முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வழிகாட்டும் வரைபடம்

உலக சுகாதார அமைப்பின் படி உலகில் மொத்தம் 28.5 கோடி பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இந்தியாவில்தான் அதிக பார்வையற்றோர் இருக்கிறார்களாம். இந்நிலையில் உலகின் முதல் முறையாக பார்வையிழந்தோருக்கென வரைபடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தை, பார்வையற்றோர் உணர முடியும். கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மொத்தம் 84 பக்கம் கொண்ட வரைபடம் A-3 வகை காகிதம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடம் உருவாக்குவதற்கான திட்டப்பணிகள் 1997 ஆம் ஆண்டு துவங்கி தற்சமயம் நிறைவுற்றிருக்கிறது. முதற்கட்டமாக ஆங்கிலம் மட்டுமில்லாமல் பெங்காலி, குஜராத்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

டால்பின்களை போர்களுக்கு பயன்படுத்துகின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக டால்பின்கள் கூடுதல் கூருணர்வு திறன் மிக்கவை. மேலும் மனிதர்களோடு நன்கு நெருங்கி பழகக் கூடியவை. சங்க காலத்தில் தமிழர்கள் யானைகளை போருக்கு பயன்படுத்தியது போல, தற்போது டால்பின்களை போர்களுக்கும், உளவுக்கும் பயன்படுத்துகின்றனர். அண்மையில் நீருக்கடியில் இருந்து நடக்கும் தாக்குதலில் இருந்து தனது கடற்படையை பாதுகாக்க கருங்கடலில் உள்ள தனது கடற்படை தளத்தில் பயிற்சி பெற்ற டால்பின்களை ரஷியா நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராணுவ நோக்கங்களுக்காக டால்பின்களுக்கு நன்கு பயிற்சி அளித்து உள்ளது ரஷியா . அவை பொருட்களை மீட்டெடுக்க மற்றும்  எதிரி டைவர்ஸைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவும் இதே போல் டால்பின்களுக்கு போர் பயிற்சி அளிக்கிறது.

வேகமான டைப்பிங்கிற்கு....

கம்ப்யூட்டர் கீபோர்ட்டில் உள்ள F மற்றும் J  கீ-யின் கீழே ஒரு கோடு இருக்கும். கம்ப்யூட்டர் கீபோர்டில் இம்மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஜூன் ஈ.போட்டிச் (June E. Botich). கீபோர்டில் இம்மாதியான கோடு கடந்த 15 வருடங்களாகத் தான் உள்ளது. காரணம், கம்ப்யூட்டர் கீபோர்டின் F மற்றும் J-யில் உள்ள கோடு, ஒருவர் வேகமாக டைப் செய்வதற்காக அமைக்கப்பட்டது. இரண்டு கையிலும் உள்ள ஆள்காட்டி விரலை இந்த F மற்றும் J-யின் மீது வைத்து டைப் செய்வது தான் டைப்பிங் செய்வதன் சரியான நிலையாகும். சரியான நிலையில் வைத்து டைப் செய்தால், பார்க்காமல் டைப் செய்யலாம். இதனால் செய்யும் வேலையின் நேரம் மிச்சப்படுத்தப்படும். 2002-ம் ஆண்டு வரை கம்ப்யூட்டர் கீபோர்டில் இது மாதிரி எந்த ஒரு கோடும் இருந்ததில்லை.

ஆபத்து அதிகம்

மார்ப்பகப் புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம். பாலூட்டாத பெண்கள் மார்பகப் புற்று நோய் வர வாய்ப்பு அதிகம். காரணம், பாலூட்டுவதால் புற்றுநோய்க்குக் காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். பாலூட்டும் காலம் முடியும்போது, டி.என்.ஏ சிதைவுக்கு உட்பட்ட மார்பகச் செல்கள் தாய் உடலில் இருந்து விடுபட்டிருக்கும். அவை எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

விமானத்தில் சாப்பிடும் போது உணவின் ருசி குறைவாகத்தான் இருக்கும் ஏன் தெரியுமா?

நாம் வீடு மற்றும் வெளி இடங்களில் உண்பதை காட்டிலும், விமானத்தில் சாப்பிடும் உணவு சில நேரங்களில் உப்பு சப்பில்லாமல் இருப்பது போல நமக்கு தோன்றும். அதற்கு காரணம் விமானம் அதிக உயரத்தில் பறப்பதால், நுகர்வு திறனும், சுவை உணரும் திறனும் நமக்கு குறைவாக இருக்கும். எனவே, விமானத்தில் கொடுக்கப்படும் உணவுகளை நாம் சாப்பிடும் போது, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு போன்ற நான்கு சுவைகளை உணரும் சக்திகள் நமது நாவிற்கு குறைந்து விடுகிறது. விமானங்கள் பொதுவாக 31,000-40,000 அடி உயரத்தில் பறக்கின்றன. அப்போது, நம் நாக்கில் உள்ள சுவைக்கும் தன்மை குறைந்து விடும். ஒரு விமானம் காற்றடைக்கப்பட்ட ஒரு எந்திரம் ஆகும். ஆதலால், ஈரப்பதம் குறைந்து விடும். இதனால் நம் வாயில் உமிழ்நீர் குறைந்து சுவைக்கும் தன்மையும் குறைந்து விடும். இது உணவின் சுவை மாறுபடுவதில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி, குறைந்த காற்று அழுத்தம், விமானத்தில் செல்லும் போது ஏற்படும் இரைச்சல் மற்றும் ஈரப்பதம் இல்லாதது அனைத்தும் நாம் உணவை ருசிக்கும் விதத்தை பாதிக்கின்றன.

கொழுப்பை கரைக்கும்

3 வாரங்கள் தினமும் ஒரு கப் காரட் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரால் அளவு 11% குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. காரட்டில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்தினால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. மேலும் மாலைக் கண் நோயை தடுக்கும். புற்று நோயிலிருந்து காக்க காரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago