காலையில் காபி, டீக்கு பதிலாக, பழச்சாறுகளை பருகுபவர்கள் தான் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. லஸ்ஸி, பாதாம் பால், பழச்சாறுகள், எருமை பால், வாழைப்பழம், ஸ்மூத்தி இவற்றை காலையில் எடுக்கக்கூடாது. ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நமது புராணங்களில் ஆதிசேஷன், காளிங்கன், வாசுகி என ஏராளமான பாம்புகளை பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை உருவத்திலும், அளவிலும் மிகவும் பிரமாண்டமானவை. அதே போல அறிவியலிலும் அழிந்து போன உயிரினங்கள் பட்டியலில் சுமார் 40 அடிக்கும் மேலான நீளமுள்ள டைட்டானோவா வகை பாம்புகள் பற்றி குறிப்பிடப்படுகின்றன. இந்நிலையில் அண்மையில் நெட்டிசன் ஒருவர் கூகுள் எர்த் வழியாக பார்த்த போது பிரான்ஸ் நாட்டின் கடற்கரை ஒன்றில் சுமார் 400 அடி நீளமுள்ள பாம்பு எலும்புக்கூடு கிடப்பதாக பதிவிட்டிருந்தார். இது டைட்டானோவாவா என நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து விவாதித்தனர். இறுதியில் பிரான்சில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற Estuaire ஓவிய கண்காட்சிக்காக சீனாவை சேர்ந்த ஓவியர் ஹூவாங் யோங் பிங் என்பவர் 425 அடி நீளத்தில் உருவாக்கி கடற்கரையில் அமைத்திருந்த பாம்பு எலும்புக்கூடு சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
சிறுவயதில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் பின்னர் தவறு செய்தாலும் இளமை காலத்தில் உடல் தாங்கிக் கொள்ளும். அதற்காக என் உடல் பாறையையே கரைத்து விடும் என்று முட்டாள்தனமாகவும் நினைக்கக் கூடாது. எல்லாம் 40 வயது வரைதான். அதற்கு பிறகு சுகர், பிர்ஷர் என்று எல்லாம் வந்து விடும். தவறான பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாகியிருந்தால் அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று இப்போதே யோசியுங்கள்.
பண்டைய காலத்தை பற்றி தெரிந்து கொள்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை எகிப்து நாட்டின் மம்மிக்கள். தற்போது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்கள் மூலம் பண்டைய எகிப்து மம்மிக்களின் முகங்களை விஞ்ஞானிகள் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள மார்க்ஸ் பிளாங் இன்டிடியூட் ஆஃப் சையின்ஸ் ஆஃப் ஹியூமன் ஹிஸ்டரி மையமும் துபின்சென் பல்கலை கழகமும் இணைந்து இப்பணியை மேற்கொண்டுள்ளன. இதற்காக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மம்மிக்களின் உடலிலிருந்து டிஎன்ஏ சாம்பிள்கள் தொகுக்கப்பட்டு முக மாதிரிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற முயற்சி இதுவே முதன்முறையாகும். இதன் மூலம் பண்டைய எகிப்து நாகரிகத்தின் அசலான முகங்களை நம்மால் இனம் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் அதிக பேஸ்புக் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் மொத்தம் 24.1 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 24 கோடிதான். கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டார்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளதாம்.
மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ள, இஸ்ரேலைச் சேர்ந்த ’எலெக்ட்ரோட்’ (Electroad) எனும் நிறுவனம் புதிய தீர்வை முன்வைத்துள்ளது.எலெக்ட்ரிக் கார்கள் பயணிக்கும் போது ஒயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் உதவியுடன் சாலைகள் மூலம் சார்ஜ் செய்யும் முறை குறித்து அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


