முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 பேர் சரண்: நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறிய கெர்லபெண்டா

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      இந்தியா
Nakselit

ராய்ப்பூர், சத்தீஸ்கரில் நக்சலைட்கள் 16 பேர் நேற்று போலீசாரிடம் சரண் அடைந்தனர். கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது என போலீசார் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று சுக்மா மாவட்டத்தில் பெண் உட்பட நக்சலைட்கள் 16 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்களில் 9 பேர் கெர்லபெண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சரண் அடைந்ததன் மூலம், கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது என போலீசார் தெரிவித்தனர்.

தற்போது, அந்த கிராமத்தை மேம்படுத்த ரூ.1 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து