உலகின் அதிவேக போர் விமானங்களில் முதல் இடத்தில் நார்த் அமெரிக்கன் எக்ஸ்-15. உலகின் அதிவேக போர் விமான மாடல் இதுதான். அதிகபட்ச வேகம் - மேக் 6.72 . இரண்டு ராக்கெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போர் விமான மாடல். 2-வது இடத்தில் லாக்ஹீட் எஸ்ஆர்71 பிளாக்பேர்டு. அதிகபட்ச வேகம் - மேக் 3.0+ இதுவும் லாக்ஹீட் ஏ12 உளவு விமானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. மொத்தமே 32 பிளாக்பேர்டு விமானங்களை தயாரிக்கப்பட்டன. 3-வது இடத்தில் லாக்ஹீட் ஒய்எஃப்-12. அதிகபட்ச வேகம் - மேக் 3.0. எதிரி விமானங்களை இடைமறித்துதாக்கும் தாக்கும் ரகத்தை சேர்ந்தது. அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் உள்ளது. 74,000 அடி உயரத்தில் மேக் 3.2 வேகத்தில் பறக்கும்.மொத்தமே மூன்று விமானங்கள்தான் தயாரிக்கப்பட்டன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் டாப்-10 நகரங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தேர்வான 43 சுற்றுலா தலங்களில் 10-வது இடத்தையும் ஆசியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் 3-வது இடத்தையும் ஜோத்பூர் நகரம் பிடித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரம் அழகிய அரண்மனைகள், கோட்டைகள், பிரமாண்ட மாளிகைகள் போன்றவற்றிற்கு சொந்தமானது. இதனால் இந்தியாவின் சிறந்த சுற்றுலா மையமாக ஜோத்பூர் விளங்குகின்றது.
எவ்வளவு விலை உயர்ந்த காலணியாக இருந்தாலும், அல்லது ஷூவாக இருந்த போதிலும் அதிகபட்சமாக சில ஆயிரங்கள் இருக்கக் கூடும். ஆனால் பல லட்சத்துக்கு காலணிகள் விற்றது என்றால் அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா...நைக் நிறுவனம் தயாரித்துள்ள அந்த ஷூவானது 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் மராத்தான் போட்டியில் பங்கேற்றது என்ற பெருமையை பெற்றதாகும். இதையடுத்து இந்த ஒரு ஜோடி காலணிகள் இந்திய மதிப்பில் ரூ.37.75 லட்சம் தொகைக்கு விற்பனையாகி உலக பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஐஸ்லாந்து நாட்டில் உணவு தேவையை பூர்த்தி செய்ய புதிய முயற்சியாக ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. விலங்குகள், அதற்கான தீவனங்கள், அதை உற்பத்தி செய்வதற்கான தாவரங்கள் என்ற நீண்ட சங்கிலி படிப்படியாக நெருக்கடிக்கு உள்ளாகி வரும் வேளையில் செயற்கை இறைச்சி இவற்றை வெகுவாக குறைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஓ.ஆர்.எஃப் ஜெனிட்டிக்ஸ் நிறுவனத்தின் புரதத் தொழில்நுட்பத்துறை தலைவர் அர்னா ருனாஸ்டாட்டிர் கூறுகையில், மாடுகளின் ஸ்டெம் செல்களை வைத்து ஆய்வுக்கூடங்களிலேயே பீஃப் பர்கர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், வறுத்த இறைச்சியைத் தயாரிக்கும் நிறுவனங்களும் விரைவில் உருவாக உள்ளன. எனவே இவை விரைவில் சந்தைக்கு வரும் என்கிறார்.ஏற்கனவே செயற்கை சிக்கனுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல விண்வெளி செல்லும் வீரர்களுக்கு நாசா வான்கோழியின் செல்களை பயன்படுத்தி கோழி இறைச்சியை தயார் செய்து வருவதும் கவனத்தில் கொள்ளக் கூடியதாகும்.
‘பேபி பூம்‘ என பெயரிடப்பட்டுள்ள, மணிக்கு 2,335 கி.மீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து செல்லும், அதிவேக சூப்பர் சோனிக் பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் விர்ஜின் தொழில் அதிபர் தயாரிக்கிறார். இந்த விமானம் 60 ஆயிரம் அடி உயரம் பறக்க கூடியது. இதில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3 மணி 15 நிமிடத்தில் பயணம் செய்ய முடியும்.
இயற்கை எப்போதும் விந்தைகளால் ஆனது. அதன் புதிர்கள் முடிவற்றதும் கூட. புளோரிடா மற்றும் கரீபியன் கடல் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வகை ஆப்பிள் மரம் தான் உலகிலேயே மிகக் கொடிய நச்சு மரம் என அறியப்படுகிறது. இம் மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் ஆபத்தானது.மன்சிநீல் என்ற இந்த மரத்துக்கு பீச் ஆப்பிள் என்ற பெயரும் உள்ளது. இதன் ஏதேனும் ஒரு பகுதி நம் உடலில் பட்டால் அரிப்பு, சொறி, வீக்கம் ஏற்படும். கண்ணில் பட்டால் அவ்வளவுதான் கண் அவுட். பார்க்க கவர்ச்சியாக இருக்கும் இதன் அழகிய பழத்தை சாப்பிட்டால், சாப்பிட்டவுடனேயே நேரடியாக மேல் உலக பயணம்தான்.அழகுக்கு பின்தான் ஆபத்து என்பது போல பார்க்க அழகாக காட்சியளிக்கும் இந்த மரம் சுமார் 50 அடி வரை கூட வளரக் கூடியது. இதை பற்றி கொலம்பஸ் கூட தனது குறிப்புகளில் சாவின் சிறிய ஆப்பிள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஊழல், மோசடிகளை தோலுரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு பாராட்டு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
16 Nov 2025சென்னை : ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும் என்றும், தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும
-
விவசாயப்பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்த அதிபர் ட்ரம்ப்
16 Nov 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை வித
-
தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக த.வெ.க. ஆர்ப்பாட்டம்
16 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-11-2025.
16 Nov 2025 -
பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணியா? - துணை செயலாளர் நிர்மல் விளக்கம்
16 Nov 2025சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருபோதும் த.வெ.க. இணையாது என்று கட்சியின் துணை செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியானது
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
-
நமது தேசத்தை பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
16 Nov 2025லக்னோ : நாட்டையும், மதத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயமடைந்தவர்களிடம் 7-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை
16 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
-
பீகாரில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க இன்று தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவாரா?
16 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று
-
சத்தீஷ்கர் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண் : முதல்வர் விஷ்ணு தியோ சாய் தகவல்
16 Nov 2025ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.
-
10-வது முறையாக பீகார் முதல்வராக 19-ம் தேதி பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
16 Nov 2025பாட்னா : 10-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 19-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் : ஆர்ப்பாட்டத்தில் புஸ்சி ஆனந்த் பேச்சு
16 Nov 2025சென்னை : வாக்காளர் தீவிர திருத்தத்தைஎதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நேற்று நடைபெற்றது.
-
யுனிசெப் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
16 Nov 2025சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.
-
சமூக நல விடுதியில் மாணவரை தாக்கிய சக மாணவர்கள் விடுதியில் இருந்து நீக்கம்: கலெக்டர் உத்தரவு
16 Nov 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மெக்சிகோவில் அரசுக்கு எதிராக ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
16 Nov 2025மெக்சிகோ-சிட்டி : மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
-
டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு
16 Nov 2025டெல்லி : டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 9மிமீ தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்ட உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் : பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
16 Nov 2025பாட்னா : உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு முகாம்
16 Nov 2025சென்னை : சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
-
அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு: சபரிமலைக்கு பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
16 Nov 2025திருவனந்தபுரம் : அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
வரும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங். கூட்டணி உறுதி : செல்வபெருந்தகை திட்டவட்டம்
16 Nov 2025சென்னை : தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. த.வெ.க. பக்கம் காங்கிரஸ் செல்லும் என கூறப்பட்ட நிலையில் தி.மு.க.
-
பயங்கரவாதம் குறித்த பேச்சு: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் ஆய்வாளர் பணிநீக்கம்
16 Nov 2025உத்தரப் பிரதேசம் : உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயங்கரவாதம் குறித்த பேசிய காவல் ஆய்வாளர் நரேந்திர குமாரின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்ப
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
எஸ்.ஐ.ஆா். பணி தொடர்பான அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
16 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் தி.மு.க.வை கண்டித்து அதி.மு.க. இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: பெண் டாக்டர் உட்பட மேலும் 3 பேர் கைது
16 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பு நவ.30 வரை நீட்டிப்பு : தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
16 Nov 2025சென்னை : டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பு நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.


