முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டச் ஸ்கிரீன் எப்படி வந்தது?

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இ.ஏ. ஜான்சன் என்பவர் தான், தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு முன்னோடி என்று கூறலாம். 1967 வரை ராயல் ரேடார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வேலையை விட்டு நின்ற பிறகு, 1968ல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் தொடர்பாக அறிவியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில்தான், முதன்முதலாக தொடுதிரை தொழில்நுட்பம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. முதன்முதலாக தொடுதிரையை செயல்வழியில் வெளி உலகுக்குக் காண்பித்தவர், சாம் ஹர்ஸ்ட் என்பவர்.அமெரிக்காவில் உள்ள கென்ட்யூக்கி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார் ஹர்ஸ்ட். 1971ல், இவர் உருவாக்கிய முதல் தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு ‘எலோகிராஃப்’ (Elograph -– Electrical and Optoelectronic Graphene Devices) என்று பெயரிடப்பட்டது. இந்த எலோகிராஃப் (Elograph)தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை கென்ட்யூக்கி பல்கலைக்கழகம் பெற்றது. பின்னர் வேலையை விட்டுவிட்டு, எலோகிராஃபிக்ஸ் என்று தனியே ஒரு நிறுவனத்தை தொடங்கினார் சாம் ஹர்ஸ்ட். 1974ல், ஒளிபுகும் தொடுதிரையை பேராசிரியர் சாம் ஹர்ஸ்ட் உருவாக்கினார். சீமன்ஸ் நிறுவனத்தின் நிதியுதவிடன்தடை மின்னோட்ட தொடுதிரை தொழில்நுட்பத்தை ( resistive touch screen technology) உருவாக்கி, அதற்கான காப்புரிமையையும் பெற்றார். வளைவான கண்ணாடியாக இருந்த கருவிக்கு, எலோகிராஃபிக்ஸ் நிறுவனம் ‘டச் ஸ்கிரீன்’ என்று பெயரிட்டு அழைத்தது. அப்படிப் பிறந்ததுதான், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம்.

வாரம் முழுவதும்...

பொதுவாக காதலர் தினம் என்றால் அனைவருக்கும் பிப்ரவரி 14 மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் காதலர் தினமானது பிப்ரவரி 7 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. காதலர் தின வாரத்தின் முதல் நாள் ரோஸ் டேவில் ஆரம்பித்து ப்ரப்போஸ் டே, சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, இறுதியாக கிஸ் டேவில் முடிவடைகிறது.

உணர்த்தும் உண்மை

ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சக்கரையாம், அடிக்கரும்பு இனிக்க நுனி கரும்பு எதற்கு? என்ற பழமொழிகள் உண்டு. நல்ல சொற்கள் இருக்கும் போது துன்பம் தரும் சொல்லை ஏன் சொல்ல வேண்டும் என குறிக்கும் வகையில் அந்த பழமொழி தத்துவமாக மலர்கிறது. ஆனால், கரும்பில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.

இதுதான் காரணம்

கடைகளில் நாம் சாப்பிட வாங்கும் சிக்கனுடன் கூடவே, 2 துண்டு எலுமிச்சை பழங்கள் வைக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின் - சி தேவை. அதனால் தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின் - சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட வைக்கிறார்கள்.

நாசா முயற்சி

வரும் செப்டம்பர் மாதம் பென்னு குறுங்கோளை ஆய்வு செய்யும் பணிக்காக ஆசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக்கோள் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் சூரியக் குடும்பத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ளவும், குறுங்கோள்களால் பூமிக்கு ஆபத்து உண்டா என்பது குறித்தும் ஆய்வு செய்ய இயலுமாம்.

நட்சத்திரம் அருகில்

இந்த மாதம் முதல் வாரத்தில் C/2016 U1 NEOWISE எனப் பெயரிடப்பட்டுள்ள வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். NEOWISE என்ற தொலைநோக்கியின் மூலம் இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள கோளான புதன் வழியாக கடந்து செல்லும் இந்த வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago