முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மர்மங்கள் நிறைந்த அதிசய கிணறு

நூறாண்டுகள் பழமையான மர்மங்கள் நிறைந்த அதிசய ஊற்று கிணறு ஒன்று உள்ளது. எங்கே.. இந்தியாவிலா என்றால்.. அதை பற்றி கேட்கவே வேண்டாம்.. பல நூறு ஆண்டுகள் பழமையான குளங்கள், கிணறுகள் போன்றவற்றுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை.. இது அமைந்துள்ளது பிரான்சில். அங்குள்ள Burgundy என்ற பிராந்தியத்தில் அமைந்துள்ள இது Fosse Dionne spring என பிரபலமாக அறியப்பட்டுள்ளது. கடந்த 1700 களில் இதை சுற்றிலும் பொது குளியலறைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் விநாடிக்கு 311 லிட்டர் வெளியேறுகிறது. சீசன் நேரங்களில் இது 3 ஆயிரம் லிட்டராகவும் அதிகரிக்கும். ரோமானியர்களால் குடிநீராகவும், செல்டியர்களால் புனித நீராகவும் இது கருதப்பட்டு வந்தது. பூமிக்கு அடியில் மிகவும் ஆழமாகவும், நீண்டு செல்லும் சுரங்க பாதைகளையும் கொண்டதாக இதில் எங்கிருந்து நீர் ஊற்று வருகிறது என்பது கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது. உள்ளே சென்றவர்கள் யாரும் திரும்ப வருவதில்லை என்ற வதந்தி பரவியதையடுத்து அதற்குள் டைவர்கள் குதிக்க அரசு தடை விதித்திருந்தது. இதனால் இதன் மர்மம் நீடித்தே வந்துள்ளது.  கடந்த ஆண்டு தொழில்முறை டைவர் ஒருவர் முறையான அனுமதி பெற்று அதன் உள்பகுதிகளுக்கு சென்று படம் பிடித்து திரும்பினார். இருந்த போதிலும் அவராலும் நீர் ஊற்று எங்கிருந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மிகப் பெரிய அரண்மனை அளவுக்கு பூமிக்கு அடியில் உள்ள நீர் சுரங்கத்தில் அவர் படம் பிடிப்பு நடத்திய காட்சிகள் உலகம் முழுவதும் பரவி இந்த ஊற்று நீர் கிணற்றுக்கு மேலும் விளம்பரத்தை தேடி தந்துள்ளது.

‘ப்ளாக் போர்டு’

பிளாக் போர்டு என்பது அமெரிக்க நாட்டை சார்ந்த ஓர் கல்வி மென்பொருள் நிறுவனம். இது முக்கியமாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடி கல்வி கற்றுக் கொள்ளமுடியும். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.  கல்வி கற்றலையும், கற்பித்தலையும் எளிமையாக்கும் ‘ப்ளாக் போர்டு’ என்ற மென்பொருள் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எளிதில் கற்கவும், ஆசிரியர்களுக்கு கற்பித்தலிலும் மிகவும் உதவியாக இருக்குமாம்.

நீந்தி திரியும் வண்ண மீன்களுக்கு மத்தியில் அமர்ந்து சாப்பிடும் உணவகம்

கலர் கலராக வண்ண மீன்கள் காலுக்கு அடியில் சுற்றித் திரிய அதன் மத்தியில் மேஜை நாற்காலி போட்டு சாப்பிடும் அழகிய ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா.. தாய்லாந்தில் உள்ள ஹோசிமின் நகரில்தான் இப்படி ஓர் அழகிய அனுபவத்தை அளிக்கும் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் கால் பாதம் வரை நிரம்பியிருக்கும் ஹால் ஒன்றில் அழகிய கலர் கலர் மீன்கள் நீந்தி விடப்பட்டிருக்கும் அவற்றின் நடுவில் வாடிக்கையாளர்கள் உணவு அருந்துவதற்கான மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து உணவருந்துவது மிகவும் அற்புதமான அனுபவத்தை அளிப்பதாக உள்ளது.

கவனம் தேவை

வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்ட முதல் 30 நாட்களில் இந்த ஆபத்து அதிகமாக இருக்குமாம்.  சர்வதேச விஞ்ஞானிகள், 4 லட்சத்து 46 ஆயிரத்து 763 பேரிடம் இருந்து தகவல்களைச் சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்ததில், ஸ்டீராய்டு இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதால் மாரடைப்புக்கான ஆபத்துகள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்தில்கூட அதிக ஆபத்துகள் வரக்கூடும் என்றும், அதிக ‘டோஸ்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் மர நகரம் எது தெரியுமா?

ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிந்திய காபியில் சித்திரம் தீட்டி அசத்தும் இத்தாலிய இளைஞர்

எதையும் கலைக் கண்ணோடு அணுகி அதையும் தனது தனித்தன்மையாக மாற்றிக் கொள்ளக் கூடிய வல்லவர்களும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒருவர்தான் இத்தாலியில் உள்ள Mantua என்ற இடத்தைச் சேர்ந்தவரான Giulia Bernardelli என்ற 34 வயது இளைஞர். ஓவிய நுண்கலைப் பிரிவில் பட்டதாரியான இவருக்கு, அழகிய சித்திரங்களை தீட்ட மற்றவர்களை போல வண்ண வண்ண நீர் வண்ணங்களோ, பெயிண்டோ, பேஸ்டலோ, பிரஷ்ஷோ தேவையில்லை, ஜஸ்ட் தரையில் சிந்திய காபியும் ஸ்பூனும் இருந்தால் போதும்.. அசத்தலான ஓவியங்களை தீட்டி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறார். இவரது காபி ஓவியங்களை ஆர்வலர்கள் உலகம் முழுதும் கொண்டாடி பரப்பி வருகின்றனர். கண்ணை கவரும் வகையில் இவர் வரைந்துள்ள ரயில் நிலையம், யானை, மிகப் பெரிய கோட்டை, அழகிய மனித முகங்கள் ஆகியன காண்பவரை கவர்ந்திழுக்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றன. ஓவியம் வரைவது ஓரு கலை என்றால் சிந்திய காபியில் சிதறாமல் அதை சித்திரமாக்குவது புதுக்கலை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago