முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

முதல் முதல்வர்

நாட்டின் உயரிய விருது பாரத ரத்னா விருது. இந்த விருதினை பெற்ற முதல் இந்திய, முதல்வர் என்ற பெருமை நமது தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜிக்கு சேரும். இவர் பக்தி பாடலை ஒன்றை எழுதியுள்ளார்.அந்த பாடல் குறையொன்றும் இல்லை  மறை மூர்த்தி கண்ணா என்பதாகும்.

தோலுக்கு மருந்து

பூவரசம் பூ, ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியது. மருதாணி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரவல்லது. தோலுக்கு அழகை தருகிறது. நகப்பூச்சாக பயன்படுகிறது. அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் மூலிகையாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்புக்கான மருந்தாக விளங்குகிறது.

தேநீர்தான் உணவு

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் உண்ண உணவு கிடைக்காமல், வெறும் க‌றுப்புத் தேநீரை (பிளாக் டி)மட்டுமே பருகி உயிர்வாழ வேண்டிய நிலை அங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்.  பால் வழங்கிக் கொண்டிருந்த ஆடுகளும், மாடுகளும் வறட்சியால் இறந்துபோய் விட்டதால் இந்த நிலைமைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம்

நமது வரலாற்று புத்தகங்களில் சிரபுஞ்சி அதிக மழை பெய்யும் இடம் என படித்திருப்போம். ஆனால் உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் என்ற கிராமம் தான். இங்கு ஆண்டுக்கு 470 அங்குலம் அதாவது 12 ஆயிரம் மிமீ  அளவுக்கு மழை பதிவாகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 33 மிமீ மழை பெய்கிறது. எனவே இந்த பகுதி எப்போதும் ஈரமாகவே இருக்கும். எனவே இங்கு வசிக்கும் மக்கள் உடல் முழுக்க மழையை மறைத்தபடி ஆடை அணிந்து கொண்டே வெளியிடங்களில் வேலை பார்ப்பர். தங்களுக்கு குடையாக வாழை இலை அல்லது மூங்கிலால் செய்யப்பட்ட குடைகளை பயன்படுத்துகின்றனர்.

நீர்யானை, Hippopotamus

நீர்யானை பன்றி வகையை சேர்ந்தது. ஆப்பிரிக்காவை பூர்விகமாக கொண்டதாகும். நீர்யானை சிந்தும் வியர்வை சிவப்பாக இருக்கும். நீர்யானை பிறந்ததும் ஒரு சுண்டெலியை விட சிறிதாக இருக்கும். நீருக்குள்ளேயே பிறக்கும் குட்டிகள் நீருக்கு அடியில் இருந்தபடியே தாயிடம் பாலருந்துகின்றன. பார்க்க சாதுவாக இருந்தாலும் நீர்யானை கொட்டாவி விட்டால் அது தன் எதிரியை கோபமுடன் தாக்க போகிறது என்று அர்த்தம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago