Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செவாலியர் விருது

பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத் துறை சார்பில் வழங்கப்படும் மதிப்பு மிக்க விருதான செவாலியர் விருதை இந்தியர்கள் பலர் பெற்றுள்ளனர். தமிழகத்‌தின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ‌‌திரைத் துறையில் அவர் படைத்த சாதனைகளைப் பாராட்டி சிவாஜிக்கு இந்த விருது 1997-ல் வழங்கப்பட்டது. இந்திய அளவில் தொழிலதி‌ர் ஜே.ஆர்.டி. டாட்டா, திரையுலக ஜாம்பவான் சத்யஜித்ரே, ‌பிரபல சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர், அறிவியல் விஞ்ஞானி‌ சி.என்.ஆர். ராவ், பாலமுரளிக் கிருஷ்ணா, 2007-ம் ஆண்டில் நடிகர் அமிதாபச்சனும், 2014-ம் ஆண்டில் நடிகர் ஷாரூக்கானும் இந்த விருதைப் பெற்றனர். ‌2015-ம் ஆண்டில் யஷ்வந்த் சின்ஹாவும், ம‌னிஷ் அரோராவுக்கும் வழங்கப்பட்டது. இந்த வரிசையில் நடிகர் கமலஹாசனும் இணைந்துள்ளார்.

கடவுளின் துகள் அல்லது போஸான் துகள்

இந்தியர் பலருக்கும், வெளிநாட்டவர் சிலருக்கும் புகழ் பெற்ற 3 போஸ்களைப் பற்றித் தெரிந்திருக்கலாம்! சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்! அடுத்து தாவரவியல் விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்! 3 ஆவது உலக மேதை ஐன்ஸ்டைனுடன் பணியாற்றிய பெளதிக நிபுணர், சத்யேந்திர நாத் போஸ்! ஐன்ஸ்டீன் தெரியுமென்றால் சத்யேந்திர நாத் போஸையும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். குவாண்டம் இயற்பியல் துறைக்கு இவர் ஆற்றிய தொண்டு அத்தகையது. குவாண்டம் மெக்கானிக்ஸ் என்கிற துறையின் உட்பிரிவான குவாண்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் இவரால் தான் உருவானது,வங்காளத்தில் படித்தார். பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில் இவர் பெற்றிருந்தார்; காரணம் ஒரே கணக்கை வெவ்வேறு முறைகளில் போட்டிருந்தது தான். பின் கல்லூரியில் இயற்பியலில் தங்க பதக்கம் பெற்று தேறினார்.  Max Planck's Law" மற்றும் "Light Quantum Hypothesis" பற்றிய ஒரு கட்டுரையை வெறும் ஆறு பக்கங்களில் எழுதி ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார். ஐன்ஸ்டீன் அசந்து போனார், அந்த கட்டுரையே போஸ் -ஐன்ஸ்டீன் ஸ்டாடிஸ்டிக்ஸ் எனும் துறைக்கு வழிவகுத்தது. இவரின் கட்டுரைகள் தான் ஐன்ஸ்டீன், பிளான்க் முதலியோரின் குவாண்டம் தியரி மற்றும் டிராக் ஹெய்சென்பெர்க் முதலியோரின் குவாண்டம் மெக்கனிக்ஸ் இரண்டுக்கும் பாலமாக இருந்தது.  இவரின் நினைவாகத்தான் கடவுள் துகளுக்கு போசான் என துகளுக்கு பெயரிடப்பட்டது . 

மீல் மேக்கர் என்றால் என்ன?

இன்றைய நவீன  உலகில் உணவும் நவீனமாகி வருகிறது. ஆனால் நவீன உணவு ஆரோக்கியமாக இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். அதெல்லாம் இருக்கட்டும்.. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் பலவற்றை குறித்து நமக்கு எதுவும் தெரிவதில்லை. குறிப்பாக நான் வெஜ் சாப்பிடுபவர்கள் அதிகம் பயன்படுத்தும் மீல் மேக்கரை சொல்லலாம். மீல் மேக்கர் என்றால் என்ன. சோயா ஜங்க்.அதான்ங்க அப்படின்னா... அப்படி கேளுங்க.. சோயா பீன்ஸ் அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து எண்ணெய், சாஸ், புரதம், பால், போன்றவற்றை எடுக்கும் தொழில் நுட்பத்தில் கடைசியாக எஞ்சும் சக்கை அல்லது புண்ணாக்குதான் இந்த மீல் மேக்கர். இதை கொரியாவில் உள்ள மீல் மேக்கர் என்ற நிறுவனம் தயாரித்து விற்க அந்த பெயரே நிலைத்து விட்டது. பார்க்க இறைச்சி போல தெரிவதால் அதிகம் பேரால் விரும்பப்படுகிறது. அளவாக உணவில் பயன்படுத்தலாம். அதிகம் பயன்படுத்தினால்.. குறிப்பாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, ஹார்மோன் பிரச்னை, விந்தணுக்களில் குறைபாடு போன்றவை தோன்ற வாய்ப்புகள் உள்ளன.

ஐந்து பொத்தான்கள்

சீனாவை ஆண்ட டி.ஆங் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில்தான் சீனர்கள் தங்கள் சட்டைகளுக்கு ஐந்து பொத்தான்களை வைத்து அணியும் பழக்கத்தை மேற்கொண்டனர்.அதற்கு கன்ஃபூஷியஸ் மதத்தின் அன்பு, அறிவு, துணிவு, வாய்மை, நேர்மை ஆகிய ஐந்து கொள்கைகளையும் பின்பற்றவேண்டும் என்பதுதான்.

இதுதான் காரணம்

கடைகளில் நாம் சாப்பிட வாங்கும் சிக்கனுடன் கூடவே, 2 துண்டு எலுமிச்சை பழங்கள் வைக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின் - சி தேவை. அதனால் தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின் - சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட வைக்கிறார்கள்.

வெள்ளை சர்க்கரை என்ற சீனியை கண்டுபிடித்த நாடு எது தெரியுமா?

நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் சுவையான பொருள் வெள்ளை சர்க்கரை எனப்படும் சீனி. கரும்பு, பீட்ரூட், பனை போன்றவற்றிலிருந்து தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை வெள்ளை நிறத்தில் கிடையாது. பழுப்பு நிறத்திலேயே வந்தது. அதை வெள்ளையாக மாற்றியது யார் தெரியுமா... இந்தியர்கள்தான். வெள்ளை சர்க்கரையாக பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு நுட்பங்களை நமது இந்தியா தான் முதல் முதலில் உருவாக்கியுள்ளது. சர்க்கரை தயாரிக்கும் முறை இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து வந்த இந்த தொழில் நுட்பம் சீனா, பெர்சியா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு பரவி இறுதியில் 13 ஆம் நூற்றாண்டில் மத்திய தரைக்கடலை அடைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சர்க்கரை ஒரு அரிய பொருளாகவும் மிகவும் விலையுயர்ந்த பொருளாகவும் கருதப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago