உலகிலேயே மிதக்கும் தபால் நிலையம் எங்கிருக்கு தெரியுமா.. அது வேறு எங்கும் இல்லை. இந்தியாவில்தான். அதுவும் குளுகுளு காஷ்மீரில். ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரியில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிதக்கும் தபால் அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சச்சின் பைலட் ஆகியோரால்தொடங்கப்பட்டது. படகு ஒன்றில் தான் இந்த அலுவலகம் செயல்படுகிறது. ஏரியில் மிதந்தபடியே உள்ளூர் மக்களுக்கான தபால் சேவைகளை செய்து வருகிறது. உலகளவில் இந்தியாவில் தான் அதிக தபால் அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 1,55,015 தபால் அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அக்ரோ நிறுவனம் ஒன்று பறக்கும் ஆம்புலன்சை உருவாக்கியுள்ளது. நோயாளியையும், உடன் ஒரு மருத்துவ உதவியாளரையும் சுமந்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உள்ளே லைவ் கேமரா வசதியும், ஆடியோ கனெக்ஷனும் இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் நோயாளியின் நிலைமையை ஆராய்ந்து, தகுந்த மருத்துவ ஆலோசனைகளை உதவியாளருக்கு கொடுக்க முடியும். இந்த ட்ரோன், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அவசர காலத்தில் சிட்டாய் பறக்கும் இந்த ட்ரோனுக்கு ஓட்டுனர் இல்லை மற்றொரு ஆச்சரியம். ஜி.பி.எஸ் வைத்து லொகேஷனை அடையாளம் கண்டு, தானாக பறந்து செல்கிறது. இதன் விலை சுமார் ஆறு கோடியாம்.
யாரும் இதுவரை பார்க்காத போதிலும் உலக அழகி கிளியோபாட்ரா என்பது வழக்கமாக சொல்லப்படும் விசயம். ஆனால் அதே நேரத்தில் அவள் மிகவும் ஆற்றல் மிக்க பேரரசியாக விளங்கினாள். அவளது காதலன் மார்க் ஆண்டன் என்பது அனைவருக்கும் தெரியும். அவன் தனது காதலி கிளியோபாட்ராவை மகிழ்விப்பதற்காக எகிப்திலிருந்து மணலை வரவழைத்தான். எதற்கு தெரியுமா துருக்கியில் உள்ள செடிர் தீவில் உள்ள பீச்சை மணலால் நிரப்பி காதலியை மகிழ்விப்பதற்காக. தற்போதும் செடிர் தீவு கிளியோபாட்ரா தீவு என்றே அழைக்கப்படுகிறது. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... அதிலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு காதல் தோன்றினால் என்னவெல்லாம் நடக்கும் பாருங்கள்.
இன்றைய நவீன மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடங்கள், சாலை குறியீடுகள், திசைகாட்டிகள், ஜிபிஎஸ் கருவிகள் என ஏரானமானவற்றை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அப்படியும் சிலர் வழி தவறி விடுகின்றனர். ஆனால் எந்த வரைபடத்தையும் வைத்திருக்க முடியாத நீருக்கு அடியில், பல்லாயிரம் மைல்கள் ஆழமுள்ள கடலுக்குள்.. அதுவும் சூரிய ஒளி புகாத கும்மிருட்டில்.. ஆனால் சில சுறாக்கள் தங்கள் உடலிலேயே இயற்கை ஜிபிஎஸ் அல்லது காந்தமானியை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பல நூறு மைல்கள் சென்றாலும் மீண்டும் தனது இருப்பிடத்துக்கு மிகச் சரியாக அவை திரும்பி விடுகின்றனவாம். ஆய்வில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடலுக்கு அடியில் நீந்தி சுறாக்கள் மிகச் சரியாக ஆஸ்திரேலியா வந்து விட்டு 9 மாதங்களுக்கு பிறகு திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது. இது இயற்கையின் ஆச்சரியம் தானே..
மனிதன் உயிர் வாழ உடலில், ஒரே ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகம் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். மேலும் பெருங்குடல் நீக்கப்பட்டாலும், அந்தரங்க உறுப்புகள் இல்லாமலும் ஆண், பெண் உயிர் வாழ முடியும். உடலில் தைராய்டு சுரப்பி, மண்ணீரல் நீக்கப்பட்டாலும் ஆபத்து இல்லை.
ருடால்ஃப் டீசல் பிரான்ஸில் 1858 இல் ஜெர்மனியில் பிறந்தார். பிரெஞ்ச் - பிரஷ்யா போரின்போது பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்தில் இவரது பெற்றோர் குடியேறினர். படிப்பைத் தொடர்வதற்காக டீசல் மட்டும் பிரான்ஸில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஜெர்மனியில் உள்ள முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். உடல்நலம் குன்றியதால் 1879-ல் படிப்பைத் தொடரமுடியவில்லை. இன்ஜின்கள் குறித்து டீசல் ஆராய்ந்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார். நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்தார். இறுதியில் நீராவி இன்ஜினுக்கு மாற்றாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே அவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886-ல் வெளியிட்டார். 1913-ல் ருடால்ஃப் டீசல் திடீரென காணாமல் போனதாகவும், ஒரு வாரம் கழித்து அவரது உடல் நார்வே அருகே வடகடலில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டீசல் இன்ஜினை உருவாக்கிய டீசல் 55 ஆவது வயதில் மறைந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
மீண்டும் தங்கம் விலை உச்சம்
11 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனை ஆனது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக மனு தாக்கல்: அ.தி.மு.க.வுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
11 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அ.தி.மு.க.
-
போதைப்பொருள் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார் நடிகர் ஸ்ரீகாந்த்
11 Nov 2025சென்னை : போதை பொருட்களை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நுங்கம்பாக்கம் லேக் வியூ பகுதியை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்தை கடந்த ஜூன் 23-ந்தேதி சென்னை போதை பொருள் நுண்ணறிவு பி
-
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
11 Nov 2025சென்னை : திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை
-
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ பதவியேற்றார்
11 Nov 2025நியூயார்க் : இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனான செர்ஜியோ கோர் பதவியேற்பு விழா அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
-
ராஜபாளையம் அருகே கோவிலில் இரட்டைக்கொலை: இ.பி.எஸ். கண்டனம்
11 Nov 2025சென்னை : ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னை பெண் கவுன்சிலர் அலுவலகம் மீது நா
-
நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
11 Nov 2025சென்னை : நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாகிஸ்தானில் துணிகரம்: கோர்ட் வெளியே குண்டு வெடித்ததில் 12 பேர் பலி
11 Nov 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நீதிமன்றம் வெளியே நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானார்கள்.
-
2 நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
11 Nov 2025திம்பு : 2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-11-2025.
11 Nov 2025 -
பீகார் மாநில சட்டசபை தேர்தல் முடிவு: கருத்துக்கணிப்பு விவரம் வெளியீடு
11 Nov 2025புதுடெல்லி : பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் அல்லது கூட்டணி யார்? என்ற கருத்துக்கணிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
-
13 முறை எஸ்.ஐ.ஆர் நடந்துள்ளது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
11 Nov 2025கோவை : தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக போராட்டம் நடத்தியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
வெள்ளகுதிர இசை வெளியீட்டு விழா
11 Nov 2025வெள்ளகுதிர படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் கே.
-
டெல்லி கார் வெடிப்பில் தொடர்பு: யார் இந்த மருத்துவர் உமர் முகமது?
11 Nov 2025டெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு: பலி 12 ஆக அதிகரிப்பு
11 Nov 2025டெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது
-
தமிழகத்தில் நடக்கும் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தக்கூடாது: சுப்ரீம் கோர்ட்
11 Nov 2025புது டெல்லி : தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதோடு, சிறப்பு தீவ
-
அதர்ஸ் திரைவிமர்சனம்
11 Nov 2025படத்தின் தொடக்கத்தி்ல் ஒரு வேன் விபத்துக்குள்ளாகி பின்னர் வெடித்து சிதறுகிறது.
-
தி.மு.க. வரலாற்றை ஆவணப்படுத்தும் பணி தொடரும்: துணை முதல்வர்
11 Nov 2025சென்னை : தி.மு.க. வரலாற்றை ஆவணப்படுத்தும் நம் பணி தொடரும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் நெரிசல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜரான ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள்
11 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க.
-
டெல்லி குண்டு வெடிப்பு: பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார் முதல்வர் ரேகா
11 Nov 2025புதுடெல்லி : டெல்லி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கும் என்று காயமடைந்து சிகிச்சை பெற்று
-
டெஸ்ட் தொடர் எளிதாக இருக்காது: தென்னாப்பிரிக்க அணிக்கு சவுரவ் கங்குலி எச்சரிக்கை
11 Nov 2025மும்பை : இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்கு
-
புரட்டிப்போட்ட புங்-வாங் புயல்: பிலிப்பின்ஸ், தைவானில் மக்கள் வெளியேற்றம்
11 Nov 2025மணிலா : புங்-வாங் புயலால் பிலிப்பின்ஸ் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: என்.ஐ.ஏ. விசாரணை தொடக்கம்
11 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்கியுள்ளது.
-
மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எஸ்.ஐ.ஆர்.-ஐ தடுப்பதே நமது கடமை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
11 Nov 2025சென்னை : மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எஸ்.ஐ.ஆர்.-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஈக்வடார் சிறைச்சாலையில் கலவரம்: 31 பேர் உயிரிழப்பு
11 Nov 2025மச்சாலா : ஈக்வடார் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.


