முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நாம் எப்போதும் இறந்த காலத்தில் தான் வாழ்கிறோம்

நம்மூர் ஞானிகள் தொடங்கி ஆன்மிக பேச்சாளர்கள் வரை  அனைவரும் விழிப்புணர்வு, இங்கே, இப்போது என்று பேசுவதை கேட்டிருப்போம். அதாவது எப்போதும் நிகழ்காலத்தில் அறிவுப்பூர்வமான விழிப்புணர்வுடன் இருப்பதையே இவ்வாறு கூறுகிறார்கள் என ஒரு வாறு நாம் அனுமானிக்கலாம். இருந்த போதிலும் நமது எண்ணங்களும், நினைவுகளும் கடந்த காலத்திலேயே இருக்கின்றன. நிகழ்காலத்தோடு நாம் கொள்ளும் தொடர்பு சற்று தாமதமாகத்தான் நிகழ்கிறது என ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பேலார் மருத்துவ கல்லூரியில் டாக்டர் டேவிட் ஈகிள்மேன் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் நிகழ்காலத்திலிருந்து நாம் சுமார் 80 மில்லி விநாடிகள் பின்தங்கியே இருக்கிறோம் என்று கண்டறிந்துள்ளார். அதாவது சம்பவம் நடப்பதற்கு சற்று பிந்தி நாம் இறந்த காலத்தில் இருக்கிறோம்். நாம் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே சம்பவங்கள் நடந்து முடிந்து விடுகின்றனவாம். என்ன கொடுமை சார் இது...

விண்வெளியின் கருந்துளையிலிருந்து வெளிச்சம்

விண்வெளி அறிவியல் குறித்து உற்று கவனித்து வருபவர்களுக்கு தெரியும் பிளாக் ஹோல் என்பது குறித்து. பிரபஞ்சத்தில் அறியமுடியாத புதிரான அப்பகுதி குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தலையை பிய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மனித முயற்சிகளுக்கு அப்பால் விரியும் அதை நோக்கி பயணிக்கும் துணிச்சலும் ஆற்றலும் இன்னும் மனித இனத்துக்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சூழலில் தான் முதன்முறையாக பிளாக் ஹோலின் பின் புறத்திலிருந்து வெளிச்சம் வருவதை விண்வெளி வீரர்கள் கண்டுள்ளனர். சுமார் 1800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து இந்த ஒளி வநதுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அரிதான நிகழ்வு குறித்து நேச்சர் இதழிலும் அறிவியல் கட்டுரை ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

செவ்வாய் கிரகம், Mars planet

நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை பல்வேறு புதிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.  இந்நிலையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். அதாவது நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது. ரோவர் பதிவு செய்த செவ்வாயின் சத்தத்தையும் SoundCloud தளத்தில் பதிவேற்றியுள்ளனர் பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்ட சூப்பர்கேமில் இருக்கும் மைக்ரோபோன் மூலம் இந்த சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாசா வெளியிட்ட தகவலின்படி பெர்சவரன்ஸ் ரோவரில் இருக்கும் லேசர் கதிர் செவ்வாயில் ஒரு கல்லை தாக்கும் சத்தம் ரோவரின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிவந்த சத்தம் மூலம் அந்த கல் எவ்வளவு கடினத்தன்மையுடையதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். குறிப்பாக பெர்சவரன்ஸ் ரோவரின் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் கேமராக்கள், அந்த கல் எதனால் ஆனது என்பதை ஆராய்ச்சி செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிதக்கும் சந்தை

இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை கொல்கத்தாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பட்டூலியில் கடந்த 2018 இல் திறக்கப்பட்டது. இந்தச் சந்தையில் 200 கடைகளுக்கு மேல் உள்ளது. கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் கட்டமைத்துள்ள இந்தச் சந்தையில் படகுகள் மூலமாகப் பட்டூலியில் உள்ள ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கடைக்காரர்கள் பழம், காய்கறிகள், மீன் போன்றவை கிடைக்கும். படகுகள் மூலமாகக் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது கடைகளைத் திறக்க மற்றும் பிற கட்டுமான வசதிகளை ஏற்பாடு செய்ய 10 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். அருகில் பிற சந்தைகள் இருந்தாலும் இங்கு வந்து பொருட்களை வாங்குவது என்பது புதிய அனுபவமாக உள்ளது என்று வாடிக்கையாளர்களும் வணிகர்களும் கூறுகின்றனர்.

எரிமலையில் கொடி

இந்தோனேஷியாவில் புகைந்து கொண்டிருக்கும் டுகோனு எரிமலை பகுதிக்கு தைரியமாகச் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த சாய் தேஜா என்ற இளைஞர் எரிமலையில் தேசிய கொடியை பறக்க செய்தும், அதனை வீடியோ பதிவு செய்தும் சாதனை படைத்திருக்கிறார்.  உள்ளூர் மக்களின் உதவியோடு சாதனை படைத்த அவர், இந்த பயணம் மனநிறைவை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகப் பெரிய புத்தகம்

உலகிலேயே மிகப் பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago