உலக அளவில் உள்ள சொத்துக்களில் பாதி அளவு 8 கோடீசுவரர்களின் கையில் உள்ளதாம். முதலிடத்தில் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் (அமெரிக்கா). சொத்து - 743 கோடி டாலர். 2-வது அமான்சியோ ஆர்டேகா (ஸ்பெயின் - ரூ.663 கோடி டாலர்), 3-வது வாசன் பப்பெட் (அமெரிக்கா - 602 கோடி டாலர்), 4-வது கார்லஸ் ஸ்லிம் ஹீலு (மெக்சிகோ - 494 கோடி டாலர்). 5-வது அமேசான் டாட்காம் தலைவர் ஜெய் பெஷோஸ் (அமெரிக்கா - 448கோடி டாலர்), 6-வது பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஷுக்கர்பெர்க் (441 கோடி டாலர்) 7-வது, ஒரகில் தலைமை அதிகாரி லார்ரி எல்லிசன் (412 கோடி டாலர்), 8-வது இடத்தில், நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம் பெர்க் (396 கோடி டாலர்) உள்ளனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகில் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது தெரியுமா.. நீங்கள் இந்தியா என்று எண்ணினால் அது தவறு. இன்றைக்கும் சீனா தான் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. பண்டைய காலத்தில் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சீன பட்டுகளை கொண்டு செல்வதற்காகவே தனியாக வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. அவை இன்றும் பட்டுச்சாலை அல்லது சில்க் ரூட் என அழைக்கப்படுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பட்டு நூல் தயாரித்ததற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. அதே போல பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை உருவாக்கியதிலும் சீனர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.
ஓய்வில்லா உழைப்புக்கு மட்டுமல்ல சுறுசுறுப்பு, கட்டுப்பாடு, கூட்டு முயற்சி ஆகியவற்றிக்கு தேனீயே அடையாளமாக இருக்கின்றது ஆண்டொன்றுக்கு 450 கிலோ மலரின் குளுக்கோஸ், புரோபோலிஸ் எனப்படும் பிசின், நீர் மற்றும் மகரந்தத்தை முன்கூட்டியே சேமித்துக் கொள்கிறது. எனவே உணவுப் பதப்படுத்துவதில் முன்னோடியும் தேனீதான். தேனீக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கின்றன. பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மொத்தம் 44 இனங்கள் உள்ளன. அறிவியலில் ஏப்பிடே (Apidae) எனும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) எனும் இனத்தைச் சார்ந்தவை தேனீக்கள். மனிதனைப் போலவே தேனீக்களும் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். தேனீக்களில் முதல் வகை இராணித் தேனீ. இதுதான் தேனீக்களில் மிகப் பெரியது. தலைமை வகிக்கும். இதன் ஆயுள் 3 ஆண்டுகள். இதன் வேலை இனப்பெருக்கம் செய்வது. 2 ஆவது ஆண் தேனீ. இதன் வேலை கூட்டை பராமரிப்பது, ராணித் தேனீயை கவனித்துக் கொள்வது. 3ஆவது வேலைக்காரத் தேனீ. ஒரு தேனீக் கூட்டத்தில் இதுதான் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதன் வேலை உணவு சேகரிப்பது, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற முக்கியமான அனைத்தையும் செய்யும். இதன் ஆயுள் 2 மாதங்கள். செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக் காலமாக தேனீக்கள் வேகமாக அழிந்து வருவது வேதனைக்குரியதுதானே..
இன்றைக்கு பேஷன் உலகம் பெருகிவிட்டதை போலே அதற்கான இதழ்களும் உலகம் முழுவதும் ஏராளமாக வருகின்றன. அது ஒரு தனி துறையாகவே உருவெடுத்து வளர்ந்து நிற்கிறது. அதே வேளையில் முதன்முதலாக பேஷனுக்கென இதழ் எப்போது வந்தது தெரியுமா 1586 இல் Josse Amman என்ற சுவிஸ் ஓவியரால், Gynasceum, sive Theatrum Mulierum என்ற பெயரில் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. இந்த இதழின் பொருள் பெண்ணின் அரங்கு என்பதாகும். இது பெண்களின் ஆடைகளை என்கிரேவிங் முறையில் அச்சடித்து அன்றைய பேஷன் குறித்து பேசு பொருளாக்கியது.
உலகம் முழுவதும் தற்போது புதிய போக்கு அதான் டிரெண்டிங் ஒன்று உருவாகி வருகிறது. அண்மையில் இங்கிலாந்தில் பெண்களின் ஆடையை அணிந்து வந்த சிறுவனை வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இருபாலருக்குமான ஆடை விவகாரம் விவாதப் பொருளாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி ஒன்றில் மாணவர்களை குட்டை பாவாடை அணிந்து வரச் சொன்ன சம்பவங்களும் நடைபெற்றன. இந்த சூழலில் இதே போன்ற ஒரு சம்பவம் கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா என்ற இடத்தில் நடந்துள்ளது. அங்கு பெண்கள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என கண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து Mason Boudreau என்ற 17 வயது மாணவன் பெண்கள் அணியும் டாப்ஸ், சார்ட்ஸ் என டூபீஸ் ஆடையில் வந்து பள்ளியை தெறிக்க விட்டுள்ளான். மேலும் இது வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இரு பாலாருக்கு பாலின பாகுபாடு இல்லை என்கிற போது ஆடையில் மட்டும் பாரபட்சம் ஏன் என்ற கேள்வி உலகம் முழுக்க உரத்துக் கேட்கத் தொடங்கியுள்ளது.
அன்னாசி பழத்தில் அதிகளவு மருத்துவ பலன்கள் உள்ளது. இதில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான தொப்பை குறைய ஆரம்பிக்கும். 100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. ஒரு அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நமக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் புரதச்சத்தை பெற்று விடலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
பாகிஸ்தான் குண்டுமழை.. ஆப்கானிஸ்தானில் 133 பேர் பலி
27 Feb 2026லாகூர், தாலிபான்களின் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய நகரமான காந்தஹார் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது இதில் 133 பேர் க
-
அண்ணா அறிவாலயத்தில் ஆதரவாளர்களுடன் தி.மு.க. உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் ஓ.பி.எஸ்..!
27 Feb 2026தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.
-
தி.மு.க.வில் இணைந்த ஓ.பி.எஸ்.க்கு அ.தி.மு.க. கண்டனம்
27 Feb 2026சென்னை, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்திருப்பதன் மூலம் தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க.
-
எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தென்கொரியாவை அழிப்போம்: வடகொரியா தலைவர் எச்சரிக்கை
27 Feb 2026பியாங்யாங், தென்கொரியா எங்களின் தீராத எதிரி நாடு. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த இனி எதுவுமே இல்லை. ஒரே நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
-
சி.பி.ஐ. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் கதறி அழுத அரவிந்த் கெஜ்ரிவால்
27 Feb 2026டெல்லி, சி.பி.ஐ. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கதறி அழுத சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு
27 Feb 2026பகிர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் பங்குச் சந்தைகள் நேற்று (பிப். 27) கடும் சரிவுடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றுள்ளன.
-
மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு: வாபஸ் பெற்றார் ராமதாஸ்
27 Feb 2026சென்னை, மாம்பழ சின்னம் தொடர்பாக அன்புமணி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு
27 Feb 2026பென்னாகரம், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
ரஷ்யா செல்கிறார் பாக். பிரதமர்
27 Feb 2026லாகூர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷ்யாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவாகரத்து கோரி விஜய் மனைவி கோர்ட்டில் மனு வருகிற ஏப்ரல் 20-ம் தேதி விசாரணை
27 Feb 2026செங்கல்பட்டு, விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.- ஆப்கானிஸ்தானுக்கு சீனா அழைப்பு
27 Feb 2026பெய்ஜிங், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரை நிறுத்துமாறு இரு நாடுகளையும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.
-
நேபாள பொதுத் தேர்தல்: 3 நாட்கள் இந்திய எல்லை மூடல்
27 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், மார்ச் 2 முதல் 3 நாள்களுக்கு இந்திய-நேபாள எல்லை மூடப்படுகிறது.
-
கெஜ்ரிவால் விடுவிப்பை எதிர்த்து சி.பி.ஐ. உடனடியாக மேல்முறையீடு
27 Feb 2026புதுடெல்லி, மதுபானக் கொள்கையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சி.பி.ஐ.
-
அனைத்து உண்மைகளும் வெளிப்படும் வரை நெருக்கடிகளை உறுதியோடு எதிர்கொண்ட கெஜ்ரிவால், சிசோடியாவுக்கு பாராட்டுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
27 Feb 2026சென்னை, உண்மை வெளிப்படும் வரை அனைத்து நெருக்கடிகளையும் உறுதியோடு எதிர்கொண்ட மதிப்பிற்குரிய நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவுக்கு எனது பாராட்டுகள் என்
-
வருகிற 4-ம் தேதி திருமண வரவேற்பு: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா நேரில் அழைப்பு
27 Feb 2026ஐதராபாத், வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.
-
5.4 ரிக்டர் அளவில் வங்கதேசத்தில் நிலநடுக்கம்
27 Feb 2026டாக்கா, வங்கதேச நாட்டில் ஏற்பட்ட 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், கொல்கத்தா உள்ளிட்ட இந்தியப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
27 Feb 2026மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியிலிருந்து 87.79 அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
-
தமிழகத்துக்கு தேர்தல் நேரத்தில் கூட மத்திய அரசு நிதி தரவில்லை: கோவை மாநாட்டில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Feb 2026கோவை, கோவை, மதுரைக்கு மெட்ரோவுக்கு பிரதமர் மோடி ஏன் அதுமதி தரவில்லை.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
27 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆறுமுக நயினார் பச்சை சாத்தி.
- மதுரை இம்மையிலும் நன்மை தருவார், காரமடை அரங்கநாதர் கோவில்களில் திருக்கல்யாணம்
-
இன்றைய நாள் எப்படி?
27 Feb 2026


