முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மழை வாசனையை நாம் விரும்ப காரணம் என்ன?

பொதுவாக தண்ணீருக்கு எந்த சுவையும் மணமும் கிடையாது. ஆனால் மழை பெய்யும் போது மட்டும் ஏன் ஓர் அற்புதமான வாசனை ஏற்படுகிறது. அந்த மழை வாசனை நம்மை ஈர்ப்பது ஏன். ஏனெனில் மழை பெய்யும் போது மண்ணில் உண்டாகும் ஈரத்தால் ஜியோஸ்மின் என்கிற ஒரு வகை பாக்டீரியா உருவாகிறது. அதுதான் மழைக்கு வாசனையை கொடுக்கிறது. இந்த மழை வாசனைக்கு பெட்ரிசோர் என்ற பெயரும் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

பேக்ஸ் இயந்திரம் எப்படி உருவாச்சு தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பெயின் (Alexander Bain) என்பவர் 1843 இல் ஒரு எந்திரத்தை உருவாக்கினார். அவர் பல சோதனைகளையும் அதில் மேற்கொண்டார். அதில், செம்புக் கம்பிச்சுருளில் வைக்கப்படும் பேனா எழுதுவதை, சுருளின் மற்றோர் இடத்தில் இருந்த 2 ஆவது பேனா, அதை நகல் எடுக்கத் துவங்கியது.  பின்னர் 1851இல் ஃபிரெட்ரிக் பேக்வெல் (Fredric Bakewell) என்பவர் லண்டனில் நடைபெற்ற உலக வணிகப் பொருட்காட்சியில் இதை மக்களிடம் விளக்கிக் காட்டினார். தொடர்ந்து 1862 இல் இத்தாலி மருத்துவர் ஒருவர் இக்கருவியை ஒத்த வேறோர் கருவியை உருவாக்கி அதற்கு பான் டெலிகிராஃப் (Pan telegraph) எனப் பெயரிட்டார். இக்கருவி பெயின் உருவாக்கிய கருவியின் கோட்பாட்டில் அமைந்திருந்தது. "பிரெஞ்ச் அஞ்சல் மற்றும் தந்திச் சேவை" என்ற நிறுவனம் இதை 1856 முதல் 1870 வரை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தியது.ஆர்தர் கோர்ன் (Arthur Korn) என்ற ஜெர்மன் விஞ்ஞானி 1902இல் புகைப்படங்களை அனுப்பக்கூடிய ஓர் இயந்திரத்தை உருவாக்கினார். இது புதிய பேக்ஸ் இயந்திரத்தின் அசலான முன்னோடி வடிவமாக திகழ்ந்தது. இதைக் கண்டறிந்த பெருமை அவரையேச் சேரும். அந்நாளில் பல ஜெர்மன் செய்தித்தாள் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி வந்தன. பின்னர் 1925ஆம் ஆண்டு ஒரு பிரான்ஸ் விஞ்ஞானி இதன் ஒளிப்படத் திறனை அதிகரித்து இக்கருவியை மேம்படுத்தினார். இந்த எந்திரமே சிற்சில மாறுதல்களுடன் புதிய பேக்ஸ் இயந்திரமாக தற்போதுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

உலகிலேயே அரிய வகையான இந்த குதிரையை பற்றி உங்களுக்கு தெரியுமா?

குதிரை என்றாலே அதன் உயரம், கம்பீரம், திமிர் ஆகியவைதான் நமக்கு தெரியும். ஆனால் உலகிலேயே அழிந்து வரும் இனமான, மிக சிறிய அரிய வகை குதிரை இனத்தை அர்ஜென்டினாவைச் சேர்ந்த விவசாய குடும்பத்தினர் 19 நூற்றாண்டின் மத்தியில் மீண்டும் உருவாக்கினர். அவர்களின் சாதனையை பாராட்டும் வகையில் அந்த குதிரை இனத்துக்கு Falabella என அந்த குடும்பத்தினரின் பெயரே சூட்டப்பட்டது. இந்த குதிரையின் மொத்த உயரம் எவ்வளவு தெரியுமா வெறும் 70 செமீ தான். அதாவது ஒரு ஆட்டின் உயரம் கூட இருக்காது. தற்போது இந்த குட்டை ரக குதிரை இனத்தை மேம்படுத்தி வளர்ப்பதையே அர்ஜென்டினாவில் பலர் செய்து வருகின்றனர். ஒரு பெரிய குதிரையின் சிறிய பொம்மை வடிவில் காட்சியளிக்கும் இந்த குதிரைகளை பார்க்க பார்வையாளர்கள் திரண்டு வருகின்றனர்.

இந்தியாவில் இ-ரெயில்

விரைவில் இ-ரெயில் மூலம் மணிக்கு 700 மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய ஹைப்பர்லூப் ஒன் திட்டம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. எலான் மஸ்க் என்பவரின் கற்பனையில் உருவான இந்த ஹைப்பர்லூப் பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து வணிக ரீதியாக இந்த போக்குவரத்தை செயல்படுத்தவுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இந்த  இ-ரயில் போக்குவரத்தை செயல்படுத்த 5 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மணிக்கு 1100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் இந்த திட்டம் கட்டமைக்கப்பட உள்ளது. ஹைப்பர்லூப் ஒன் திட்டத்தின் மூலம் 884 மைல் கொண்ட டெல்லி - மும்பை இடையேயான தூரத்தை வெறும் 80 நிமிடங்களில் கடக்க முடியும். வெற்றிகரமான இறுதிகட்ட சோதனைகளை தொடர்ந்து விரைவில் இத்திட்டம் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாலை எழுதல்

அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், அதிகாலையிலேயே இவர்கள் உறக்கம் கலைந்து எழுவதால்  மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதில்லையாம். இவர்கள், சராசரியாக காலை 6.58 மணிக்கு எழுவதாக தெரிவித்துள்ளனர்.

உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மைக்ரோ சாப்டின் ஹோலோ லென்ஸ்

உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மைக்ரோ சாப்டின் ஹோலோ லென்ஸ் கண் கண்ணாடிகள் தனது இரண்டாவது எடிசனை வெலியிட்டுள்ளது. நிஜ உலகத்துடன் ஹோலோ கிராம் என்னும் மாய உலகத்தையும் இணை்த்து காட்சிகளையும், விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பத்தின் மூலம் அவற்றின் கேமிங் வசதிகள் மூலமாக பல்வேறு பரிமாணங்களை புரிந்து கொள்ளவும் இந்த கண் கண்ணாடிகள் உதவும். முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த விந்தையான கண்ணாடிகள் பல்வேறு துறையினருக்கும் டிஜிட்டல் இமேஜ்கள் மூலம் ஒத்திகை பார்ப்பதற்கு மிக சிறந்த கருவியாக அமையும். அதே நேரத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பத்துடன் கூடிய பொழுது போக்கு சாதனமாகவும் இருக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago