முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒரே சமயத்தில் குட் மார்னிங்கும் குட் நைட்டும் சொல்லும் நாடு

அமெரிக்காவில் பகல் என்றால் இங்கு நமக்கு இரவு. இது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் ஒரே நாட்டில் ஒரு பகுதியில் பகல், மறு பகுதியில் இரவு எந்த நாடு தெரியுமா... அது தற்போது உக்ரைனை போட்டு தாக்கிக் கொண்டிருக்கும் ரஷ்யாவில் தான். உலகம் முழுவதும் மொத்தம் 24 சர்வதேச நேர மண்டலங்கள் உள்ளன. அவற்றில் 11 மண்டலங்கள் மட்டும் ரஷ்யாவிலேயே அமைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு பகுதியில் ஒருவர் குட்மார்னிங் சொல்லும் அதே வேளையில் மற்றொரு பகுதியில் மற்றொருவர் குட் நைட் சொல்லிவிட்டு போர்வையை இழுத்து போர்த்தி உறங்க தயாராகிக் கொண்டிருப்பார் என்றால் ஆச்சரியம் தானே..

நாசாவின் ரோவரை தரையிறங்க செய்த இந்திய பெண் சுவாதி

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பது குறித்து ஆராய நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கிருந்து தண்ணீரின் வழித்தடங்களை படமெடுத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. அதெல்லாம் சரி.. அதை விட முக்கியம் அதை தரையிறங்க செய்த குழுவின் தலைவர் யார் தெரியுமா.. சுவாதி மோகன் என்ற இளம் பெண். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரது பெற்றொர் பெங்களுரைச் சேர்ந்தவர்கள்.சிறு வயதிலேயே பெற்றோர் அவரது அமெரிக்கா வந்துவிட்டனர். சுவாமி தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வடக்கு வெர்ஜீனியா-வாஷிங்டன் மெட்ரோ பகுதியில்தான் கழித்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் ஏரோநாட்டிக்ஸ் / வானியல் துறையில் எம்ஐடியிலிருந்து எம்.எஸ் மற்றும் பி.எச்.டி படிப்பை முடித்தபோது அவருக்கான பரந்த உலகம் திறந்திருந்தது. நாசாவில் பணிக்கு சேர்ந்தது முதலே ஏற்றம்தான். அங்கு படிப்படியாக விரைவாக முன்னேறி பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் குழுவின் தலைமை பொறுப்புக்கு வந்தார். வெற்றிகரமாக சாதித்தும் காட்டியுள்ளார். இதற்கெல்லாம் உந்துதலாக இருந்தது எது என்று கேட்டால், சிறுவயதில் தான் பார்த்த சயின்ஸ் பிக்சன் தொடரான ஸ்டார் டிரக்தான் என்கிறார் சிரித்தபடி. ஹேட்ஸ் ஆப் சுவாதி.

பாஸ்போர்ட் என்ற சொல் எப்படி வந்தது

பாஸ்போர்ட் என்ற வார்த்தை பைபிளில் இருந்து உருவானதாக வரலாறு ஒன்று கூறுகிறது. ஆனால், கிறிஸ்துவுக்கு முன்பும் இந்த வழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது 450 பி.சி. காலத்தில் பெர்சியாவில் ஆட்சி செய்த மன்னர் ஒருவர், அவரது அரசவையில் பணியாற்றிய அதிகாரிகள், நாட்டின் எல்லையில் உள்ள ஆற்றைக் கடந்து செல்வதற்கு ஒரு அனுமதிச்சீட்டு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம். இருப்பினும், 15ஆம் நூற்றாண்டில் தான் பாஸ்போர்ட் என்ற வார்த்தை உருவானதாக தெரிகிறது. அப்போது பாஸர் (வழிபோக்கர்) + போர்ட் (துறைமுகத்தை கடக்க இருப்பவர்) என்ற கூட்டுச் சொற்கள் சேர்ந்த பாஸ்போர்ட் என்றானதாம்.

இந்தியாவின் மர நகரம் எது தெரியுமா?

ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் பேருந்து முதன்முறையாக அறிமுகம்

ஜப்பான் நாட்டில் முதன் முறையாக தரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதற்காக பிரத்யேக வடிவில் வாகனங்களை வடிவமைத்துள்ளது. இந்த ரயில் பஸ் பேருந்து சேவை கடந்த மாதம் ஜப்பானில் உள்ள கையோ நகரில் தொடங்கப்பட்டது. சாலையில் ஓடும் போது ரப்பர் டயரிலும், தண்டவாளத்தில் ஓடும் போது இரும்பு சக்கரத்திலும் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு சக்கரங்களின் செயல்பாடுகளையும் 15 விநாடிகளுக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

நம்மீது பிரியம்

 விலங்குகளைப் போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு கிடையாது. இதனால்தான், அவைகள் நம்மை கடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு நோயின் அச்சுறுத்தலைக் கூட்டுவது பெண் கொசுக்கள் தான் என்றும்,ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago