முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மாதுளை நன்மை

இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

பெண்களை விட ஆண்கள் நிறக்குருடர்கள்

இந்த உலகை வண்ண மயமாகவும், அதன் 8 பரிமாணங்களுடனும் காணும் காட்சிதான் உள்ளத்துக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் அறிவியல் உள்ளத்தை பார்க்காது. உண்மையை மட்டும்தான். அப்படி பார்த்த போது ஒரு ஆச்சரியப்படும் செய்தி தெரியவந்தது. அது என்னவென்றால் பெண்களை காட்டிலும் ஆண்கள் சற்றே நிறக்குருடர்கள் என்பதுதான் அது. அதாவது பெண்களை காட்டிலும் நிறங்களை உணர்ந்து கொள்வதில் ஆண்கள் சற்று குறைச்சல்தான். இதற்கு அவர்களது மரபணுவில் காணப்படும் எக்ஸ் குரோமோசோம்தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது, பெண்களுக்கு 2 எக்ஸ் குரோமோசோம்கள் இருப்பதால் ஒன்றின் குறைபாட்டை மற்றது சரி செய்து விடுமாம். ஆனால் பாவம் ஆண்களுக்கு இருக்கும் ஒரு எக்ஸ் குரோமோசோமும் மக்கர் பண்ணினால், உலகம் கருப்பு  வெள்ளையாகத்தான் தெரியுமாம். என்ன கொடுமை சார் இது..

சே குவேராவுக்கு நேரு

உலக வரலாற்றில் பல்வேறு வேறுபட்ட ஆளுமைகள் சந்தித்துள்ளனர். அவை உலக வரலாற்றையே மாற்றி அமைத்தும் உள்ளன. அதில் இன்றைக்கும் உலக இளைஞர்களின் கவர்ச்சி நாயகனாக திகழும் சே குவேரா முக்கியமானவர். கியூபாவின் நீண்ட கால அதிபரான பெடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான அவரை கியூப புரட்சி கால கட்டத்தின் போது தங்களுக்கு ஆதரவு அளித்த முக்கிய ஆசிய தலைவரான அன்றைய இந்திய பிரதமர் நேருவை சந்திக்க அனுப்பி வைத்தார். இருவரும் 1959 ஜூன் 30 இல் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது சே குவேராவுக்கு நேரு யானை தந்தத்தால் கைப்பிடி செய்யப்பட்ட குறுவாளை பரிசாக வழங்கினார். அது இன்னும் ஹவானாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆழ்கடலில் வாழும் அரிய வகை பேய் சுறா கண்டுபிடிப்பு

நியூசிலாந்து விஞ்ஞானிகள் ஆழ்கடலில் வாழும் ஒரு அரிய வகை பேய் சுறா மீனை கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் சிறிய மீன்வகை என்றும், ஆழ் கடலில் நிழலான பகுதிகளில் வாழக்கூடியது என்றும் தெரிவித்துள்ளனர். இதை தென் தீவுக்கு அருகே, சுமார் 1.2 கி.மீ. ஆழ்கடலில் கண்டுபிடித்து உள்ளனர், என்று தெரிவித்துள்ளனர். இந்த பேய் சுறா மீன்கள் - சிமேரா என்றும் அழைக்கப்படும் என்றும், இது மிகவும் அரிதாகவே காணப்படும், அதிலும் அவற்றின் குட்டிகளை பார்ப்பது இன்னும் அரிதானது. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள இந்த பேய் சுறா மீன் இளம் பருவ நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த வகையான மீன் குட்டிகளின் இளம் பருவ நிலையை பற்றி அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

காதலிக்காக பீச்சில் நிரப்புவதற்காக மணலை வாங்கியவர் யார் தெரியுமா?

யாரும் இதுவரை பார்க்காத போதிலும் உலக அழகி கிளியோபாட்ரா என்பது வழக்கமாக சொல்லப்படும் விசயம். ஆனால் அதே நேரத்தில் அவள் மிகவும் ஆற்றல் மிக்க பேரரசியாக விளங்கினாள். அவளது காதலன் மார்க் ஆண்டன் என்பது அனைவருக்கும் தெரியும். அவன் தனது காதலி கிளியோபாட்ராவை மகிழ்விப்பதற்காக எகிப்திலிருந்து மணலை வரவழைத்தான். எதற்கு தெரியுமா துருக்கியில் உள்ள செடிர் தீவில் உள்ள பீச்சை மணலால் நிரப்பி காதலியை மகிழ்விப்பதற்காக. தற்போதும் செடிர் தீவு கிளியோபாட்ரா தீவு என்றே அழைக்கப்படுகிறது. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... அதிலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு காதல் தோன்றினால் என்னவெல்லாம் நடக்கும் பாருங்கள்.

உணவு தேவையை பூர்த்தி செய்ய செயற்கை இறைச்சி - புதிய முயற்சி

ஐஸ்லாந்து நாட்டில் உணவு தேவையை பூர்த்தி செய்ய புதிய முயற்சியாக ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. விலங்குகள், அதற்கான தீவனங்கள், அதை உற்பத்தி செய்வதற்கான தாவரங்கள் என்ற நீண்ட சங்கிலி படிப்படியாக நெருக்கடிக்கு உள்ளாகி வரும் வேளையில் செயற்கை இறைச்சி இவற்றை வெகுவாக குறைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஓ.ஆர்.எஃப் ஜெனிட்டிக்ஸ் நிறுவனத்தின் புரதத் தொழில்நுட்பத்துறை தலைவர் அர்னா ருனாஸ்டாட்டிர் கூறுகையில், மாடுகளின் ஸ்டெம் செல்களை வைத்து ஆய்வுக்கூடங்களிலேயே பீஃப் பர்கர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், வறுத்த இறைச்சியைத் தயாரிக்கும் நிறுவனங்களும் விரைவில் உருவாக உள்ளன.  எனவே இவை விரைவில் சந்தைக்கு வரும் என்கிறார்.ஏற்கனவே செயற்கை சிக்கனுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல விண்வெளி செல்லும் வீரர்களுக்கு நாசா வான்கோழியின் செல்களை பயன்படுத்தி  கோழி இறைச்சியை தயார் செய்து வருவதும் கவனத்தில் கொள்ளக் கூடியதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago