முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எச்சரிக்கும் ஆய்வு

மது குடிக்கும் பழக்கத்தால் பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் மது போதையில் இருந்து தெளிய காலதாமதமாகும். இயற்கையாகவே பெண்கள் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைந்திருப்பதால், போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.

நவீன கருவி ‘இலி’

மனிதர்களின் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் ஹ்மனாய்டு ரோபோக்களின் தயாரிப்பு சர்வதேச அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் குரல் கட்டளைகளை ஏற்று அதனை பிற மொழிகளில் மொழி பெயர்த்து தரும் நவீன ரக மொழிபெயர்ப்பு கருவி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘இலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பென் டிரைவ் போன்ற வடிவத்தை கொண்ட ‌இந்தக் கருவி ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை ஏற்று, அதற்குரிய சீன,‌ ஜப்பான் மற்றும் ஸ்பானிஷ் சொற்களை ஒலி வடிவில் தருகிறது. இந்தக் கருவியின் சிறப்பு, இதை பயன்படுத்துவதற்கு இணைய வசதி என்பது தேவையில்லை என்பது மற்றும் 2 நொடிகளில் மொழிப்பெயர்பை கேட்கலாம்.

தக்காளியின் மகிமை

வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி அன்றாட உணவில் பயன்படுத்தும் தக்காளிக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வயிற்று புற்று நோய் ‘மாலிக்னன்ட் செல்’ எனப்படும் திசுக்களால் ஏற்படுகிறது. இந்த திசுக்களை மேலும் வளரவிடாமலும், அவை பரவாமலும் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உள்ளதாம்.

மாறாத வழக்கம்

பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் ஒரு பெட்டியை வைத்திருப்பது எதற்காக என்றால், அதற்கு 'பட்ஜெட்' என்ற பெயர்தான் காரணம். பிரெஞ்ச் மொழியில் 'பவ்கெட்' என்றால் தோல் பை என்று பொருள். அதிலிருந்துதான் பட்ஜெட் என்ற சொல் உருவானது. 18-ம் நூற்றாண்டில் பிரிட்டன் நிதி அமைச்சர் அந்நாட்டு வருடாந்திர வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யும்போது உதவியாளரிடம் ஓபன் தி பட்ஜெட் என்று கூறினார். மேலும், பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக, லண்டனின் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் முன் சூட்கேசை நிதி அமைச்சர்கள் நாலாபுறமும் காட்டுவது தொன்று தொட்ட நடைமுறை. அதில் உள்ள அச்சடித்த காகிதங்கள் அடுத்த ஓராண்டில் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பது சிறப்பம்சம். அதுவே இன்று வரை நமது நிதியமைச்சர்களுக்கு பழகிப் போன ஒன்றாகி விட்டது.

தேனின் மகத்துவம்

நல்ல தேனை கண்டுப்பிடிக்க, ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும். தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. அதேபோல், சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பிக்கும் போது சுடர்விட்டு எரிந்தால் அது சுத்தமானது.

கொழுப்பை தடுக்கும்

1. மூளை செயல்பாடு அதிகரிக்கும் மற்றும் நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.2. கொழுப்பு எரிப்பதை அதிகரிக்கிறது மற்றும் உடல் திறன் அதிகரிக்கிறது.3. இதில் இருக்கும் ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் (antioxidant) பல்வேறு வகையான புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.4. இருதய நோய் வருவதை குறைக்கலாம். 5. நீரிழிவு நோய் வரும் ஆபத்தை குறைக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago