முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை எதிரொலி: சுற்றுலா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்

புதன்கிழமை, 22 மே 2024      தமிழகம்
Kodai 2024-05-22

Source: provided

தென்காசி : குற்றாலம், கொல்லிமலை உள்ளிட்ட அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. அண்டை மாநிலமான கேரளத்திலும் பல்வேறு பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையின் காரணமாக அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. இதனால், நாமக்கல் மாவட்டம் மாசிலா அருவி, நம்ம அருவி, ஆகாய கங்கை அருவி, தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும், குளிக்கவும் வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும், அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மூணார், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து