பொதுவாக ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்று நாம் படித்திருப்போம். 1851 ஆண்டில் கார்ல் ரெய்னஹோல்டு என்பவர் தெர்மோமீட்டரை கண்டு பிடித்தார். அவர் 10 தடவை 25000 பேர்களிடம் ரீடிங் எடுத்து, சராசரியாக மனித உடலின் வெப்ப நிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்று அறிவித்தார். இதையே அனைவரும் வேத வாக்காக எடுத்துக் கொண்டனர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி மனித உடலின் வெப்பநிலை 1-2 டிகிரி குறைவாகவே காணப்படுவது தெரியவந்துள்ளது. பல்வேறு பதிவுகளில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் மேற்கொண்ட சோதனையில் கடந்த 100 ஆண்டுகளில் மனித உடலின் வெப்ப நிலை1.5 பாரன்ஹீட் குறைந்துள்ளது. இது போக கடந்த சில ஆண்டுகளில் இந்த குறைகின்ற வேகம் அதிகரித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டில் 0.05 பாரன்ஹீட் வெப்பம் குறைந்து வந்துள்ளது. வழக்கம் போல புவிவெப்பமயமாதல் என்ற பல்லவி பாடப்படுகின்ற போதிலும் இதற்கான சரியான அறிவியல் காரணம் இன்னும் தெரியவரவில்லை என்பதுதான் உண்மை.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.
நாம் அனைவரும் ரயிலில் பயணம் செய்திருந்தாலும் பெரும்பாலானோர் ரயிலின் கடைசி பெட்டியை கவனித்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் குறிப்பாக கடைசி பெட்டியில் மிகப் பெரிய அளவில் ஆங்கில எழுத்தான X வடிவில் என்ற குறியீடு வரையப்பட்டுள்ளதை பார்த்திருந்தாலும் அதன் பொருள் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரயில்வே பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அந்த குறீயிடானது. புறப்பட்டு செல்லும் ரயிலின் அனைத்து பெட்டிகளும் எந்த வித பழுதும் இன்றி, முறையாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கத் தான் அந்த குறியீடு வரையப்பட்டுள்ளது. அதை பார்த்த பிறகே கார்டு கொடியை அசைக்க ரயில் புறப்பட தயாராகும். அதே போல இந்த குறியீட்டிற்கு கீழே சிவப்பு விளக்கு ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு 5 நொடிக்கும் அந்த விளக்கு ஒளிரும்.அதே போல் கடைசிப்பெட்டியின் அடிப்பகுதியில் மாட்டப்பட்டு இருக்கும் பலகையில் எழுத்துக்கள் கருப்பு அல்லது வெள்ளை நிறங்களில் எழுதப்பட்டிருக்கும் LV என்ற ஆங்கில எழுத்தும் பாதுகாப்பு குறித்து துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதற்காக அவை எழுதப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த பலகை ரயிலின் கடைசிப்பெட்டியில் காணப்படவில்லை என்றால், ரயில் பெட்டிகள் கழன்று இருப்பதை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எளிதில் கண்டறிய முடியும். அவற்றை சரி செய்த பிறகே ரயில் புறப்படும்.
உலகிலேயே அதிக பொருட்செலவில் படங்களை தயாரிக்கும் துறையாக அமெரிக்காவின் ஹாலிவுட் விளங்கி வருகிறது. இங்கு அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் எது தெரியுமா...நீங்கள் பல்வேறு படங்களை கற்பனை செய்தால் அதெல்லாம் குறைவாகத்தான் இருக்கும். பைரேட் ஆஃதி கரீபியன் என்ற திரைப்படம் தான் இதுவரை எடுக்கப்பட்ட படங்களிலேயே அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்துக்குகாக பட நிறுவனம் 375 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் மூவாயிரம் கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக ஹாலிவுட்டில் அதிக பொருள் செலவில் படம் எடுப்பற்கான பட்ஜெட் சுமார் ரூ.500 கோடி வரைதான் அதாவது 65 மில்லியன் டாலர் என்ற அளவில்தான் திட்டமிடப்படும். அப்படியானால் இந்த படத்தின் செலவை நினைத்து பாருங்கள்...ஆச்சரியமாக உள்ளது அல்லவா.
சென்னையில் விரைவு ரயில், மின்சார ரயில் பயணச்சீட்டுகளை எடுப்பதற்கு கால தாமதத்தை தவிர்க்க, தெற்கு ரயில்வே தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பயணச்சீட்டு வழங்கும் கவுண்ட்டர் அறை அருகே இதை வைத்துள்ளது. இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே பயணச்சீட்டு எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகளின் கூடுதல் வசதிக்காகவும், மேலும் கால தாமதத்தை தவிர்க்கவும், தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தில் 'க்யூ. ஆர்' கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதியையும், பயணச்சீட்டு பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பயணிகள் 'க்யூ. ஆர்' கோடை ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று கொள்ளலாம். மேலும் மாதாந்திர பயண சீட்டை க்யூஆர் கோடு மூலம் புதுப்பித்து கொள்பவர்களுக்கு 0.5 சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030-இல் பூமிக்கு ஆபத்து ஏற்படுமாம். காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படுவதால் தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படுமாம். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 18 hours ago |
-
சீன அதிபரின் பேச்சு: அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா?
31 Aug 2025பெய்ஜிங் : டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சீன அதிபரின் பேச்சு அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-08-2025
31 Aug 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு
31 Aug 2025சென்னை : ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
விஜய் சுற்றுப்பயணம்: மாவட்ட செயலாளர்களுக்கு த.வெ.க. உத்தரவு
31 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
தெருநாய் வழக்கு என்னை பிரபலமாக்கியது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் பேச்சு
31 Aug 2025டெல்லி : தெருநாய் வழக்கு என்னை பிரபலமாக்கியதாத சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் தெரிவித்துள்ளார்.
-
பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 94.29 ஏக்கர் நிலம் மீட்பு : தமிழக அரசு தகவல்
31 Aug 2025சென்னை : பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 94.29 ஏக்கம் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்
31 Aug 2025சென்னை : தமிழகத்தின் காவல் துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு ) ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மதுரையில் 4-ம் தேதி நடக்க இருந்த ஓ.பி.எஸ். மாநாடு ஒத்திவைப்பு
31 Aug 2025சென்னை : மதுரையில் வருகிற 4-ம் தேதி நடக்க இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன:மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேதனை
31 Aug 2025புதுடெல்லி : பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார்.
-
2 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
31 Aug 2025சென்னை : 2 நாள் பயணமாக நாளை ஜனாதிபதி திரெளபதி முர்மு தமிழகம் வருகிறார்.
-
எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு விண்ணப்பம் செய்த தன்கர்
31 Aug 2025ஜெய்ப்பூர் : ராஜினாமா ஏற்படுத்திய பரபரப்புக்கு இடையே எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு ஜெகதீப் தன்கர் விண்ணப்பம் செய்துள்ளார்.
-
டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் : பிரதமர் மோடியிடம் சீன அதிபர் வலியுறுத்தல்
31 Aug 2025பெய்ஜிங் : டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் சீன அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
-
இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதல்வர்: தொடர்ந்து முதலிடத்தில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்
31 Aug 2025புதுடெல்லி : இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல்வர் யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உ
-
கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு மீது இன்று விசாரணை
31 Aug 2025புதுடெல்லி : கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம் தொடர்பான அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
-
மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் 50 பி.எஸ்சி. நர்சிங் கூடுதல் இடங்கள்
31 Aug 2025மதுரை : மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
-
பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால் ஆதரவு கேட்க தயார்: சுதர்சன் ரெட்டி
31 Aug 2025ராஞ்சி : பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால் அவர்களிடம் ஆதரவு கேட்க தயார் என்று சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு விவகாரம்: ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். கடிதம்
31 Aug 2025சென்னை : அமெரிக்காவின் தற்போதைய கூடுதல் வரி விதிப்பால் நம் நாட்டில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில், மற்ற நாடுகளு
-
இந்த மாதம் 2-ம் வாரத்தில் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி?
31 Aug 2025புதுடெல்லி : இந்த மாதம் (செப்டம்பர்) 2-ம் வாரத்தில் பிரதமர் மோடி இம்பால் மற்றும் சூரசந்த்பூர் மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நான்கு நாட்களிலேயே பாகிஸ்தான் மண்டியிட்டது: இந்திய விமானப்படை
31 Aug 2025புதுடெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா மே மாதம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் கு
-
ட்ரம்ப்பின் இந்திய பயணம் ரத்து?
31 Aug 2025வாஷிங்டன் : குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிற்கு டிரம்ப் வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிரம்ப்பின் இந
-
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது
31 Aug 2025புதுடெல்லி : பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
-
பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
31 Aug 2025சென்னை : பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்க
-
டெல்லியில் பறவைக்காய்ச்சல் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்
31 Aug 2025புதுடெல்லி : 2 நாட்களுக்கு முன்பு 2 வண்ண நாரைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை டெல்
-
அமெரிக்க வரி விதிப்பால் கோவையில் 35 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
31 Aug 2025கோவை : அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி தற்போது அமலுக்கு வந்துள்ளது.
-
இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை - ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடி அறிவிப்பு
31 Aug 2025பெய்ஜிங் : சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.