முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முகம் பார்க்கும் கண்ணாடி முதன்முதலில் எப்போது தோன்றியது?

1835 இல். ஜெர்மனியைச் சேர்ந்த வேதியிலாளர் ஜஸ்டுஸ் வோன் லைபிக் என்பவர்தான் கண்ணாடியின் பின்புறம் சில ரசாயன கலவையை பூசுவதன் மூலம் அசலான முகம் பார்க்கும் கண்ணாடியை உருவாக்கியவர். இவர்தான் அமோனியாவில் சில்வர் நைட்ரேட்டை கலந்து கண்ணாடியின் பின்புறம் பூசி அதன் எதிரொளிப்பு தன்மையை உலகுக்கு காட்டியவர். அப்போது முதல் நாம் நமது முகங்களை இடைவிடாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

புத்தாண்டு சுவாரசியம்

நியூசிலாந்து நாடு முதன்முதலில் புத்தாண்டை வரவேற்றது. அந்த வரிசையில் மற்றுமொரு சுவாரசியமாக இந்த ஆண்டின் முதல் குழந்தை பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.72 கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு பெற்றோர் எல்லினா குமாரி என பெயர் வைத்துள்ளனர்.இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆரிவ் குமார் என 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்தது. குறிப்பாக இந்த ஆண்டின் முதல் குழந்தையாக பிறந்தது பாரதி-அஷ்வானி தம்பதியரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்மார்ட் ஃபோன்

ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலும் ஸ்மார்ட்ஃபோன்களால் ஆபத்து உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 800 ஸ்மார்ட் போன் பயனாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாமல் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தாலும் மூளையின் செயல் திறன் குறையும் என்று தெரிவித்துள்ளது.

நாணயம் ரூ.57 கோடிக்கு விற்பனை

பொதுவாக நாணயத்தின் மதிப்பு அதில் பொறிக்கப்பட்டுள்ள அளவுக்கே இருக்கும். கொஞ்சம் பழைய நாணயங்கள், தொல்லியல் நாணயங்கள் சற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதுண்டு.  அவற்றில் 1500 மதிப்புள்ள 20 அமெரிக்க டாலர் நாணயம் ஒன்று ரூ.57 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. 1933 இல் தங்கத்தால் செய்யப்பட்ட அந்த நாணயம் பெரிய அளவில் புழக்கத்தில் விடப்படவில்லை. சிறிய அளவே விடப்பட்டது. அதிலும் பலவற்றை உருக்கி விட்டனர். எஞ்சிய நாணயங்களை சேகரிப்பாளர்கள் வைத்துள்ளனர். அதில் ஒன்றுதான் கடந்த 2002 ஆம் ஆண்டு ரூ.57 கோடிக்கு விற்பனையானது. நாணய விற்பனையில் உலகிலேயே இதுதான் அதிக பட்சமாகும்.

குட்டித் தூக்கம்

பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அதாவது குட்டித்தூக்கம் போட்டால் புத்துணர்ச்சியை பெறலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும். குட்டித்தூக்கம் மூலமாக மன அழுத்தம் குறையும். மேலும், ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும்.

இருளில் ஒளிரும் மனித உடல்

இருளில் மனித உடல் ஒளிரும் என்பது உங்களுக்கு தெரியுமா.. ஒரு நாளில் மிக குறைந்த அளவிலோ, மிக அதிகமாகவோ உடல் ஒளிர்கிறது. ஆனால் அதை நாம் வெறும் கண்ணால் பார்க்க இயலாது. அது வெளியிடும் ஒளியின் அளவானது நமது கண்கள் உணரும் திறனை விட 1000 மடங்கு குறைவானதாகும். ஆனால் இந்த ஒளியானது அகச்சிவப்பு கதிர்களிலிருந்து மாறுபட்டது. அது உடலின் வெப்பத்திலிருந்து வெளிப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு ஒளி உமிழும் உடலின் திறனானது காலை 10 மணி அளவில் மிக குறைவாகவும், மாலை 4 மணி அளவில் உச்சத்திலும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முற்றிலும் ஒளியற்ற அரையில் ஆரோக்கியமான நபர்களை நிறுத்தி வைத்து குறைவான ஒளியில் படம் பிடிக்கும் கேமராவை கொண்டு விஞ்ஞானிகள் இதை படம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago