முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வீட்டில் பிரியாணி இலையை எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

பிரியாணி இலையை எரித்த பிறகு, அதிலிருந்து வெளிவரும் புகை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் வீட்டில் 1-2 பிரியாணி இலையை எரித்தால், காற்று சுத்தமாவதோடு, மனநிலையும் சிறப்பாக இருக்கும். பிரியாணி இலையில் உள்ள யூஜெனோல் மற்றும் மைர்சீன் என்ற இரண்டு சேர்மங்கள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே பிரியாணி இலைகளை எரித்த பிறகு, அதன் வாசனை மூளையின் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, டென்சனை நீக்குகிறது.  பிரியாணி இலையில் லினாலூல் என்னும் தனித்துவமான பொருள் உள்ளது. இது மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடியது. ஆகவே நீங்கள் ஒருவித மன அழுத்தத்தால் இருப்பது போன்று உணர்ந்தால், உங்கள் படுக்கையறையில் 2 பிரியாணி இலையை எரியச் செய்து அதன் வாசனை (சற்று தொலைவில் இருந்துதான்) நுகருங்கள். மிக சிறந்த காற்று நறுமணமூட்டியாகவும் இது செயல்படுகிறது. ஒரு கலத்தில் 2-3 நன்கு உலர்ந்த பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அறையின் ஜன்னல் மற்றும் வாசல் கதவுகளை மூடுங்கள். பிரியாணி இலையில் நெருப்பை மூட்டிவிட்டு, அறையை மூடிவிட்டு வெளியே வந்துவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து, அந்த அறைக்குள் சென்று, ஆழமாக சுவாசியுங்கள். இப்படி ஒரு 5-7 முறை அந்த அறைக்குள் சென்று வாருங்கள். நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.

மர்மங்கள் நிறைந்த அதிசய கிணறு

நூறாண்டுகள் பழமையான மர்மங்கள் நிறைந்த அதிசய ஊற்று கிணறு ஒன்று உள்ளது. எங்கே.. இந்தியாவிலா என்றால்.. அதை பற்றி கேட்கவே வேண்டாம்.. பல நூறு ஆண்டுகள் பழமையான குளங்கள், கிணறுகள் போன்றவற்றுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை.. இது அமைந்துள்ளது பிரான்சில். அங்குள்ள Burgundy என்ற பிராந்தியத்தில் அமைந்துள்ள இது Fosse Dionne spring என பிரபலமாக அறியப்பட்டுள்ளது. கடந்த 1700 களில் இதை சுற்றிலும் பொது குளியலறைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் விநாடிக்கு 311 லிட்டர் வெளியேறுகிறது. சீசன் நேரங்களில் இது 3 ஆயிரம் லிட்டராகவும் அதிகரிக்கும். ரோமானியர்களால் குடிநீராகவும், செல்டியர்களால் புனித நீராகவும் இது கருதப்பட்டு வந்தது. பூமிக்கு அடியில் மிகவும் ஆழமாகவும், நீண்டு செல்லும் சுரங்க பாதைகளையும் கொண்டதாக இதில் எங்கிருந்து நீர் ஊற்று வருகிறது என்பது கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது. உள்ளே சென்றவர்கள் யாரும் திரும்ப வருவதில்லை என்ற வதந்தி பரவியதையடுத்து அதற்குள் டைவர்கள் குதிக்க அரசு தடை விதித்திருந்தது. இதனால் இதன் மர்மம் நீடித்தே வந்துள்ளது.  கடந்த ஆண்டு தொழில்முறை டைவர் ஒருவர் முறையான அனுமதி பெற்று அதன் உள்பகுதிகளுக்கு சென்று படம் பிடித்து திரும்பினார். இருந்த போதிலும் அவராலும் நீர் ஊற்று எங்கிருந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மிகப் பெரிய அரண்மனை அளவுக்கு பூமிக்கு அடியில் உள்ள நீர் சுரங்கத்தில் அவர் படம் பிடிப்பு நடத்திய காட்சிகள் உலகம் முழுவதும் பரவி இந்த ஊற்று நீர் கிணற்றுக்கு மேலும் விளம்பரத்தை தேடி தந்துள்ளது.

120 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் பல்பு

எந்த பல்பாக இருந்தாலும் நம்மூர் மின்சாரத்துக்கு சில மாதங்கள் தாங்குவதே பெரிய விஷயம். அதிலும் அந்த காலத்து குண்டு பல்பு என்றால் கேட்கவே வேண்டாம்...மின் அழுத்தம் சற்றே மாறினாலும் டப் பென்று மூச்சை நிறுத்தி விடும். வீடு இருண்டு விடும். இன்றைக்கு எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்டன. ஆனால் 120 ஆண்டுகளாக விடாமல் எரிந்து கொண்டிருக்கு குண்டு பல்பு பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா..அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் ஈஸ்ட் அவென்யூவில் உள்ளது லிவர்மோர் ப்ளேசன்டன் தீயணைப்புத்துறை. இந்த தீயணைப்பு நிலையத்தில் தான் 1901 ஆம் ஆண்டிலிருந்து எரிகிறது இந்த அணையா குண்டு பல்பு. கார்பன் இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் பல்பு 1890 களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட ஷெல்பி எலக்ட்ரிக் நிறுவனத்தால் ஓஹியோவிலுள்ள ஷெல்பியில் தயாரிக்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டில் தீயணைப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க கூடிய இந்த பல்ப் சென்டேனியல் பல்ப் என அழைக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் பல்ப் பொருத்தப்பட்ட பொழுது 30 வாட் வெளிச்சத்தை வெளியிட்டு கொண்டிருந்தது. தற்பொழுது மிகவும் மங்கலாக 4 வாட் இரவு விளக்கு போன்ற வெளிச்சத்தை வெளியிடுகிறது. என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா..

பாறைகளை விழுங்கும் டைனோசர்கள்

டைனோசர் என்ற பிரம்மாண்டமான அரிய வகை விலங்கு ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து வந்தனர் கால ஓட்டத்தில் அவை அழிந்து விட்டன அவற்றில் சில விசேஷ குணங்களை கொண்ட டைனோசர்களும் காணப்பட்டன அதில் குறிப்பாக சில வகை டைனோசர்கள் பெரிய பாறைகளைக் கூட அப்படியே விழுங்கி விடுமாம் ஏன் தெரியுமா?  அவற்றின் வயிற்றில் உள்ள இரைப்பையில் காணப்படும் கடினமான உணவுகளை செரிமானம் செய்வதற்கு உதவியாக அவை இவ்வாறு பாறைகளை விட்டுவிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

செயற்கை சூரியன்

149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி, உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை ஜெர்மனி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருமாம். ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8x8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை பொருத்தி செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். இது 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் எனவும் கூறப்படுகிறது. சோதனை முயற்சியில் இருக்கும் இந்தப் புதிய கண்டுபிடிப்பு சூற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையமாகவும், ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் முயற்சி என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய கீதம்

கடும் உழைப்புக்கு பிரபலமான நாடு ஜப்பான். உலகின் பழமையான தேசிய கீதத்தை கொண்ட நாடும் அதுதான். உலகிலேயே மிகச் சிறிய தேசிய கீதத்தை கொண்ட நாடும் ஜப்பான்தான். அதன் தேசிய கீதத்தில் இருப்பது ஐந்தே வரிகள், வெறும் 31 எழுத்துக்கள். 13 அடிகள் கொண்ட நம் தேசிய கீதத்தை 52 நொடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் என்பது மரபு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago