முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மாவிலையின் மகிம்மை

மாவிலைத் தோரணத்தை வீட்டு வாசலில் கட்டுவதால், அவை கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் நமக்கு கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும் சக்தி மாவிலைக்கு உண்டு. மேலும் வீட்டு வாசலும் பச்சை பசேல் என மங்களகரமாக இருக்கும்.

மிரட்டும் மலசேஷ்யா

குளிர் காலத்தில் பொடுகு தொல்லை அதிகரிப்பதோடு, தலையில் மலசேஷ்யா என்ற பூஞ்சை தொற்றும் உருவாகும். முகம், மார்பு, முதுகு ஆகிய உடலின் பிற பாகங்களுக்கும் பூஞ்சைத் தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு தீர்வு வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் மிதக்கும் சந்தை

இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை கொல்கத்தாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பட்டூலியில் கடந்த 2018 இல் திறக்கப்பட்டது. இந்தச் சந்தையில் 200 கடைகளுக்கு மேல் உள்ளது. கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் கட்டமைத்துள்ள இந்தச் சந்தையில் படகுகள் மூலமாகப் பட்டூலியில் உள்ள ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கடைக்காரர்கள் பழம், காய்கறிகள், மீன் போன்றவை கிடைக்கும். படகுகள் மூலமாகக் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது கடைகளைத் திறக்க மற்றும் பிற கட்டுமான வசதிகளை ஏற்பாடு செய்ய 10 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். அருகில் பிற சந்தைகள் இருந்தாலும் இங்கு வந்து பொருட்களை வாங்குவது என்பது புதிய அனுபவமாக உள்ளது என்று வாடிக்கையாளர்களும் வணிகர்களும் கூறுகின்றனர்.

'மனித மூளை' ஆச்சரியம்

கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் மனித உறுப்பு மூளைதான். மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாளம் பாளமாக கசங்கிப் போயிருப்பது போன்றவைகள்தான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது. மூளையின் அளவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு இல்லை.  சராசரி மனிதனின் மூளை ஒரு கிலோ 349 கிராம் என்ற அளவில் இருக்கும். இதில், பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. இவற்றுக்கு இடையேயான ஓய்வில்லாத மின் ரசாயன பரிமாற்றம் தான் நம் சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருக்கும்.

ஒரே சூழல்

சூரியக் குடும்பத்தில் 10-வது கோளான புளூட்டோவில், பூமியில் காணப்படுவதை போல பனிக்கட்டிகள் காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், புளூட்டோ போன்ற சுற்றுச் சூழல் மற்றும் சீதோஷ்ண நிலை அமைந்த வேறு சில கிரகங்களிலும் பனிக்கட்டிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago