முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

400 ஆண்டுகளாக செதுக்கப்பட்ட சிலைகள்

பொதுவாகவே ஒரு சிலையை வடிக்கவே பல மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் மலையின் மீது மிக பிரமாண்டமான சிற்பங்களை வடிப்பது என்றால்... எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்... சீனாவின் ஹெனான் மாகாணத்தில் லுவோயாங்கிற்கு தெற்கே 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு புத்த குகை வளாகமான லாங்மென் க்ரோட்டோஸ் பண்டைய சீன சிற்ப கலையின் நேர்த்தியான பிரதிநிதித்துவத்தை எடுத்து சொல்கிறது. இங்கு மிகப் பெரிய புத்தர் சிலை 57 அடி உயரத்தில் உள்ளது. இப்பகுதியில் எழுத்துக்கள், சிற்பங்கள் பொறிக்கப்பட்ட கற்கள் 2,500 (ஸ்டெலாக்கள்), ஸ்தூபி வடிவிலான 60 பகோடாக்களும் உள்ளன.  அவற்றில் பழமையானதும் மிகப்பெரியதும் குயங்டாங் ஆகும்.  இவற்றின் கட்டுமானம் 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேரரசர் சியாவோன் ஆட்சியில் தொடங்கியது. ​​வெய் வம்சம் இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளது. . பேரரசர் சியாவோன் புத்த மதத்தை தீவிரமாக பின்பற்றியுள்ளார். வெய் வம்சத்திற்குப் பிறகு, டாங் மற்றும் சாங் உள்பட தொடர்ச்சியாக ஆறு வம்சங்கள் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குகைகளில் சிற்பங்கள் செதுக்குவது தொடர்ந்துள்ளது. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதல்லவா...  இதை 2000 ஆவது ஆண்டில்  உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.

யோகா நித்ரா

யாரெல்லாம் தூக்கத்தை தொலைக்கிறார்களோ அவர்களுக்கு யோகா நித்ரா ஆசனம்  உதவும். 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்தால் 2 மணி நேரம் அதிகமான தூக்கத்தை பெறலாம்.  ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும்.

முறையான பயிற்சி

தொடை பகுதியை வலிமையாக்கும் பயிற்சிகள் ஐஸோடானிக், ஐஸோமெட்ரிக் என்று இரு வகைப்படும். பயிற்சியின்போது குறிப்பிட்ட நிலையில் நிறுத்தி, தசைகளுக்கு இறுக்கம் தந்து வலு சேர்ப்பது ஐஸோமெட்ரிக். இது முன் தொடையை வலிமையாக்கும். தசைக்கும் மூட்டுக்கும் தொடச்சியாக அசைவு கொடுத்து வந்தால் அது ஐஸோடானிக். இது பின் தொடையை வலுப்படுத்தும்.

இன்ஸ்டன்ட் டீ பேக் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது தெரியுமா?

பெரும் பாலும் ரயில் பயணங்களின் போது தேநீர் விரும்பிகளுக்கு கிடைக்கக் கூடிய அனுபவம்தான் இன்ஸ்டன்ட் டீ பேக். உடனடி தேயிலை பொட்டலம். சூடான நீரில் அல்லது பாலில் அதை அமிழ்த்தியவுடன் சுடச்சுட தேநீர் தயார். இது எப்போது யாரால் கண்டு பிடிக்கப்பட்டது தெரியுமா... அதுவும் மிகவும் தற்செயலாகத் தான் இது வடிவமைக்கப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..1908 இல் நியூயார்க் நகரைச் சேர்ந்த தேயிலை வியாபாரி தாமஸ் சுல்லிவன் என்பவர் தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கு சிறிய சிலிக்கன் பைகளில் தேநீரை பார்சலாக அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதை பெற்ற வாடிக்கையாளர்கள் அதை பிரிக்காமல் அப்படியே சூடான நீர் அல்லது பாலில் கலக்க வேண்டும் என்று கருதி அதையும் சேர்த்து போட்டு கொதிக்க வைத்து பருகியுள்ளனர். இது சிறப்பாக இருப்பதாகவும் அவருக்கு கடிதமும் எழுதினர். பிறகென்ன அவரது பிசினஸ் மூளை இதை சிக்கென பிடித்துக் கொண்டு குட்டி குட்டி இன்ஸ்டன்ட் டீ பேக்குகளை வடிவமைத்து பேடன்ட் உரிமை பெற்று விற்கத் தொடங்கி... தற்போது நம்மூர் ரயில் நிலையம் வரையிலும் வந்து விட்டது என்றால் ஆச்சரியம் தானே..

வயதை தாண்டி ...

ஜெர்மனியைச் சேர்ந்த ஜொஹன்னா குவாஸ் என்ற 91 வயது பாட்டி சிங்கப்பூரில் நடந்த ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் செய்துள்ளார். 3 வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்து வரும் இவர், 70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தான் திறம்பட இருப்பதற்கு ஜிம்னாஸ்டிக்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

கூகுள் எர்த்தில் நெட்டிசனிடம் சிக்கிய சுமார் 425 அடி நீளமுள்ள பாம்பு எலும்பு கூடு

நமது புராணங்களில் ஆதிசேஷன், காளிங்கன், வாசுகி என ஏராளமான பாம்புகளை பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை உருவத்திலும், அளவிலும் மிகவும் பிரமாண்டமானவை. அதே போல அறிவியலிலும் அழிந்து போன உயிரினங்கள் பட்டியலில் சுமார் 40 அடிக்கும் மேலான நீளமுள்ள டைட்டானோவா வகை பாம்புகள் பற்றி குறிப்பிடப்படுகின்றன. இந்நிலையில் அண்மையில் நெட்டிசன் ஒருவர் கூகுள் எர்த் வழியாக பார்த்த போது பிரான்ஸ் நாட்டின் கடற்கரை ஒன்றில் சுமார் 400 அடி நீளமுள்ள பாம்பு எலும்புக்கூடு கிடப்பதாக பதிவிட்டிருந்தார். இது டைட்டானோவாவா என நெட்டிசன்கள் அதிகமாக  பகிர்ந்து விவாதித்தனர். இறுதியில் பிரான்சில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற Estuaire ஓவிய கண்காட்சிக்காக சீனாவை சேர்ந்த ஓவியர் ஹூவாங் யோங் பிங் என்பவர் 425 அடி நீளத்தில் உருவாக்கி கடற்கரையில் அமைத்திருந்த பாம்பு எலும்புக்கூடு சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago