் புதிய 5 பவுண்டு நோட்டுகளில் விலங்கு கொழுப்பு (animal fat) இருப்பதாக உறுதிப்படுத்தி இருக்கின்றது.இதை தொடர்ந்து சைவ உணவு உண்பவர்கள் பெரும் காட்டம் அடைந்துள்ளனர். அந்த நோட்டுகளை நீக்க வேண்டும் என ஒரு மனுவில் இது வரை சுமார் 19,000 பேர் கையெழுத்திட்டு வங்கியிடம் கோரிக்கை வைக்க உள்ளனர்.

உலகிலேயே வெள்ளி காசை விட மிகச்சிறிய உருவம் கொண்ட வவ்வால்

உலகிலேயே மிக சிறிய வவ்வால் இனங்கள் காணப்படுகின்றன. இவை சாதாரண வெள்ளி காசுகளை காட்டிலும் உருவத்தில் சிறியவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கிட்டிஸ் ஹாக் நோஸ் வவ்வால் அல்லது பம்பிள்பீ வவ்வால் என இவை அழைக்கப்படுகின்றன. இவற்றின் எடை 2 கிராமுக்கும் சற்று குறைவுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அழிந்து வரும் அரிய வகை இனமான இந்த வவ்வால்கள் பொதுவாக தாய்லாந்து, மியான்மர் நாடுகளில் காணப்படுகின்றன. ஆற்றங்கரையோாரம் உள்ள பாறைகளின் குகைகளே இவைகளின் வசிப்பிடங்களாகும். இவை கூட்டம் கூட்டமாக வசிக்கக் கூடியவை. ஒரு கூட்டத்தில் சுமார் 100 வவ்வால்கள் வரை காணப்படும்.

120 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் பல்பு

எந்த பல்பாக இருந்தாலும் நம்மூர் மின்சாரத்துக்கு சில மாதங்கள் தாங்குவதே பெரிய விஷயம். அதிலும் அந்த காலத்து குண்டு பல்பு என்றால் கேட்கவே வேண்டாம்...மின் அழுத்தம் சற்றே மாறினாலும் டப் பென்று மூச்சை நிறுத்தி விடும். வீடு இருண்டு விடும். இன்றைக்கு எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்டன. ஆனால் 120 ஆண்டுகளாக விடாமல் எரிந்து கொண்டிருக்கு குண்டு பல்பு பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா..அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் ஈஸ்ட் அவென்யூவில் உள்ளது லிவர்மோர் ப்ளேசன்டன் தீயணைப்புத்துறை. இந்த தீயணைப்பு நிலையத்தில் தான் 1901 ஆம் ஆண்டிலிருந்து எரிகிறது இந்த அணையா குண்டு பல்பு. கார்பன் இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் பல்பு 1890 களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட ஷெல்பி எலக்ட்ரிக் நிறுவனத்தால் ஓஹியோவிலுள்ள ஷெல்பியில் தயாரிக்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டில் தீயணைப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க கூடிய இந்த பல்ப் சென்டேனியல் பல்ப் என அழைக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் பல்ப் பொருத்தப்பட்ட பொழுது 30 வாட் வெளிச்சத்தை வெளியிட்டு கொண்டிருந்தது. தற்பொழுது மிகவும் மங்கலாக 4 வாட் இரவு விளக்கு போன்ற வெளிச்சத்தை வெளியிடுகிறது. என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago