முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் புதிய 6 மருத்துவக் கல்லூரிகள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      இந்தியா
Medical-Council-of-India

புது டெல்லி, தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த 6-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

இந்நிலையில் தமிழகத்தில்  6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.  மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாக புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய உள்ளது.

பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் 2-வது கட்டமாக புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மத்திய  அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவ கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண தேசிய மருத்துவ ஆணையம்  அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து