முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள்பணியாற்றி சாதனை படைத்த முதியவர்

ஒரு நிறுவனம் அல்லது ஒரு கம்பெனியில் நீங்கள் அதிகப்பட்சமாக எத்தனை ஆண்டுகள் வேலை செய்து உள்ளீர்கள்? என்று கேட்டால், நம்மில் பலரும் விரல் விட்டு எண்ணும் அளவிலான ஆண்டுகளே சொல்வோம்;ஆனால் பிரேசிலைச் சேர்ந்த வால்டர் ஆர்த்மேனுக்கு, அவரது பணியிடத்துடனான தொடர்பு மிகவும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.100 வயது மிக்க வால்டர் ஆர்த்மேன் ஒரே நிறுவனத்தின் கீழ் 84 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். இதுவொரு உலக சாதனையும் ஆகும். ஆம்! இந்த ​​100 வயது மிக்க முதியவர், "ஒரே நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் வேலை செய்தவர்" என்கிற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார்! 1938 ஆம் ஆண்டு தனது 15வது வயதில் பிரேசிலில் உள்ள சான்டா கேடரினாவில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் ​​நிறுவனத்தில் 'ஷிப்பிங் அசிஸ்டென்ட்' ஆக பணியாற்றத் தொடங்கிய வால்டர் ஆர்த்மேன், தன் கடின உழைப்பு மற்றும் மன உறுதியின் உதவியுடன் மெல்ல மெல்ல தனக்கான வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினார். இப்படியாக 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து சாதனையும் படைத்துள்ளார்.

ஆண் மயில்கள் தோகை விரித்தாடுவது ஏன் தெரியுமா?

ஆண் மயில், தோகையை விரித்தாடுவது பெண் மயிலைக் கவர்வதற்கே. ஆண் மயில்கள் ஒளிவீசும் வண்ணங்களோடு கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டு விளங்குபவை. ஆண்மயிலின் மிகக் கவர்ச்சியான உறுப்பாக விளங்குவது அதன் நீண்டு வளர்ந்த தோகையே ஆகும். ஒரு ஆண் மயிலின் நீளம் 7 அடி இருக்குமானால் அதன் தோகை மட்டுமே 3 அடி நீளம் வரை இருக்கும். இதன் வால் பகுதி நீலம், பச்சை மற்றும் பொன் நிறங்களின் கலவையாக விளங்கும். ஆங்காங்கே அமைந்துள்ள ‘கண்கள்’ போன்ற பகுதிகள் வண்ணத்தில் மாற்றத்தை உண்டாக்கக் காரணமாக அமைந்துள்ளன. மயில் தன் குட்டையான வால் பகுதியிலுள்ள நீண்ட இறகுகளை அதாவது தோகைகளை உயர்த்தி விரித்து ஆடும்போது மிக அழகாகக் காட்சியளிக்கும். பழங்காலத்தில் கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஆண் மயிலைப் புனிதமான உயிரினமாகக் கருதி வழிபட்டு வந்தனர்; இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அவ்வாறே என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. 

இடது கை பழக்கம் உள்ளவர்கள் மரணம் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?

நம்மில் பலரையும் நாம் பார்த்திருக்க கூடும். அவர்கள் நம்மை போல அல்லாமல் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பர். இடது கையால் எழுதுவது, இடது கையால் வேலைகளை செய்வது, சாப்பிடுவது. அவ்வளவு ஏன் நமது கிரிக்கெட் வீரரான சிகர் தவான் போன்றவர்கள் விளையாட்டில் கூட பட்டையை கிளப்புவதை பார்த்திருக்கலாம்... ஆனால் ஒன்று தெரியுமா இந்த உலகம் வலது கை பழக்கமுடையவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இடது கை பழக்கமுடையவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வலது கை காரர்கள் உருவாக்கிய கருவிகளால் சுமார் 2500 பேர் வரை இடது கை பழக்கமுடையவர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்ன ஒரு உலகம் பாருங்கள்.

கலிலியோவின் கைவிரல்

நவீன அறிவியலில் கலிலியோவுக்கு முக்கியமான இடம் உண்டு. வானியலின் தந்தை என்று போற்றப்படுபவர். சூரியன்தான் பூமியை சுற்றி வருகிறது என நெடுங்காலமாக நம்பப்பட்டு வந்த நிலையில், பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பது உள்பட சூரிய மண்டலம் குறித்த பல்வேறு உண்மைகளை 15 ஆம் நூற்றாண்டிலேயே உலகுக்கு அளித்தவர். இதற்காக வாடிகன் திருச்சபையால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மன உளைச்சல் மற்றும் கண்பார்வை இழந்து 1642 ஆம் ஆண்டு அவரது வீட்டிலேயே உயிரிழந்தார். அதன் பின்னர் 100 ஆண்டுகள் கழித்து 1737 இல்  அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கோடையை சமாளிக்க

கோடை காலம் தொடங்கிவிட்டதால் நீர்சத்து இழப்பை தவிர்க்க அதிகளவு நாம் நீர் பருக வேண்டும்.  6 - 10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறார் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், பணியில் ஈடுபடும் 20 - 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தினமும் 2 லிட்டரும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முதியோர் தினமும் 2 லி தண்ணீரும், நடனக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டுமாம். மேலும், உடல் வெப்பத்தை, உடல் வெப்பத்தை தணிக்க இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், போன்றவைகளை எடுத்துக்கொள்வது நல்லது. மோர் பருகுவதும் நல்ல பலனை அளிக்குமாம்.

செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து கேட்பது ஏலியனின் குரலா?

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் இன்சைடர் விண்கலம் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தகவலை அனுப்பியது. அதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து தொடர்ந்து ஒரு வித மர்மமான ஒலி தொடர்ந்து இருந்து வருவதை அது பதிவு செய்து அனுப்பியுள்ளது. இது அங்கு வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்களின் எழுப்பும் ஒலியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்த போதிலும் இதை விஞ்ஞானிகள் இதுவரை அதை உறுதி செய்யவில்லை என்ற போதிலும் செவ்வாயிலிருந்து எழும் ஒலியின் மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதுதான் ஆச்சரியமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago