முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பல்கலை வழக்கு தீர்ப்பு; அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      தமிழகம்
Gnanasekaran-2025-06-02

 சென்னை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தமிழக பா.ஜ., தலைவர், நயினார் நாகேந்திரன்:

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டது போல் தி.மு.க. ஆட்சியில் நிலுவையில் உள்ள ஏனைய பாலியல் வழக்குகளிலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். அரக்கோணம் வழக்கில் இன்னும் எப்.ஐ.ஆர்., கூடப் பதிவு செய்யப்படாமல் தாமதப்படுத்துவது ஏன்? இதற்கான விளக்கத்தையும் மக்கள் மன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் சமர்ப்பிக்க வேண்டும்.

அமைச்சர், கீதா ஜீவன்:  பெண்களை இழிவாக கருதும் சமூக விரோதிகளுக்கு, ஞானசேகருக்கு அளிக்கப்பட்ட 30 ஆண்டுக்கால சிறை தண்டனை மூலம் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விரைவான நடவடிக்கைக்கு கிடைத்த தீர்ப்பாகும் .இதன் மூலம் பெண்கள் இனிமேல் தைரியமாக புகார் தெரிவிக்க வருவார்கள்.

 தமிழக காங்., தலைவர், செல்வ பெருந்தகை: 

 நீதிபதியின் தீர்ப்பை தமிழக காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையானது, பெண்கள் சமூகத்தில் பாதுகாப்பாக உணரவும், வன்கொடுமைகள் இல்லாத சமூகமாக உருவாக காரணமாகவும் அமையும். குற்றம்சாட்டப்பட்ட 5 மாதத்திற்குள் விரைந்து விசாரணை செய்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களையும் பாராட்டுகிறேன்.

பா.ம.க., தலைவர் அன்புமணி: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது.  இவை அனைத்துக்கும் மேலாக இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அவர்களை பாதுகாக்கும் செயல்களில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது. அவர்கள் யார் ? என்பதைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ஜ., மூத்த தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்:

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கி இருக்க வேண்டும். ஞானசேகரன் குற்றம் செய்ய சம்பவத்திற்கு பின்னணி என்ன? யார் அந்த சார் என்பதற்கு பதில் தெரியவில்லை.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து