Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இந்தியா தயாரித்த முதல் ராக்கெட்

அப்போது 1960களின் தொடக்கம். விக்ரம் சாராபாய் இந்தியாவுக்கான ராக்கெட் ஏவுதளத்துக்கான இடத்தை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டுபிடித்ததுதான் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா என்ற இடம். தற்போது அது விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அங்கே இருந்த சர்ச் ஒன்றில்தான் அதன் அலுவலகம் செயல்பட்டது. அவ்வளவு ஏன் நாசா மற்றும் நைக் அப்பாச்சியின் உதிரிபாகங்கள் அங்குதான் ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டன. இந்த பாகங்கள் மாட்டு வண்டியில் எடுத்து வரப்பட்டன என்றால், முதன் முதலாக தயார் செய்யப்பட்ட  ராக்கெட் சைக்கிளில்தான் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..இன்றைக்கு உலக நாடுகளுக்கு இணையாக சந்திராயன் விண்ணில் பாயும் வேளையில் இந்தியாவின் முதல் காலடி இவ்வாறுதான் இருந்தது என்றால் ஆச்சரியம் தானே..

ஒரே நேர்கோட்டில்...

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், சரியாக புவியிடைக்கோடு (30.7352° N, 79.0669) இல் அமைந்துள்ளது. கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் ரிஷிகேஷ் ரயில் நிலையம், அடுத்து 14 கி.மீட்டர் தள்ளி உள்ள காலேஷ்வரம் இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் அரிதாக அமைந்துள்ளது.

பிரிட்டன் அரச குடும்பத்துக்கு வின்சர் என்ற பெயர் எப்படி வந்தது?

இங்கிலாந்தில் உள்ள வின்சர் கோட்டைக்கு ஹவுஸ் ஆப் வின்சன் என பெயரிடப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதன் பின்னணி என்ன தெரியுமா.. 1917 இல் தான் ஹவுஸ் ஆப் வின்சர் உருவானது. அதன் சாக்ஸ்-கோபர்க்-கோதெ என்ற ஜெர்மானிய சாயல் கொண்ட அந்த வரலாற்றுப் பெயருக்கு மாற்றாக, ஐந்தாம் ஜார்ஜ் அரசரின் ஆணையின் மூலம் அந்த பெயர் மாற்றப்பட்டு, ஹவுஸ் ஆப் வின்சர் என்பது இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரப் பூர்வ பெயராக இடம் பெற்றது. அது தற்போதைய அரச குடும்பத்தின் பெயராகவே மாறிவிட்டது. தற்போதை ராணி ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான அரச குடும்பங்களுடன் குடும்ப உறவுகளை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் சிறியது

கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், நானிட் மைக்ரோ என்ற உலகின் மிகச்சிறிய அதாவது 1.8 அங்குல அளவே உயரம் உடைய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இதில், கால், மெசெஜ், வாய்ஸ் ரெக்கார்ட், கேமரா, புளூ டூத், ஹெட்போன்கள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஸ்மார்ட் வாட்சாகவும் பயன்படுத்த முடியும்.

வலை போட்டு மீன் பிடித்த தேசிய கவி யார் தெரியுமா?

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பரவலாக பேசப்பட்ட ஒரு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆவர். நம் நாட்டின் தேசிய கீதமான “ஜன கண மன” பாடலை எழுதிய ஒரு அற்புத கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இவர் கவிதை இயற்றுவதில் மட்டுமல்ல இசைப் பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் போன்ற பல துறைகளிலும் கால்தடம் பதித்த அற்புத மாமனிதர் ஆவார். கவிதைக்காக நோபல் பரிசு வாங்கிய ரவீந்திரநாத் தாகூருக்கு சிறு வலைபோட்டு லாவகமாக மீன் பிடிக்கும் ஆற்றல் உண்டு. வடிகட்டி மாதிரி உள்ள சின்னஞ் சிறிய வலையில் பரபரப்பான கொல்கத்தா நகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைதியாக ஓடும் ‘விளிண்டா’ ஆற்றங்கரையில் அவர் அடிக்கடி மீன் பிடிக்கச்செல்வது வழக்கம்.   பிடித்த மீனை சிறிதுநேரம் உள்ளங்கையில் வைத்திருந்துவிட்டு பிறகு ஆற்றில் விடுவாராம்.

சுவிஸ் நாட்டில் விலங்கை வளர்ப்பது சட்டவிரோதம் ?

சுவிஸ் நாட்டில் கினியா பிக் விலங்கை தனியாக வீட்டில் வைத்து செல்லப்பிராணியாக வளர்ப்பது சட்டவிரோதமாகும் ஏனெனில் அவை கூட்டமாக வாழும் விலங்குகள் இனத்தை சேர்ந்தவையாகும் எனவே கினியா பிக் விலங்கை ஒற்றையாக தனியாக வீட்டில் வைத்து வளர்க்க அந்த நாடு தடை விதித்துள்ளது ஆகவே அவற்றை கூட்டமாக வளர்க்கலாமே ஒளிய ஒற்றையாக தனித்து வைத்து வளர்க்கக்கூடாது என்று அந்த நாடு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago