முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவா தயாரிப்பாளர் மீது இயக்குனர் கமிஷனரிடம் புகார்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.25 - தலைவா தயாரிப்பாளர் மீது  இயக்குனர் ரமேஷ் செல்வன் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறியதாவது:- இயக்குனர் ரமேஷ் செல்வன் உளவுத்துறை, ஜனனம்  போன்ற படங்களை கொடுத்த இயக்குனர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் கலவரம் என்ற படத்தை இயக்கினேன். இந்த படத்தை டி.ஆர் ரவிச்சந்திரன்  தயாரித்தார்.

கடந்த 1 வருடமாக இப்படத்தை வெளியிட முடியாமல் தவித்து வந்த நிலையில் ஆக.13ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைவா திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் எங்களை அணுகி படத்தை நானே வாங்கி கொள்கிறேன். இதற்கான ஒப்பந்தத்தை  ஆக.23ம் தேதி வைத்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். அவர் சொன்னது போலவே  தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், நானும் சென்றோம்.

ஆனால், சந்திர பிரகாஷ் ஜெயின் படத்தை வாங்க முடியாது என்று கூறியது மட்டுமின்றி பிரச்சனை செய்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

இவரால் தற்போது படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது மட்டுமின்றி இப்படத்தை வெளியிடாததால்  2.25 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

எங்கள் மீது கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி நஷ்டத்திற்கு காரணமான சந்திர பிரகாஷ் ஜெயின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு புகார் மனுவில் இயக்குனர் ரமேஷ் செல்வன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்