முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பழமையான தொழில் பல் மருத்துவம்

உலகின் பழமையான தொழில்களில் பல் மருத்துவமும் ஒன்று என்பது தெரிய வந்துள்ளது. ஒரு ஆய்வின் போது கிடைத்த மண்டையோட்டில் சுமார் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லில் துளையிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல இத்தாலியில் உள்ள போலோக்னா பல்கலை கழகம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில் சுமார் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது வரலாற்று காலத்துக்கு முன்பே ஒரு சொத்தை பல்லை கருவிகளால் அகற்றிய தடயம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆச்சரியம் ஆனால் உண்மை

பிரிட்டனில் ஒரு ஆண், கருவை சுமந்து குழந்தையை பெற்றெடுக்க தயாராகி வருகிறார்.  உலகம் உருவான நாள் முதல் குழந்தைக்கு தந்தை என ஆண் இருந்து வருகிறார். குழந்தையை கருவில் சுமக்கும் பெண்ணே தாயாக இருந்து வருகிறார். இந்த நிகழ்வை மாற்றும் விதமாக  இந்த பிரிட்டனில் ஆண் ஒருவர், கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற முடிவு செய்துள்ளார். இவர்  கடந்த 3 ஆண்டுகளாக சட்ட பூர்வமாக ஆணாக வாழ்ந்து வருகிறார். இவர்  பெண் பாலினத்தில் இருந்து ஆண் பாலினமாக மாறும் ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர். இவர் தனது வயிற்றில் கருவை சுமந்து குழந்தை பெறும் போது குழந்தையை தனது வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த முதல் பிரிட்டன் ஆண் என்ற சாதனையை படைப்பார்.

பூமியின் பரிணாம வளர்ச்சியில் பறவைகள் எப்படி தோன்றின தெரியுமா?

பொதுவாக மீன்கள் போன்ற நீர் வாழ் விலங்குகளிலிருந்து பறவைகள் தோன்றியிருக்கலாம் நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் பறவைகள் பரிணாம வளர்ச்சியில் டினோசர்களிடமிருந்தே தோன்றியதாம். இவை இரண்டும் ஊர்வன இனங்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக பறவையானது முதலையிலிருந்தே தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதே போல திமிங்கலம், டால்பின் ஆகியவற்றுக்கு ஒரு காலத்தில் பின்னங்கால்கள் இருந்தனவாம். அதன் அடையாளமாக அவற்றின் உடலில் ஒரு சிறிய எலும்பு உள்ளது. இதுதான் அவற்றுக்கு பின்புற துடுப்பாக மாற்றமடைந்திருக்கலாம் என்கின்றனர். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

பாம்பு கடித்தும் சாகாத மனிதன்

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் 1910 இல் பிறந்தவர் பில் ஹாஸ்ட். இவருக்கு சிறுவயது முதலே பாம்புகள் மீது ஆர்வம் ஏற்பட்டு வந்துள்ளது. 1947 முதல் 1984 வரை புளோரிடாவின்மியாமி செர்பென்டேரியத்தின் உரிமையாளராக இருந்தார். அங்கு வாடிக்கையாளர்களுக்கு பாம்புகளிடமிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் வேலையை செய்து வந்தார். பாம்புகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மித்ரிடாடிசம்(mithridatism) என்ற அணுகுமுறையைப் பயன்படுத்தவும் பில் முடிவு செய்தார். அது அவரை பாம்புக்கடியிலிருந்து பாதுகாத்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி அல்லது விஷ எதிர்ப்பை வளர்ப்பதற்காக அதிக அளவில் நச்சுத்தன்மையை உட்கொள்வதற்கான ஒரு நுட்பமாகும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக 32 வகையான பாம்புகளின் விஷத்தின் கலவையை தினமும் ஊசி மூலம் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டதே அவரது பாம்பு விஷத்தை எதிர்க்கும் வெற்றியின் ரகசியம் என சொல்லப்படுகிறது.யானையைக் கொல்லும் அளவுக்கு விஷத்தை கக்கும் திறன் கொண்ட ஒரு பாம்பின் கடியில் இருந்து கூட அவர் உயிர் பிழைத்தார். ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த அபாயகரமான அனுபவங்கள் தவிர்க்க முடியாத மரணத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் வாழ்வில் 173 முறை கொடிய விஷமுள்ள பாம்பு கடியிலிருந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சஹாராவில் மக்கள்

உலகின் மிகவும் வறண்ட நிலமான பாலைவன பூமி சஹாரா. உலகில் சஹாரா பாலைவனம் மூன்றாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,200,000 சதுர கிலோமீட்டர்கள். கடந்த 100 ஆண்டுகளில் சஹாரா பாலைவனம் 10% வளர்ச்சியடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். சஹாராவில் மக்கள் வாழ்கிறார்கள் தெரியுமா? சுமார் 2.5 மில்லியன் மக்கள் சஹாராவை தங்கள் வீடு என்று அழைக்கிறார்கள். இவர்கள் இங்கு நாடோடிகளாக வாழ்கின்றனர். ஒட்டகங்களுடன் பயணம் செய்யும் பெடோயின் நாடோடி மக்கள் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சுற்றிலும் பாலைவனத்தைச் சுற்றி நகர்கிறார்கள். பருவ மாற்றம் மற்றும் அவர்களின் தேவைகளைப் பொறுத்து இயற்கை வளங்களுக்கு அருகில் கூடாரங்கள் அடித்து முகாம்களை உருவாக்குகிறார்கள். சஹாரா வறண்டது என்ற போதிலும் இரவில் வெப்பநிலை வியக்கும் அளவில் குறைகிறது. வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறையும். பல மலைத்தொடர்களில் பனி தவறாமல் விழுகிறது. சஹாரா பாலைவனத்தில் மொத்தம் 20 ஏரிகள் உள்ளன. சஹாராவில் உள்ள ஒரே நன்னீர் ஏரி சாட் ஏரி. இங்கு 1960கள் வரையிலும் கூட சிங்கங்கள் வாழ்ந்தன. அவை பாலைவனத்தின் வறட்சியால் அழியவில்லை. மனிதர்களின் வேட்டையினாலேயே அவை முற்றிலும் அழிந்து போயின என்பது மிகுந்த சோகம்தானே.

தாகம் தீர்க்க

கோடை வெயில் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலருக்கும் தாகம் அதிகமாக இருக்கும். என்ன தான் தண்ணீரை குடித்தாலும், தாகம் அடங்காமலேயே இருக்கும். எனவே உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் பராமரிக்க, நீரை அதிகம் குடிப்பதோடு, ஒருசில உணவுப் பொருட்களையும் அதிகம் சாப்பிட வேண்டும். வருடம் முழுவதும் கிடைக்கும் ஓர் பழம் தான் ஆப்பிள். இந்த ஆப்பிளை கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிடுவதன் மூலம், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago