எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடில்லி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அனல் பறக்கும் விவாதம் நடந்தது.
வக்ப் போர்டு சொத்து தொடர்பாக பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100க்கும் அதிகமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, மே 20ம் தேதியான நேற்று, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.
இந்த விவாதத்தில் அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 3 பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும் என்றார். மேலும், சொத்து யாருக்கு என்பதில் கோர்ட்டால், பயனீட்டாளர்கள், வக்ப் போர்டால் அடையாளப்படுத்தும் சொத்துக்களை அறிவிக்க முடியாத நிலை உள்ளது. வக்ப், கோர்ட், பத்திரம், பயனீட்டாளர்களில் யார் அறிவிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது'என்றார்.
மனுதாரர்கள் தரப்பில் கபில்சிபல் வாதிடுகையில், இந்த வழக்கை தனித்தனியாக ஒவ்வொரு பிரிவாகவும் விசாரிக்க முடியாது. வக்ப் சட்ட திருத்தத்தின் பின்னணியில் உள்ள யோசனைகள் முழு முஸ்லிம் அமைப்பையும் காப்பாற்றுவது போன்ற கைப்பற்றும் நோக்கம் கொண்டதாகும். நீங்கள் மசூதிக்கு சென்றால் பார்க்கலாம் அங்கு காணிக்கை இல்லை. கோயில்களை போல் ஆயிரக்கணக்கான கோடிகள் இல்லை. அப்போது தலைமை நீதிபதி கவாய், ஆமாம் நானும் ஆலயங்கள், மசூதிகள் சென்றிருக்கிறேன், இது அடிக்கடி நடந்திருக்கிறது என்றார்.
மேலும் கபில்சிபல் வாதிடுகையில்; நான் மசூதிகள் குறித்து பேசுகிறேன். ஒரு மத நிறுவனத்திற்கு அரசு நிதியளிக்க முடியாது. வக்ப் சொத்துக்களை எந்தவிதமான வழிமுறைகளையும் பின்பற்றாமல் கையகப்படுத்தும் வகையில் தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. வக்ப் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வக்பு என்பது அல்லா அல்லது கடவுளுக்காக கொடுக்கப்படுவது. அவ்வாறு கடவுளுக்கு கொடுக்கப்படுவதை வேறு யாருக்கும் மாற்ற முடியாது.
ஒருமுறை வக்பு என அறிவிக்கப்பட்டால் அதை எப்போதும் மாற்ற முடியாது. பதிவு செய்யப்பட்ட சொத்தில் தற்போது ஒருவர் சந்தேகம் எழுப்பினால் அந்த சொத்து பறிபோகும் நிலை உள்ளது. பழங்கால ஒரு அமைப்பை அதன் தன்மையை இழக்க செய்திடும். மேலும் சிறுபான்மை உரிமையில் தலையிடுவதாகும். இவ்வாறு வாதிட்டார் கபில்சிபல்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், மேலும் முந்தைய 1995 வக்ப் சட்டத்தின் விதிகளை நிறுத்தி வைப்பதற்கான எந்தவொரு மனுவையும் பரிசீலிக்கப் போவதில்லை என்று தெளிவுப்படுத்தினர். மேலும் இந்த விவகாரம் ஒரு அரசியல் சாசனம் தொடர்பானது. வழக்கு வலுவானதாக இல்லாத பட்சத்தில் தேவையில்லாமல் கோர்ட் தலையிடுவதில்லை. வக்ப் போர்டு சொத்து தொடர்பாக அவுரங்காபாத்தில் பல்வேறு சர்ச்சை சொத்துக்கள் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
22 May 2025சென்னை: ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-05-2025
22 May 2025 -
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
22 May 2025சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
-
அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை
22 May 2025சென்னை: அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
கேன்ஸ் திரைப்படவிழா: குங்குமம் வைத்து வந்த ஐஸ்வர்யா ராய்
22 May 2025கேன்ஸ் (பிரான்ஸ்): நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
-
டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் அப்பீல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
22 May 2025புதுடெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என்றும் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப
-
இந்தியா - பாக். மோதலை தீர்த்து வைத்தது நான்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
22 May 2025வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை தீர்த்துவைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
-
டெல்லியில் ஐ.எஸ்.ஐ. முகவர்கள் 2 பேர் கைது
22 May 2025புதுடெல்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-யின் இரண்டு முகவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.
-
தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
22 May 2025சென்னை: தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
சென்னை, மும்பையில் அதிகரிக்கும் தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் மேலும் அதிகரிப்பு
22 May 2025புதுடெல்லி: ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
-
இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
22 May 2025வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சு
-
புதிய நகைக் கடன் விதிமுறைகளை ஆர்.பி.ஐ. திரும்பப் பெற வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
22 May 2025சென்னை: “நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உடனே திரும்பப் பெற வேண்டும்.” என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
22 May 2025சென்னை: தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?" என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
-
இன்று முதல் ஏற்காட்டில் கோடை விழா தொடக்கம்
22 May 2025சேலம்: ஏற்காட்டில் கோடை விழா இன்று முதல் தொடங்குகிறது.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கில் விஜய் போட்டி..?
22 May 2025மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் விஜய் களமிறங்க உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
-
மெத்தம்பெட்டமைன் கடத்தல்: சென்னையில் மேலும் 4 பேர் கைது
22 May 2025சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்
22 May 2025புதுடில்லி: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ளது.
-
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
22 May 2025சென்னை: அரக்கோணத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு
22 May 2025சென்னை: அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.
-
ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன் தங்கத்தின் விலை
22 May 2025சென்னை: சென்னையில் நேற்று (மே 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800க்கு விற்பனையானது.
-
தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
22 May 2025நெல்லை: தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
-
சிங்கம்புணரி குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
22 May 2025சிவகங்கை: சிங்கம்புணரி அருகே குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
-
ரயிலில் கடத்தப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
22 May 2025சென்னை: ரயிலில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் ரூ.32 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர்.
-
7 ஐ.பி.எல். தொடரில் 500 ரன்கள்: கே.எல்.ராகுல் புதிய சாதனை
22 May 2025மும்பை: ஐ.பி.எல். வரலாற்றில் 7 முறை ஒரு தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
-
கிரீஸில் நிலநடுக்கம்
22 May 2025ஏதன்ஸ்:கிரீஸ் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பொதுமக்கள் பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.