முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இரவில் பிறந்தவர்கள் குணம்

சூரிய அஸ்தமனத்திற்கு பின் மற்றும் சந்திரன் உதிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள் நல்ல சிந்தனையாளர்கள். இந்நேரத்தில் பிறந்தவர்கள் கலை மற்றும் இசையில் நல்ல ரசனைமிக்கவர்களாக இருப்பர். இரவு நேரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தாய் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர்.

மின் விளக்கை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் அல்ல

தாமஸ் ஆல்வா எடிசன் மிகப் பெரிய விஞ்ஞானி என்பது நமக்கு தெரியும். அவர் கண்டுபிடித்தவற்றின் பட்டியல் மிக நீளமானது. அதிகாரப்பூர்வமாக 1093 கண்டுபிடிப்புகளுக்கு அவர் காப்புரிமை பெற்றிருந்தார். அவற்றில் ஒன்று மின் விளக்கு. ஆனால் பெரும்பாலான வரலாற்றாய்வாளர்களின் கருத்துபடி அவர் பெரும்பாலான பிறரால் கண்டுபிடிக்கப்பட்டவற்றை தன்னுடையது என காப்புரிமை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதில் மின் விளக்கம் அடங்கும். ஏனெனில் அவர் மின் விளக்கை கண்டுபிடிப்பதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்து வானியல் மற்று ரசாயன விஞ்ஞானி வாரன் டி லா ரூ என்பவர் அதை கண்டுபிடித்து விட்டார் என்பதுதான் ருசிகரமான தகவலாகும்.

செல்ல பிராணிகள்

நாய்கள் மனித உடலில் உள்ள கரிம சேர்மங்களின் (organic compounds) வாசனையை வைத்து மனித உடல் சரியாக வேலை செய்யவில்லை என கண்டுபிடிக்கும் சக்தி உள்ளது என ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.உண்மையில் நாய்களுக்கு மனிதனின் புற்று நோயை கண்டறிய முடியும். அத்துடன் விஞ்ஞானிகள் நாய்களை வைத்து நீரிழிவு மற்றும் வலிப்பு நோய்களையும் கண்டறிய முடியுமா என முயற்சி மேற்கொண்டுள்ளனர். இரு ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால் மனிதர்களுக்கு கைரேகை போல் நாய்க்கு மூக்கில் உள்ள ரேகை ஒவ்வொரு நாய்க்கும் வித்தியாசமாக இருக்கும். மனிதர்களை போலவே நாய்களும் கனவு காணும்.

whats app-ஐ திறக்காமலேயே மெசேஜ் அனுப்ப...

whats app செயலியை திறக்காமலேயே நாம் நமது நண்பர்களுக்கு... நண்பிகளுக்கு மெசேஜ் அனுப்ப முடியுமா.. இதென்ன புது கதையா இருக்கு என்பவர்களுக்குத் தான் இந்த தகவல்.. முடியும்.. எப்படி.. அதற்கு முதலில் Google Assistant  செல்லுங்கள்..அதில் send the whatsapp message to XXX அதாவது XXX என்ற இடத்தில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர் பெயரை கூற வேண்டும்.. பின்னர் அவருக்கு அனுப்ப வேண்டிய வாய்ஸ் மெசேஜையும் பதிய வேண்டும்..இப்போது send என்பதை கிளிக் செய்தால் நண்பரின் வாட்ஸ் அப்புக்கு உங்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கும்.. இது எப்படி இருக்கு...

கயி்ற்றின் மீது நடப்பவர்கள்: ரஷ்யாவில் வினோத கிராமம்

நம்மூர்களில் திருவிழாக் காலங்களில் வித்தை காட்டும் கலைஞர்கள் தெருவில் இரு புறமும் கயிறை கட்டி கூத்தாடுவதை பார்த்திருக்கிறோம். அதையை சற்று உயரமாகவும், நீளமாகவும் மாற்றி வெளிநாடுகளில் சாதிப்பவர்களும் இருக்கிறார்கள். அண்மையில் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர் மீது கயிற்றை கட்டி அசால்ட்டாக நடந்து சென்று சாதனை செய்த வீடியோ நெட்டில் வைரலாக பரவியதை அனைவரும் பார்த்திருக்கலாம்.ஆனால் ஒரு கிராமமே கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா.. என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த கிராமத்தில் முதியவர் தொடங்கி இளையவர் வரை, பெண்கள் தொடங்கி சிறுவர்கள் வரை அனைவரும் கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களாக அசத்து கின்றனர். இந்த வினோத கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா.. ரஷ்யாவில்.. பொதுவாகவே சர்க்கஸ் துறையில் ரஷ்யர்கள் தான் எப்போதும் முன்னிலையில் இருப்பவர்கள். கடந்த நூற்றாண்டில் சர்க்கஸ் தொழில் செழித்து கிடந்த கால கட்டத்தில் ரஷ்யர்கள் உலகம் முழுவதையும் வியாபித்திருந்தனர். தற்போது சர்ககஸ் தொழில் படிப்படியாக குறைந்து விட்டது.மக்களுக்கும் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவது இல்லை. அது கிடக்கட்டும்.. கயிற்றின் நடக்கும் அந்த கிராமம் Russia’s Dagestan autonomous republic என்று சொல்லப்படும் பிராந்தியத்தில் உள்ள Tsovkra-1 என்ற சிறிய கிராமம் தான் அது. அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுமே கயிற்றில் நடக்கும் திறன் பெற்றவர்கள் என்பதாலேயே அது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலத்தில் 3 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டிருந்த அந்த கிராமம் தற்போது 300 பேராக குறைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கயிற்றின் மேல் நடக்கும் மரபை அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பனிஉருகும் அபாயம்

பூமிப்பந்தின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகா முழுவதும் பனிப்பாறைகளைக் கொண்ட கடல் ஆகும். கிரீன்ஹவுஸ் வாயுக்களாலும், வெப்பமயமாகும் கடலாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வரும் வேளையில், மேற்கு அண்டார்டிகாவில் 91 புதிய எரிமலைகள் இருப்பதை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் மூலம் எப்போது வேண்டுமானாலும் பனிப்பாறைகளுக்கு பாதிப்பு வரலாம். இதனால் பனி உருகி கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. இது உலகிற்கு மிக முக்கியமான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. மேலும், இந்த நூற்றாண்டு பூமியின் தென் துருவத்திற்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருவதாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago