முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் மிகச்சிறிய நாடு எது தெரியுமா?

உலகின் மிகச்சிறிய நாடு ‘வாடிகன் சிட்டி’. இது மொத்தமாக 0.44 சதுர கிலோமீட்டர் அளவே உடையது. மொத்தமாக 110 ஏக்கர் மட்டுமே, இதன் பரப்பளவு. இது ரோம் நகரின் உள்ளேயே அமைந்துள்ளது. இது உலகளாவிய கத்தோலிக சபையின் தலைமை இடமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய தேவாலயமான புனித பீட்டர் பஸிலிக்கா இங்கு உள்ளது. இது 1929ம் ஆண்டு, முசோலினி போப்புடன் செய்துக் கொண்ட லாட்டரன் உடன்படிக்கையின் போது உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, இது நடுநிலை நாடாக இருந்தபடியால், மேலும் கத்தோலிக சபையின் தலைநகராக இருந்தபடியால், தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. உலகெங்கிலும் உள்ள 100 கோடி கத்தோலிகர்களின் தன்னார்வ கொடையே இதன் வருமானம். இதைத் தவிர, அருங்காட்சியக நுழைவுக் கட்டணம், தபால் தலைகள், சுற்றுலா நினைவுப் பொருட்கள் வழியாக பணம் கிடைக்கிறது. இதன் மொத்த மக்கள் தொகை, கிட்டத்தட்ட 1000 மட்டுமே. இது பிறப்பினால் வரும் குடியுரிமை அல்ல. இது கத்தோலிக சபையின் பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தப்படும் நபர்களுக்கு, மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, அந்த பொறுப்பின் காலத்திற்கேற்ப, குடியுரிமை வழங்கப்படும். அந்தப் பொறுப்பின் காலத்திற்கு பிறகு, தன்னிச்சையாகவே, லாட்டரன் உடன்படிக்கையின் படி, அந்தக் குடியுரிமை இத்தாலிய குடியுரிமையாக மாற்றப்படும்.

ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

பொதுவாக ஹோலி பண்டிகை என்றாலே வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றுதான் நாம் அனைவரும் கருதுகிறோம். ஆனால் அது தவறு.. ஹோலி பண்டிகை இந்தியா முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுவதுடன் பிற ஆசிய நாடுகளிலும், தற்போது உலக நாடுகளிலும் கூட ஹோலி கொண்டாடப்படுகிறது. ஹோலியின் போது வண்ணப் பொடிகளை தூவி கொண்டாடுவது வடநாட்டு ஸ்டைல். மஞ்சள் குளித்து கொண்டாடுவது கேரள ஸ்டைல், பால்குடம் எடுத்து பங்குனி உத்திரம் என கொண்டாடுவது தமிழகத்து ஸ்டைல். எப்படியானாலும் குளிர்காலம் முடிந்து வசந்தம் தொடங்குவதை அறிவிக்கும் விதமாக பங்குனி (அல்லது பால்குன) மாதத்தின் பவுர்ணமி தினத்தன்று கொண்டாடுவதுதான் ஹோலி. மேலும் இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. ரண்ய கசிபுவை விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் வந்து வெற்றி கொண்ட நாளாகவும் ஒரு தரப்பினரால் கொண்டாடப்படுகிறது.

உலகை முதன்முதலாக கப்பலில் சுற்றி வந்த பயணி

பெர்டினல் மெக்கலன் என்ற ஸ்பெயின் நாட்டு மாலுமி 1519 இல் 5 கப்பல்களுடன் இந்தியாவை தேடி புறப்பட்டார். அவர் தென் அமெரிக்கா வந்து அங்கிருந்து மேற்கொண்டு செல்லும் வழியை தேடினார். அவர் வந்த கடற்பாதைதான் மெக்கல்லன் நீரிணை என்று அறியப்படுகிறது. பசிபிக் பெருங்கடல் வழியாக 99 நாட்கள் பயணம் செய்து குவாம் என்ற தீவை அடைந்தார். பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ் வந்தனர். அங்கு ஏற்பட்ட உள்நாட்டுகாரர்களுடனான சண்டையில் மெக்கல்லன் கொல்லப்பட்டார். மிஞ்சியவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். 1522 ஆம் ஆண்டு 3 வருட  பயணத்துக்கு பிறகு அவர்கள் மீண்டும் ஸ்பெயின் வந்தடைந்தனர். இந்த பயணம்தான் உலகை சுற்றி வந்த முதல் கப்பல் பயணம் என அறியப்படுகிறது. 

தானியங்கி பேருந்து

பாரீஸின் 2 ரயில் நிலையங்களுக்கு இடையில் தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாமல் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பேருந்து சேவையானது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்காக சிறப்பு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. 130 மீட்டர் தொலைவிற்கு இயங்கும் இந்த தானியங்கி பேருந்தில் 10 பயணிகள் வரை பயணிக்க முடியும்.

முகத்தை செல்போனால் ஸ்கேன் செய்தால் கொரோனா இருப்பது தெரிந்து விடும்

உலகதத்திலேயே முதன் முறையாக செல்போனால் முகத்தை ஸ்கேன் செய்தால் கொரோனா இருப்பதை கண்டறியும் தொழில் நுட்பம் அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று பாதிப்புகள் உள்ள கண்டறியப்படும் நிலையில் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பேருந்து, ரயில், விமான நிலையங்கள் என மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்கள் அனைத்திலும் கொரோனா சோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அபுதாபியில் கொரோனா சோதனை செய்ய புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அபுதாபியின் இடிஇ ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக செல்போன் கேமராவை கொண்டே முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடியும். ஸ்கேன் செய்யும்போது பச்சை வண்ணம் காண்பித்தால் நெகட்டிவ் என்றும், சிவப்பு வண்ணம் காட்டினால் பாசிட்டிவ் உள்ளதாகவும் கொள்ளப்படுகிறது. அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால்கள், கடைகள் மற்றும் பொது வெளிகளில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.

3500 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மியை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்த விஞ்ஞானிகள்

உலக அதிசயங்களில் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மிகளும் மக்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருபவை.  மம்மிக்களை ஆய்வு செய்யும்போது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக 3500 ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு கண்டடைந்தனர் என்பது விளங்காத மர்மமாகவே உள்ளது. இதனால் மம்மிக்களை ஆய்வு செய்யும் போது அவற்றை திறப்பதால் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தற்போது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மம்மிக்களை திறக்காமலேயே அவற்றை டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் ஆய்வு செய்யும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து  பிரமிடிலிருந்து கடந்த 1881 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட அமேன்ஹோடெப் என்ற மன்னரின் மம்மியை டிஜிட்டல்  முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல்வேறு அதிசய தகவல்கள் வெளியாகின. அவர் இறக்கும் போது அவருக்கு வயது 35.  சுமார் 5 அடி உயரம் கொண்ட அந்த மன்னரின் பற்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளன.  உடலை சுற்றியிருந்த துணிக்குள் மன்னருக்கு தங்கத்தாலான ஆடையும் அணிவிக்கப்பட்டிருந்தது. உடலில் காயங்கள் இல்லாததால் அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தெரியவில்லை. இவர் கிமு 1525 முதல் 1504 வரை 21 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இதனால் இவர் மிகவும் இள வயதிலேயே முடி சூடி இருக்கலாம். இன்றைக்கு மருத்துவம் தொழில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ள போதிலும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில் நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு தெரிந்து வைத்துள்ளனர் என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago