மாறி வரும் சூழல் காரணமாக பல் உயிர் பெருக்க சுழற்சி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு புவி வெப்பமயதால், கார்பன் எமிசன் என பலக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் இயற்கையின் அழிவுக்கு மனிதனின் பேராசை மட்டுமே காரணமாக இருக்க முடியும். இதனால் தென்னிந்தியாவில் மிகப் பெரிய பல்லுயிர் பெருக்க வன வாழ்விடமான மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள் மிகுந்த அபாயத்தை எதிர் கொண்டுள்ளன. இதற்கு முக்கிய உதாரணமாக யானைகளுக்கும் மனிதனுக்கு ஏற்பட்டுள்ள முரண்களை சூழலியாளர்கள் சுட்டி காட்டுகின்றனர். கடந்த 2019 வரை முந்தைய 5 ஆண்டுகளில் மட்டும் 2300க்கும் அதிகமான மக்கள் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்கள் கூறுகின்றன. அதிலும் அதே கால கட்டத்தில் 500க்கும் மேற்பட்ட யானைகளும் உயிரிழந்துள்ளன. அதில் குறிப்பாக 333 யானைகள் மின்சாரம் தாக்கியும், சுமார் 100 யானைகள் வேட்டையாடப்பட்டும், விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன என்பது இதன் அவலத்தை நமக்கு தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மெக்சிகோ நகரம் கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு பேர் போனது. தற்போது புவியியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. 1325 ஆம் ஒரு ஏரியின் மீது இந்த நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துரதிருஷ்டம் ஆண்டு தோறும் சுமார் 3.2 அடிகள் வரை இந்த நகரம் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக ஆஸ்டெக் ஆட்சியாளர்கள் ஒரு செயற்கை தீவை உருவாக்கினர். மேலும் 1521 இல் நகரம் தகர்க்கப்பட்ட போது இடிபாடுகளின் மீது ஸ்பானியர்கள் புதிய மெக்சிகோவை நிர்மாணித்தனர். ஆனால் நகர வாசிகள் தரைக்கு கீழே இருக்கும் நீரைத்தான் நம்பி இருப்பதால் கடந்த 60 ஆண்டுகளில் நீர் 32 அடிக்கும் கீழே சென்று விட்டது. இல்லாவிட்டால் நகரம் ஏரிக்குள் ஸ்வாகா ஆகியிருக்கும்.
உயிரிழந்துபோன பயனாளர்களின் நினைவுகளை பகிர்ந்து மரியாதையை செலுத்துங்கள் என அவர்களது சக நண்பர்களுக்கு ஃபேஸ்புக்கிலிருந்து தவறுதலாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த இறப்புப் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் பெயரும் இருந்ததுதான் மிகப்பெரிய அதிர்ச்சி.
இருளில் மனித உடல் ஒளிரும் என்பது உங்களுக்கு தெரியுமா.. ஒரு நாளில் மிக குறைந்த அளவிலோ, மிக அதிகமாகவோ உடல் ஒளிர்கிறது. ஆனால் அதை நாம் வெறும் கண்ணால் பார்க்க இயலாது. அது வெளியிடும் ஒளியின் அளவானது நமது கண்கள் உணரும் திறனை விட 1000 மடங்கு குறைவானதாகும். ஆனால் இந்த ஒளியானது அகச்சிவப்பு கதிர்களிலிருந்து மாறுபட்டது. அது உடலின் வெப்பத்திலிருந்து வெளிப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு ஒளி உமிழும் உடலின் திறனானது காலை 10 மணி அளவில் மிக குறைவாகவும், மாலை 4 மணி அளவில் உச்சத்திலும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முற்றிலும் ஒளியற்ற அரையில் ஆரோக்கியமான நபர்களை நிறுத்தி வைத்து குறைவான ஒளியில் படம் பிடிக்கும் கேமராவை கொண்டு விஞ்ஞானிகள் இதை படம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் ஜாம்பாவான் கூகுள் நிறுவனம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உலகில் உள்ள அனைத்து தேடுபொறிகளையும் பின்னுக்கு தள்ளி விட்டு இன்று முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் வளாகத்தில் 200 ஆடுகள் சுற்றி திரிய விடப்படுகின்றன என்று சொன்னால் நம்புவதற்கு ஆச்சரியமாக உள்ளதா.. ஆனால் அதுதான் உண்மை. வாரத்துக்கு ஒரு முறை வளாகத்தில் வளர்ந்துள்ள புற்களை தின்பதற்காக 200 ஆடுகளை வாடகைக்கு பிடித்து திரிய விடப்படுகிறது. இதற்கு என்ன காரணம், புல்வெட்டும் இயந்திரம் மற்றும் அதற்கான செலவும் இதுவும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதால் ஆடுகளுக்காவது புற்கள் பயன்படட்டுமே என்றுதான் கூகுள் வளாகத்தில் ஆடுகள் திரிய விடப்படுகின்றன.
உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியக்க காரணங்கள் பல உள்ளன. யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இடங்களில் இந்தியாவில் மட்டும் 32 உள்ளன. உலகின் உயரமான இடத்தில் (14,567 அடி உயரத்தில்) அமைந்திருக்கும் தபால் நிலையம் ஹிக்கிமில் (Hikkim)இருக்கிறது. உலகிலேயே மக்கள் அதிகமாக கூடும் திருவிழா கும்பமேளா. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 55 நாட்களில் பத்து கோடி பேர் திரண்டனராம். உலகிலேயே அதிகமாக மழைப்பொழிவு பெறும் இடம் மேகாலயா. மாவ்சின்ராம் எனும் கிராமத்தில் ஒரு ஆண்டிற்கு 467 இன்ச் அளவு மழை பொழிகிறது. இங்கிருந்து பத்து மையில் தூரம் தொலைவில் உள்ள சிரபுஞ்சி 2-வது இடத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிகமாக ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நமது நாடு 2-ம் இடத்தில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பாக்.கில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
06 Feb 2026லூகூர், பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு தனித்தனி உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் 24 பயங்கரவாதிகள் சுட்
-
மியான்மரில் நிலநடுக்கம்
06 Feb 2026நைப்பியிடா, மியான்மரில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நெல்லை வடக்குபச்சையாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
06 Feb 2026நெல்லை, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்குபச்சையாறு அணையில் இருந்து இன்று முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வ
-
நேபாளத்தில் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
06 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் திருமணத்திற்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
06 Feb 2026சென்னை, தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனையானது.
-
தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
06 Feb 2026சென்னை, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
-
பாகிஸ்தான்: மசூதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் 31 பேர் பலி - பலர் படுகாயம்
06 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பலியானார்கள் மேலும் இதில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மின்னஞ்சலில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்
06 Feb 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க த.வெ.க.
-
தருமபுரி: வாணியாறு அணையில் 55 நாள்களுக்கு நீர் திறக்க உத்தரவு
06 Feb 2026தருமபுரி, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூற
-
'புராஜெக்ட் வால்ட்' திட்டம் மூலம் பாகிஸ்தானில் 13 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அமெரிக்கா முடிவு
06 Feb 2026நியூயார்க், 'புராஜெக்ட் வால்ட்' என்ற திட்டத்தின் மூலம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கங்களை மேம்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
-
பீகார் தேர்தல் முடிவை எதிர்த்த பிரசாந்த் கிஷோர் கட்சி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
06 Feb 2026பாட்னா, பீகார் தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த பிரசாந்த் கிஷோர் கட்சியின் மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து தள்ளுபடி செய்தது.
-
சிங்கப்பூரில் ரூ. 1.9 கோடி மோசடி: இந்திய வம்சாவளிக்கு சிறை
06 Feb 2026சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –07-02-2026
07 Feb 2026 -
வார ராசிபலன்
07 Feb 2026


