முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாலின் மகிமை

ஜூன் 1-ம் தேதி உலக பால் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பசுக்களின் பாலை மனிதன் அருந்தி வந்துள்ளான்.  உலகின் பால் தேவையை 90 சதவீதம் பூர்த்தி செய்யக் கூடியவை பசுக்களே. ஒரு பசுமாடு தன் ஆயுள் காலத்தில் 2 லட்சம் டம்ளர் பால் தரும். பண்ணை மாடுகளே உலகின் 90 சதவீத பால் தேவையை பூர்த்தி செய்கின்றன.

குளிர் நல்லது

டிசம்பர் மாதத்தில் உடலை உலுக்கும் குளிர் காற்று சில்லென்று ஊடுருவும்.  இந்த குளிர் காற்றில் உடலுக்கும், மூளைக்கும் தேவைப்படும்  ஆக்சிஜன் அதிக அளவில் உள்ளது.இந்த  ஆக்சிஜனை  மக்கள் அதிக அளவில் பெற வேண்டும் என்பதற்காகவே  மார்கழியில் வீட்டு வாசலில் கோலம் போடும் கலாச்சாரமும்,  கோவில்களில் அதிகாலை பூஜைகளும் மார்கழியில்  கடைபிடிக்கப்படுகின்றன.

வாடகை ரோபோ

மூட்டு வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், ரோபோ கால் ஒன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. டொயட்டோ மோட்டார் நிறுவனம் உருவாக்கியுள்ள வெல்வாக்ஸ் என்ற இந்த ரோபோ, பக்கவாதம், மூட்டு வலியால் தவிக்கும் நோயாளிகள் எளிதில் நடப்பதற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ காலுடன், ஒரு டிரெட்மில், ஒரு கண்காணிக்கும் கருவியும் வழங்கப்படுகிறது. இந்த ரோபோ, வயதானவர்களுக்கு டிரெட்மில்லில் நடைப்பயிற்சி வழங்குகிறது. யாருடைய உதவியும் இல்லாமல், வயதானவர்கள் மற்றும் கால் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக நடப்பதற்கு இந்த ரோபோ கால் உதவும். இந்த ரோபோ கால், முதற்கட்டமாக வாடகைக்கு விடப்படுகிறது. மாத வாடகைத் தொகை, 2 லட்சம் ரூபாயாம்.

நாமே கண்டுபிடிக்கலாம்

இன்று மனிதர்களை மிகவும் அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. தற்போது, தோல் புற்று நோயை மருத்துவர்கள் உதவி இன்றி நாமே சோதனை செய்து கண்டு பிடிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் உறுதி செய்வதை விட துல்லியமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நோயை கண்டறிந்து உறுதிசெய்கிறது. இதனை ஸ்மார்ட்போன்களிலே பொருத்தி அவரவர் தானாகவே பரிசோதிக்கலாம். புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய், மூளைப்புற்றுநோய் மிகவும் அபாயமானது. இந்த வகை நோய்களை கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.

நாளைய உலகம்

இந்த நான்கு கால் ரோபோ நாய்களை போன்றே இருக்கும். இந்த நான்கு கால் ரோபோ நிலநடுக்கத்தின் பொது மீட்பு பணி உதவிகளுக்கு பயன்படுத்த உள்ளனர்.இந்த ரோபோக்கள் இயற்கை பேரழிவுகளுக்கு குறிப்பாக பின்வரும் தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இது அழகாக இருந்தாலும் இந்த ரோபோக்கள் ஒரு நாள் மனித உயிர்களை காப்பாற்றும் என நம்பப்படுகிறது.

மாறிய கோவில்

12-ம் நூற்றாண்டில் , 2-ம் சூரியவர்மனால் கட்டப்பட்ட அங்கோர் வாட்டை ஆரம்பத்தில் ஓர் விஷ்ணு தள வழிப்பாட்டு கோவிலாக இருந்தது. பின் 14 - 15-ம் நூற்றாண்டுகளில், புத்த மத துறவிகளால் கையகப்படுத்தப்பட்டு கூடுதலான புத்த சிலைகளும், கலைநய வேலைப்பாடுகளும் சேர்க்கப்பட்டு புத்த கோவிலாக மாற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago