இயற்கை எப்போதும் விநோதங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதில் போபாப் எனப்படும் மரமும் ஒன்று. இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா... தென் ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் வாழக் கூடியவை. போபாப் (Baobab) என்ற இந்த மரங்களை அங்கே Gentle Giants என்கின்றனர். இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால் வறட்சியை தாக்குபிடித்து வளர்பவை. அதே நேரத்தில் மண்ணிலிருந்து எடுக்கும் நீரை இந்த மரங்கள் சேமித்து வைத்துக் கொள்கின்றன. மழை இல்லாத வறண்ட காலங்களில் அப்பகுதி மக்கள் இந்த மரத்தில் துளை போட்டு நீரை எடுத்துக் கொள்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... சிலர் இவற்றை தமிழகத்துக்கும் கொண்டு வந்தனர். மதுரை பார்ச்சூன் ஹோட்டல், பெங்களூரு அருகே சாவனூரில் 500 ஆண்டுகள் பழமையான மரம், சென்னை அடையாறு தியோசபிகல் வளாகத்தில் பராமரிக்கப்படும் இவற்றை நாம் பார்க்கலாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
டினோசர் என்றாலே பெரியவர்கள் தொடங்கி சிறிவர்கள் வரை அனைவருக்கும் ஆர்வம் தான். ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து அழிந்து போன உயிரினங்களில் மிகப் பெரியவை டினோசர்கள். அவை குறித்த ஆய்வுகள் உலகம் முழுவதிலும் நடைபெற்று வருகின்றன. அதில் அண்மையில் நடைபெற்ற ஆய்வில் டினோசர்கள் 90 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு அண்டார்டிகா பகுதிகளில் நடமாடியது தெரியவந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஆல்ப்ரெட் வேக்னர் கல்வி நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன் முடிவுகள் நேச்சர் இதழிலும் வெளியிடப்பட்டன. 90 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகா பிரதேசம் இப்போது போல பனி படர்ந்த பிரதேசமாக இல்லாமல் அடர்ந்த வனமாக இருந்தததாக சொல்லப்படுகிறது. அவற்றில் டினோசர்கள் நடமாடின என்கிறது அந்த ஆய்வு.
தற்போது, மனித மூளையில் உருவாக்கப்படும் அலைகளை உணர்ந்து செயற்படக்கூடிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதன்மூலம் இருந்த இடத்திலிருந்தே தமது எண்ணங்களால் ரோபோக்களுக்கு மனிதர்கள் கட்டளை இட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை எம்ஐடி பல்கலைக்கழகத்தின் கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். அதேப்போல் மனிதர் களிடம் கேள்வி கேட்க கூடிய புதிய வகை ‘ரோபோ’ க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடும் ‘ரோபோ’ குழப்பமான சூழ்நிலையில் தனது சந்தேகங்களை புத்திசாலி தனமாக கேள்விகளாக கேட் கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘ரோபோ’ எனும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் மேலோங்கிய நிலையில், ஜெர் மனியின் விட்டன் பெர்க் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் பணி யில் ‘ரோபோ’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அது பக்தர் களுக்கு ஆசி வழங்குவது கூடுதல் அம்சம்.ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் மார்டின் லூதர் பிராட்டஸ் டன்டின் 500-ம் ஆண்டு நினைவை குறிக்கும் வகையில் இந்த ‘ரோபோ’ பாதிரியார் நியமிக் கப்பட்டுள்ளார். இதற்கு ‘பிளஸ்யூ -2’ என பெயர். இதில் தொடுதிரையுடன் கூடிய பெட்டி, 2 கைகள் மற்றும் 2 கண்களுடன் தலை, டிஜிட்டல் வாயும் உள்ளது. பக்தர்களை இது ஆண் மற்றும் பெண் குரலில் வாழ்த்தி வரவேற்கிறது. மேலும் தனது 2 கைகளை உயர்த்தி அவர்கள் விரும்பும் மொழியில் ஆசி வழங்குகிறது.
மலைச்சாலைகள் எப்போதும் நம்மை மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்துபவைதான். ஆனால் அதே நேரத்தில் மிக அபாயகரமான இடங்களில் கூட வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளை கண்டால் யாருக்கும் லேசாக ஜெர்க் ஆகும் தானே.. ஆனால் சீனாவில் உள்ள சாங்சி மாகாணத்தில் உள்ள Shenlongwan என்ற பகுதிக்குச் செல்லும் மலைச்சாலை சற்றே வித்தியாசமானது. அது என்ன என்கிறீர்களா.. 1526 மீட்டர் நீளமே கொண்ட இந்த மலைச் சாலையை அப்பகுதி கிராம மக்களே சேர்ந்து சுமார் 15 ஆண்டுகளாக மலையை குடைந்து உருவாக்கியுள்ளனர். கடந்த 1985 இல் தொடங்கிய பணிகள், இதன் இறுதி கட்ட பணிகள் கடந்த 2000 இல்தான் முடிவடைந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கும் நீல நிற கண்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். உள்ளூர் வழக்கில் இதை நாம் பூனைக் கண் என்று குறிப்பிடுவோம். சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் மனிதர்களுக்கு பொதுவாக அடர் பழுப்பு நிற கண்களே காணப்பட்டன. கருங்கடல் பகுதியில் உள்ள மனிதர்களிடம் மரபணுவில் ஏற்பட்ட ஒரு சிறிய மாற்றம் காரணமாக அடர் பழுப்பு நிறத்திலிருந்து நீல நிறக் கண்கள் உருவாகின. இது பின்னர் படிப்படியாக பல்வேறு பிரதேசங்களுக்கும் பரவின. தற்போது உலக மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பேர் பூனை கண் எனப்படும் நீல நிற கண்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –06-02-2026
06 Feb 2026 -
நெல்லை வடக்குபச்சையாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
06 Feb 2026நெல்லை, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்குபச்சையாறு அணையில் இருந்து இன்று முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வ
-
தருமபுரி: வாணியாறு அணையில் 55 நாள்களுக்கு நீர் திறக்க உத்தரவு
06 Feb 2026தருமபுரி, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூற
-
நேபாளத்தில் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
06 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் திருமணத்திற்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
-
பாகிஸ்தான்: மசூதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் 31 பேர் பலி - பலர் படுகாயம்
06 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பலியானார்கள் மேலும் இதில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
06 Feb 2026சென்னை, தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனையானது.
-
மியான்மரில் நிலநடுக்கம்
06 Feb 2026நைப்பியிடா, மியான்மரில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாக்.கில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
06 Feb 2026லூகூர், பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு தனித்தனி உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் 24 பயங்கரவாதிகள் சுட்
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மின்னஞ்சலில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்
06 Feb 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க த.வெ.க.
-
'புராஜெக்ட் வால்ட்' திட்டம் மூலம் பாகிஸ்தானில் 13 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அமெரிக்கா முடிவு
06 Feb 2026நியூயார்க், 'புராஜெக்ட் வால்ட்' என்ற திட்டத்தின் மூலம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கங்களை மேம்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
-
சிங்கப்பூரில் ரூ. 1.9 கோடி மோசடி: இந்திய வம்சாவளிக்கு சிறை
06 Feb 2026சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.
-
தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
06 Feb 2026சென்னை, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
-
பீகார் தேர்தல் முடிவை எதிர்த்த பிரசாந்த் கிஷோர் கட்சி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
06 Feb 2026பாட்னா, பீகார் தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த பிரசாந்த் கிஷோர் கட்சியின் மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து தள்ளுபடி செய்தது.


