முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதன் முதலாக

உலக நாடுகளில் முதன் முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வரும் 2020 ஆண்டிற்குள் இந்த புதிய சட்டம் அந்நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வறட்டு இருமலுக்கு…

மாதுளம் பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து பருகினால் வறட்டு இருமல் சரியாகும். நாட்டு மருந்து கடைகளில் திப்பிலி கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் வறட்டு இருமல் குணமாகும். மேலும், இளஞ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருத்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

முத்திரையிட பயன்படும் அரக்கு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?

முந்தைய காலங்களில் மூடி சீலிடுவதற்கும் அவற்றில் அரசாங்க முத்திரை இடுவதற்கும் அரக்கு என்ற  பொருளை பயன்படுத்துவது வழக்கம். இன்றைக்கும் ஜப்தி செய்யப்பட்ட இடங்களை நீதிமன்ற ஊழியர்கள் பூட்டி விட்டு அதன் மீது துணியை சுற்று அரக்கால் சீல் வைப்பதை நாம் பார்த்திருக்கலாம். மேலும் இந்த அரக்கு உணவு பண்டங்கள், மரச் சாமான்கள் போன்றவற்றுக்கு நிறமேற்றம் செய்யவதற்கும், பர்னிச்சர் பொருள்களை செம்மைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதெல்லாம் சரி.. இது எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என தெரியுமா... இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள காடுகளில் மரங்களில் வசிக்கும் ஒரு வகை பூச்சியினத்தில் இருந்துதான் இந்த அரக்கு பெறப்படுகிறது. இதன் பெண் பூச்சிகள் உருவாக்கும் திரவம்தான் பசை போல இறுகி பின்பு அரக்காக மாறுகிறது என்றால் ஆச்சரியம் தானே.

கொடிய விஷமான சயனைடே உயிர்கள் உருவாக காரணமாம்

உயிரை எடுக்க கூடிய சயனைடே உயிர்கள் உருவாக காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.  புதிய ஆராய்ச்சியில் ,  கொடிய சயனைடு  கலவை, உண்மையில், பூமியில் உயிர்கள் உருவாக உதவியது என்று கண்டறியப்பட்டு உள்ளது. விஞ்ஞானிகள் சயனைடைப் பயன்படுத்தி ஒரு இரசாயன எதிர்வினையை உருவாக்கியுள்ளனர்,சயனைடு நான்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கரிம உயிர்களை உருவாக்கத் உதவியது என கண்டறிந்து உள்ளனர். சயனைடு என்பது கார்பன் மற்றும் நைட்ரோஜன் அணுக்களால் உருவானது. இதன் அறிவியல் பெயர் சிஎச் (CH). இதை உட்கொண்டால் உடனே மரணம் தான். பிழைத்தாலும் வாழ்நாள் எல்லாம் நரம்பு சம்பந்த பட்ட நோய்களால் அவதி பட நேரிடும். இதுகுறித்து கூறிய ஆராய்ச்சியாளர்கள் 'சயனைடு பூமியில் உயிர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம், மேலும் வேற்றுகிரகவாசிகளை கண்டறிய நமக்கு  உதவலாம்' என்று கூறி உள்ளனர். ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியல் இணைப் பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் ராமநாராயணன் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- பூமியின் ஆரம்பத்திலோ அல்லது பிற கிரகங்களிலோ - நாம் உயிர் வாழ்வின் அறிகுறிகளைத் தேடும்போது - நாம் அறிந்த உயிர் வேதியியலின் அடிப்படையில் தேடுகிறோம். இதே வளர்சிதை மாற்ற எதிர்வினைகள் சயனைடால் நிகழ்ந்து இருக்கலாம் என்பது வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது என கூறினார்.

பால் உற்பத்தியை அதிகரிக்க செய்ய பசுக்களுக்கு சிறப்பு விஆர் கண்ணாடிகள்

தொழில் நுட்ப வளர்ச்சி இன்றைய கால கட்டத்தில் கன்னாபின்னாவென தறிகெட்டு போய் கொண்டிருக்கிறது. எதெதற்கு கருவிகள் வரும் அது எப்படி வரும் என்று கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சகலும் சாதனம் மயம் என்றாகி விட்டது. அண்மையில் பசு மாடுகள் அதிக பாலை தர வேண்டும் என்பதற்காக வெர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. துருக்கி நாட்டைச் சேர்ந்த İzzet Koçak என்ற விவசாயிதான் இந்த புதுமையான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். எங்களிடம் உள்ள பசுக்களில் 2 பசுக்களை தேர்வு செய்து அவற்றுக்கு விஆர் கண்ணாடிகளை அணிவித்தோம். அதில் பசுமையான சூழலை படம் பிடித்து காட்டினோம். தற்போது அவை கூடுதலாக 27 லிட்டர் பால் கறக்கின்றன என்கிறார். என்ன கொடும சார் இது என்றுதான் நமக்கு சொல்லத் தோன்றுகிறது. எல்லாம் கலி காலம் சாரி..டிஜிட்டல் காலம்.

கதிர்வீச்சு தன்மை கொண்டவை வாழைப்பழங்கள்

அறிவியல் எப்போதும் ஆச்சரியம் மிக்கவையே. அதிலும் நாம் உண்ணும் உணவுப் பொருள்களின் பல்வேறு அறிவியல் அதிசயங்களை தெரியாமலேயே நாம் அவற்றை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் நீங்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் வாழைப்பழங்கள். அதில் என்ன அதிசயம் என்கிறீர்களா.. வாழைப்பழங்களுக்கு கதிர்வீசும் தன்மை கொண்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அதன் அளவு மிகமிகமிக குறைவுதான். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரே சமயத்தில் உங்களால் 10 மில்லியன் வாழைப்பழங்களை சாப்பிட முடிந்தால் மட்டுமே அதன் கதிர்வீச்சு உங்களை பாதிக்கும் என்கிறார் மெக்ஹில் பல்கலை கழக ஆய்வாளர் ஜோ ஸ்வார்க்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago