முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செல்போனை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைக்கு அனைவரின் கைகளிலும் தவழும் செல்போனை கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா...மோட்டரோலா நிறுவனத்தின் ஜான் எப் மிட்சல், மார்ட்டின் கூப்பர் ஆகிய இருவரும் சேர்ந்து முதல் கம்பி்யில்லா ரேடியோ ஒலி அலைகள் மூலம் செயல்படும் செல்போனை 1973ம் ஆண்டு தயாரித்தனர். அதன்மூலம் கம்பியில்லா செல்போன் தொழில் நுட்பத்துக்கு வழிவகுத்தனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன் 2 கிலோ எடையுடன் இருந்தது. பின்னர் 1983 முதல் எடை குறைவான செல்போன்கள் விற்பனைக்கு வரத்தொடங்கின.

ரூ. 1 கோடிக்கு விற்பனையான காளைமாடு

இந்த ஆண்டுக்கான வேளாண் கண்காட்சி பெங்களுருவில் நடைபெற்றது. இந்தாண்டுக்கான கண்காட்சியை பெங்களுரூ வேளாண் அறிவியல் பல்கலை கழகம் ஒருங்கிணைக்கிறது. நவம்பர் 11 முதல் 14 வரை நடைபெற்ற இந்த கண்காட்சி ஜிகேவிகே வளாகத்தில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய தானிய விதைகள், நாட்டு மாட்டு ரகங்கள், விலையுயர்ந்த பாரம்பரிய ஜாதி மாடுகள், வேளாண் கருவிகள், உழவு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளும் பங்கேற்றனர்.இதன் ஹை அட்ராக்சனாக விளங்கியது எது வென்றால் ஒரு நாட்டு காளை மாடு ரூ.1 கோடிக்கு விற்பனையானது என்பதுதான். போரே கவுடா என்பவருக்கு சொந்தமான மூன்றரை வயது கொண்ட Hallikar ரக காளை மாடுதான் தற்போது அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. உயர் ஜாதி நாட்டு மாட்டு ரகமான இந்த காளையின் உயிரணுவுக்கு மிகுந்த டிமான்ட் இருப்பதால் ஒரு டோஸ் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் உயிரணு விற்பனை மூலம் மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.25 லட்சம் வரை வருவாய் வருவதாக சொல்லப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... எனவே இந்த காளைக்கு மிகுந்த தேவை இருப்பதால் விலையும் அதிகமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். பொதுவாக மாடுகள் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தான் விலை போகும். தற்போது ரூ.1 கோடிக்கு காளை விற்பனையான சம்பவம் விவசாயிகள் மத்தியில் ஆச்சரியமாக பகிரப்பட்டு வருகிறது.

விக்கலை நிறுத்த

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குவதால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பம் விட்டால், அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். இந்த செயல் விக்கல் ஏற்படாமல் தடுக்கும். விக்கல் எடுக்கும் போது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால் விக்கல் நின்றுவிடும்.

ஆயுள் கூடும்

தினமும் காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2 லட்சத்து 15 ஆயிரம் பேரிடம் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காபி குடிப்பவர்களுக்கு உயிர் கொல்லி நோய்களான இருதய நோய், புற்று நோய், கல்லீரல் நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களோடு ஏலியன்கள் பேசினரா? நீடிக்கும் ரேடியோ சிக்னல் புதிர்கள்

வேற்று கிரகங்களில் இருந்து ரேடியோ சிக்னல்கள் வந்தால் அவற்றை ரீசீவ் செய்வதற்கான ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் ஓஹேயோ பல்கலை கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரேடியோ அப்சர்வேட்டரி ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக் இயர் ரேடியோ டெலஸ்கோப் என்ற அமைப்பாகும். பிரபஞ்சத்துக்கு வெளியிலிருந்து வரும் ரேடியோ அலைகளை உள்வாங்கி அதை ஆய்வு செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. இதில் சுவாரசியமான விஷயம் ஏலியன்களை குறிவைத்தே இந்த ஆய்வகம் செயல்பட்டது. அது போன்ற தகவல் ஒன்றையும் இந்த ரேடியோ டெலஸ்கோப் ரீசீவ் செய்தது என்பதுதான் ஆச்சரியம்.பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் வாயு நிரம்பியுள்ளது என்றும், அதன் ரேடியோ அதிர்வெண் 1420 மெகா ஹெர்ட்ஸ் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த சூழலில்தான் 1977 இல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு அதிசயம் நடந்தது. ஜெர்ரி இகாமென் என்ற ஆய்வாளர் பணியில் இருந்த போது பிரபஞ்சத்துக்கு வெளியில் இருந்து வந்த வித்தியாசமான ரேடியோ அலை ஒன்றை பதிவு செய்துள்ளார். அது வெறும் 72 விநாடிகள் மட்டுமே நீடித்துள்ளது. அதை டீகோட் செய்த போதுதான் உலகுக்கே மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது ஆங்கிலத்தில் 'வாவ்' என அது குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியானால் பூமியை, மனிதனை பார்த்து வாவ் என்று கூறியது யார் என்ற மர்மம் இன்னும் விலகாத புதிராகவே நீடித்து வருகிறது. இது குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன. ஏலியன்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைப்புகளில் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் என்ற கின்னஸ் சாதனையையும் 1995 இல் இது படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 98 இல் இந்த அப்சர்வேட்டரி கலைக்கப்பட்டு விட்டது.

உலகம் எங்கும்...

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான, அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேரும்,  ஆஸ்திரேலியாவில் சுமார் 1 லட்சம் பேரும், இலங்கையில் 60 லட்சம் பேரும், அமீரகத்தில் 2 லட்சம் பேர், சிங்கப்பூரில் 2 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 3 லட்சம் பேர், பிஜி தீவில் 50 ஆயிரம் பேர், மொரிசியஸ் தீவில் 50 ஆயிரம் பேர், மலேசியா, கனடா, தென்னாப்பிரிக்காவில், ரீயூனியன் தீவு  என பல நாடுகளில் நம்மவர்கள் அதிகம் வசிக்கின்றனராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago