முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்

இந்தியாவைப் பற்றி பேசினால், உலகிலேயே அதிக வாழைப்பழம் (Banana) உற்பத்தி செய்யும் நாடு. இங்கு சுமார் 4.5 லட்சம் ஹெக்டேரில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 180 லட்சம் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகில் காணப்படும் 300 வகையான வாழைப்பழங்களில் சுமார் 30-40 வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. செவ்வாழை பழம் உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்த எண்ணற்ற பல மருத்துவ குணங்களை கொண்டது.  செவ்வாழையில் பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, தொலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.  நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் 1 முறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர்  கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

ஆன்மீக ஸ்தலம்

தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், சென்னை முதலிய பல இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

உற்ற நண்பன்

மிரோ எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோ முதியோர், நோயாளிகளுக்கு உதவும் விதமாக லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. நாய், பசு, ஆடு போன்ற உருவத்தில் உள்ள இந்த ரோபோ முதியவர்கள், நோயாளிகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பேச்சுத் துணையாக செயல்படுகிறது.

3500 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மியை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்த விஞ்ஞானிகள்

உலக அதிசயங்களில் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மிகளும் மக்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருபவை.  மம்மிக்களை ஆய்வு செய்யும்போது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக 3500 ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு கண்டடைந்தனர் என்பது விளங்காத மர்மமாகவே உள்ளது. இதனால் மம்மிக்களை ஆய்வு செய்யும் போது அவற்றை திறப்பதால் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தற்போது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மம்மிக்களை திறக்காமலேயே அவற்றை டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் ஆய்வு செய்யும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து  பிரமிடிலிருந்து கடந்த 1881 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட அமேன்ஹோடெப் என்ற மன்னரின் மம்மியை டிஜிட்டல்  முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல்வேறு அதிசய தகவல்கள் வெளியாகின. அவர் இறக்கும் போது அவருக்கு வயது 35.  சுமார் 5 அடி உயரம் கொண்ட அந்த மன்னரின் பற்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளன.  உடலை சுற்றியிருந்த துணிக்குள் மன்னருக்கு தங்கத்தாலான ஆடையும் அணிவிக்கப்பட்டிருந்தது. உடலில் காயங்கள் இல்லாததால் அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தெரியவில்லை. இவர் கிமு 1525 முதல் 1504 வரை 21 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இதனால் இவர் மிகவும் இள வயதிலேயே முடி சூடி இருக்கலாம். இன்றைக்கு மருத்துவம் தொழில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ள போதிலும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில் நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு தெரிந்து வைத்துள்ளனர் என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

உலக சாதனை

டொரண்டோ நகரில் 404 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல மாறுவேடம் அணிந்து வந்து உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்னர் 99 பேர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல் இருந்ததே சாதனையாக இருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 404 பேரும் - ஐன்ஸ்டீன் போலவே பிளேசர், டை வெள்ளை விக் மற்றும் மீசை அணிந்திருந்தனர்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணம் செய்யும் நவீன மின்சார கார்

-கார்பன் வெளிப்பாடு, சுற்றுச்சூழல் மாசு தாக்கத்தால் பருவ நிலை மாறுபாடு என ஏகப்பட்ட பிரச்னைகளை இன்றைய பூமி சந்தித்து வருகிறது. இதை மாற்றுவதற்காக உலக நாடுகள் பலவும் எரிபொருள் வாகனத்திலிருந்து மின் வாகனத்தை நோக்கி மாறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் கடந்தாண்டு டீசல் வாகனங்களின் விற்பனையை மின் வாகனங்களின் விற்பனை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணம் செய்யக் கூடிய காரை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.தற்போதைய கார்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 400 கிமீ வரை மட்டுமே ஓட்டி செல்லலாம். இந்த சூழலில் தான் ஜெர்மன் நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ செல்லும் வரையிலான கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. VISION EQXX என்ற மாடலில் இதை அறிமுகம் செய்துள்ளது.அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மின்னணு கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த கார் மற்ற கார்களை விட எடை குறைந்த காராகும். மேலும் இதன் கூரை சோலார் பேனலால் அமைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 25 கிமீ வரை செல்லலாம் என்றும் சொல்லப்படுகிறது.காருக்குள் கண்ணாடி திரையில் ஹோலோ கிராம் இமேஜிங், ஜிபிஎஸ் டிராக்கிங் என எக்கச்சக்க வசதிகள் உள்ளன. மேலும் வேகத்துக்கும் குறைவிருக்காது என சொல்லப்படுகிறது. இனி புதிய எதிர்காலத்துக்கான நவீன வாகனமாக இது அமையும் என எதிர்பார்க்கலாம். -

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago