முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பூமி சூரியனை சுற்றும் நாள்களை பண்டைய காலத்தில் கணக்கிட்டவர் யார் தெரியுமா?

இன்றைய நவீன அறிவியல்தான் பூமி சூரியனை சுற்றி வருகிறது என நம்ப வைக்கப்பட்டுள்ளோம். ஆனால் நவீன அறிவியலுக்கு முன்பே இந்தியாவின் பல்வேறு அறிஞர்களும், ஞானிகளும் இதை முறையாக கூறியதுடன், அதை கணக்கிட்டும் கூறியுள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவர் பாஸ்கர ஆச்சார்யா. கணிதவியல் அறிஞராகவும், வானியல் அறிஞராகவும் திகழ்ந்த அவர் நவீன அறியவியலுக்கு முன்பாகவே பூமி சூரியனை சுற்றி வரும் காலத்தை துல்லியமாக கணித்து சொன்னவர்.  அன்றைக்கு அவரது கணக்கீட்டின் படி, 365.258756484 நாட்கள் என தெரியவந்தது. நவீன அறிவியலில் அது 365.2564 நாள்கள் என கணக்கிடப்பட்டது. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு வெறும் 0.0002 சதவீதம் மட்டுமே என்பது ஆச்சரியம் தானே.

தெரிந்தும் தெரியாதது

சந்திரகுப்த மௌரியரின் முதன்மை அமைச்சராகவும், வழிகாட்டியாகவும் இருந்து, மிகப்பெரிய மௌரிய பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர் தான் சாணக்கியர். இவர் படிப்பை பழம்பெரும் தக்ஷஷீலா பல்கலைகழகத்தில் முடித்தார். உலகிலேயே மிகச்சிறந்த பாடசாலையாக இருந்த இந்த இடம் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.

குறிப்பிட்ட நாள் நேரத்தில் மெயில் அனுப்ப...

எதிர்கால இமெயில் அனுப்பும் வசதிகளை தருவதில் LetterMeLater என்ற இந்த வசதிதான் சிறப்பாக செயல் படுவதுடன், கூடுதல் வசதிகளையும் அளிக்கிறது. http://www.lettermelater.com/ என்ற முகவரியுள்ள தளத்தில் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கொடுக்க வேண்டும்.உங்களைப் பதிந்து கொள்ள வேண்டும். பின் மின்னஞ்சல் கடிதத்தினைத் தயார் செய்து, அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் நாளினையும் பதிந்து வைக்க வேண்டும். உடனேயே உங்களின் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் பதிந்து வைத்த எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய இமெயில் குறித்த செய்தி அனுப்பப்படும்.பின் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் நீங்கள் பதிந்த இமெயில் அனுப்பப்படும். பதிந்த நாளுக்குப் பின், தயாரித்த இமெயில் செய்தியில் ஏதேனும் எடிட் செய்திட வேண்டுமானால் இந்த தளம் சென்று, பாஸ்வேர்ட் கொடுத்து, மெயிலைத் திறந்து சேர்க்கலாம். பைல்களை அட்டாச் செய்திடலாம்

தூக்கம் வர

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு டிப்ஸ். உறங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழமும், வெதுவெதுப்பான பாலும் சாப்பிடுவது நல்ல உறக்கத்தை தரும், காரணம் உறக்கதிற்கான ஹார்மோன் மெலடோனின் மூலம் சிறந்து செயல்படுகிறது. மேலும், பாலில் இருக்கும் டிரிப்டோபென் ஆழ்ந்த உறக்கத்தை நமக்கு தருகிறது.

மாம்பழ பேக்

மாம்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சருமம் சுருக்கம் அடைவதை தடுக்கும். முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். பின் உங்கள் முகம் ஜொலிக்கும்.  மாம்பழ சதைப் பகுதியுடன் சிறிது மஞ்சள், கலந்து முகத்தில் பூசினால் முகப்பரு போகும்.

ஸ்ட்ராபெர்ரி என்பது ஒரு தனிப்பட்ட பழம் அல்ல என்பது தெரியுமா?

ஸ்ட்ராபெர்ரி என்று நாம் சாப்பிடும் பழம், பெர்ரி வகையைச் சேர்ந்தது அல்ல. ஆனால் வாழைப்பழம் பெர்ரி வகையைச் சேர்ந்தது. சீதாப்பழம் என்பது ஒரே பழம் அல்ல. அது ஒரு கூட்டுக்கனி. Compound fruit என்பார்கள். தாவரவியல் பாஷையில் சொன்னால் கூட்டு மஞ்சரி மலர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கனியைப் போல இவ்வாறு உருவாகியுள்ளது. ஒரே பழத்துக்குள் பல்வேறு பழங்கள் ஒட்டுமொத்தமாக பொதிந்து வைக்கப்பட்டதைப் போல காட்சியளிக்கும். அதற்கு நமது சீதா பழம் தான் மிக சிறந்த உதாரணமாகும். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago