முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஏலம் போனது

2-ம் உலகப்போரின் போது எத்தனையோ உயிர்களை கொல்ல ஆணையிட்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு பாதுகாப்பு கிடங்கு அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. இது தற்போது ரூ.1 கோடியே 68 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

சிரிப்பால் அளந்தவர்

சார்லி சாப்ளின், ஒரே வருடத்தில் 12 ஹாலிவுட் படங்கள் நடித்து சாதனை புரிந்தவர், நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன் முகம் கொண்டவர்.

பேக்ஸ் இயந்திரம் எப்படி உருவாச்சு தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பெயின் (Alexander Bain) என்பவர் 1843 இல் ஒரு எந்திரத்தை உருவாக்கினார். அவர் பல சோதனைகளையும் அதில் மேற்கொண்டார். அதில், செம்புக் கம்பிச்சுருளில் வைக்கப்படும் பேனா எழுதுவதை, சுருளின் மற்றோர் இடத்தில் இருந்த 2 ஆவது பேனா, அதை நகல் எடுக்கத் துவங்கியது.  பின்னர் 1851இல் ஃபிரெட்ரிக் பேக்வெல் (Fredric Bakewell) என்பவர் லண்டனில் நடைபெற்ற உலக வணிகப் பொருட்காட்சியில் இதை மக்களிடம் விளக்கிக் காட்டினார். தொடர்ந்து 1862 இல் இத்தாலி மருத்துவர் ஒருவர் இக்கருவியை ஒத்த வேறோர் கருவியை உருவாக்கி அதற்கு பான் டெலிகிராஃப் (Pan telegraph) எனப் பெயரிட்டார். இக்கருவி பெயின் உருவாக்கிய கருவியின் கோட்பாட்டில் அமைந்திருந்தது. "பிரெஞ்ச் அஞ்சல் மற்றும் தந்திச் சேவை" என்ற நிறுவனம் இதை 1856 முதல் 1870 வரை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தியது.ஆர்தர் கோர்ன் (Arthur Korn) என்ற ஜெர்மன் விஞ்ஞானி 1902இல் புகைப்படங்களை அனுப்பக்கூடிய ஓர் இயந்திரத்தை உருவாக்கினார். இது புதிய பேக்ஸ் இயந்திரத்தின் அசலான முன்னோடி வடிவமாக திகழ்ந்தது. இதைக் கண்டறிந்த பெருமை அவரையேச் சேரும். அந்நாளில் பல ஜெர்மன் செய்தித்தாள் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி வந்தன. பின்னர் 1925ஆம் ஆண்டு ஒரு பிரான்ஸ் விஞ்ஞானி இதன் ஒளிப்படத் திறனை அதிகரித்து இக்கருவியை மேம்படுத்தினார். இந்த எந்திரமே சிற்சில மாறுதல்களுடன் புதிய பேக்ஸ் இயந்திரமாக தற்போதுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி, கட்டிட ஒப்பந்ததாரர். தனது வீட்டில் கிட்டியம்மாள் என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய் போட்ட 6 குட்டிகளை அவர் தனது நண்பர்களுக்கு கொடுத்து விட்டார். இதற்கிடையே, தென்காசி அருகே உள்ள மேலப்பாவூரில் உள்ள பெருமாள்சாமியின் மூத்த மகள் இலக்கியா வீட்டில் உள்ள ஆடு ஒன்று, 4 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டியை இலக்கியா, தனது தந்தை பெருமாள்சாமியிடம் கொடுத்துள்ளார். கருப்பாயி என்ற பெயருடன் அந்த ஆட்டுக்குட்டி அவரது வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்த ஆட்டுக்குட்டி வீட்டிற்கு வந்தது முதல், நாயும் பாசத்துடன் பழகியுள்ளது. ஆட்டுக்குட்டிக்கு பசி எடுக்கும் போதெல்லாம், நாய் பாசத்துடன் பால் கொடுத்து வருவதைப் பார்த்த பெருமாள்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியதால் அந்த காட்சியை அந்த பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

வாகனங்களை இழுக்கும் அதிசய காந்த மலை

பொதுவாக இறக்கமான இடங்களில் புவியீர்ப்பு விசையால் வாகனங்கள் கீழ் நோக்கி செல்வதுதான் வழக்கம். ஆனால் முற்றிலும் அதிசயதக்க வகையில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு மலை வாகனங்களை மேல் பகுதியை நோக்கி இழுக்கிறது. இதனாலேயே இது காந்தமலை என அழைக்கப்படுகிறது. லடாக் பிராந்தியத்துக்கும் லே என்ற சுற்றுலா தளத்துக்கும் இடையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த காந்தமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இந்த காந்தமலை அமைந்துள்ளது. எந்த ஓர் ஊர்தியையும் நியூட்ரல் கியரில் நிறுத்தினால் ஊர்தி காந்தமலை இருக்கும் திசைநோக்கி தானாக நகர்கிறது. அது ஆச்சரியம் தானே..

விஞ்ஞானிகள் சாதனை

உடல் உறுப்புகள் தட்டுப்பாடு காரணமாக, பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தலாமா என்ற ஆய்வில் ஈடுபட்டுவந்த விஞ்ஞானிகள் தற்போது, பன்றியின் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, பன்றியின் உடல் உறுப்புகளில் உள்ள மரபணுக்களில் செயல்படாமல் அடங்கி கிடக்கும் ‘பெர்வ்’ எனப்படும் வைரஸ்களை அகற்றும் ஆய்வில் ஈடுபட்டனர். தற்போது அவற்றை அகற்றி வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், எதிர்காலத்தில் பன்றிகளின் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago