நாம் மணக்க மணக்க போட்டு குளிக்கும் சோப் எப்போ வந்துச்சு தெரியுமா...நம் தாத்தா, பாட்டன் காலத்தில் இருந்ததா...ஒரு 100 அல்லது 200 ஆண்டுகள் இருக்குமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். சோப் கண்டுபிடித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும்.. இதை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் பாபிலோனியர்கள் எனப்படும் தற்போதைய ஈராக்கியர்கள்தான் என்றால் ஆச்சரியம் தானே... பாபிலோனியாவின் கடைசி அரசன் நபோனிதஸ் ஆட்சிக் (கிமு 556-530) காலத்தில் அவனது உத்தரவின் பேரில் அரண்மனை ரசவாதிகள் சாம்பல், விலங்குகளின் கொழுப்பு, எண்ணெய், மெழுகு, உப்பு இவற்றைக் கொண்டு சவர்க்காரம் எனப்படும் சோப்பை தயாரித்தனர். முதலில் தரையையும், பின்னர் ஆடைகள், பாத்திரங்களையும் இறுதியில் குளிப்பதற்கும் பயன்பட்டன. இது வணிகர்கள் கண்ணில் படவே நைசாக சிரியா, ரோம், எகிப்து என மொரோக்கோ வரை பயணித்து சோப் பரவலானது. அது சரி.. அதற்கு சோப் என யார் பெயர் வைத்தார்.. கிபி 79 இல் ரோமானிய எழுத்தாளர் பிளினி தி எல்டர் என்பவர் சோப்பை குறிப்பிடும் மூலச் சொல்லான sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக soap என குறிப்பிட்டு விட்டார். அதுவே இன்று வரை சோப்பாக நிலைத்து விட்டது.. என்ன ஓகேவா..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான ஹோட்டல், வாகனங்கள், நகைகள் இப்படி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பள்ளியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..ஆம் அப்படி ஒரு பள்ளி, சுவிஸ் நாட்டில் உள்ளது. இன்ஸ்டிடியூட் லே ரோசாய் என்ற பள்ளிதான் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பள்ளி. இங்கு ஆண்டு கல்வி கட்டணம் மட்டும் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.1 கோடி. உலகின் அரசியல் தலைவர்கள், அரசர்கள் ஆகியோரின் வாரிசுகள் இங்கு தான் படிக்கின்றனர். இப்பள்ளி 1880 இல் நிறுவப்பட்டது. உலகில் உள்ள சகல வசதிகளும், சகல பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் செய்தி தாள் எது தெரியுமா.. பெங்கால் கெசட் என்பதுதான். ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் 1780 இல் தொடங்கப்பட்டது. பெங்கால் கெசட் ஒரு வார பத்திரிக்கையாக கொல்கட்டாவிலிருந்து வெளியிடப்பட்டது. இதன் முகப்பில் பிரிட்டன் ஆங்கிலத்தில் செய்திகள் இடம் பெற்றிருந்தன. இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் ஆங்கிலத்தில் நேரடியாக தங்களது கருத்துகளை ஆங்கிலத்தில் சுதந்திரமாக எழுதுவதற்கு இடம் அளித்தது. இதன் கடைசி பக்கங்களில் விளம்பரங்களும் இடம் பெற்றிருந்ததை காண முடிகிறது.
பல் துலக்கும் பற்பசை பிளாஸ்டிக் டியூப்களில் அடைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் இன்றைக்கு உலகமே தத்தளித்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் காகித கேப்ஸ்யூல்களை கண்டு பிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இதில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். அதை வாயில் போட்டு ஒரு கடி... அவ்வளவுதான் கேப்ஸ்யூல் கரைந்து விடும்.. பற்பசை வாயில் நிரம்ப.. ஃப்ரெஷ்ஷால் பல் துலக்க வேண்டியதுதான்... வெகு விரைவில் இந்தியாவுக்கு வரும்.. இனி பற்பசைக்கான பிளாஸ்டிக் தேவையில்லை..
15 நிமிடங்களுக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான சிந்தனை படைப்புகள் தற்காலிகமாக குறைவதாக, 3 வயதுடைய 60 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகின் 28வது பெரிய சாம்ராஜ்யமான ரோம் சாம்ராஜ்யத்தில் பல விநோதமான பழக்கவழக்கங்கள் இருந்தன. துணிகளை துவைக்க, பண்டைய ரோம் நாகரீகத்தில் சிறுநீரை பயன்படுத்தினர். மேலும், பற்களை வெள்ளை ஆக்கவும் ரோமானியர்கள் இதை பயன்படுத்தினர். அழகை மேம்படுத்த பெண்கள், கிளாடியேட்டர்களின் வியர்வையை பயன்படுத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.


