முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அவரிடம் "விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஏன் இன்னும் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை" என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.

அதற்கு அபிஷேச் சிங்வி, "அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்தது சட்ட விரோதம். இதனால் ஜாமீன் கேட்டு அந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை" என்றார். அதன்பின் "சிபிஐ-யின் வழக்கு அல்லது அமலாக்கத்துறையின் ஈசிஐஆர்-ல் கெஜ்ரிவால் பெயர் உள்ளதா?" என நீதிமன்றம் கேட்டது. அதற்கு கெஜ்ரிவால் வழக்கறிஞர் "அவருடைய பெயர் இல்லை" எனத் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து