முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

2000 ஆண்டுகள் பழமையான கல்லறையில் எழுதப்பட்டிருந்தது பூஜ்யமா?

கர்நாடக மாநிலம் தஷிண கன்னட மாவட்டத்தில் உள்ள கடப்பா தாலுகாவில் ராமகுஞ்சா கிராமத்தில் பாண்டவர் குகை எனப்படும் தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கல்லால் ஆன கல்லறை ஒன்று இருப்பதாக உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எம்எஸ்ஆர்எஸ் கல்லூரியின் தொல்லியல் துறை தலைவர் பேரா. முருகேஷி மற்றும் ஆய்வு மாணவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்லால் ஆன கல்லறையை கண்டறிந்தனர். அது மட்டுமின்றி அதன் மேற்புறத்தில் உள்ள கல்லில் வட்ட வடிவில் அல்லது பூஜ்ய வடிவில் எழுதப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து முருகேஷி கூறுகையில், அதன் மேற்புறத்தில் காணப்படுவது வட்டமா அல்லது அப்போதே இங்கு வாழ்ந்த மக்கள் பூஜ்யத்தின் பயன்பாடுகளை அறிந்துள்ளனரா என்பது வியப்பாக உள்ளது. இது குறித்து மேலும் ஆய்வு செய்தால் பல்வேறு வரலாற்று உண்மைகள் தெரியவரும் என்றார். கற்கால தொல்லியல் எச்சத்தின் மீது எழுதப்பட்டுள்ளது பூஜ்யமா என்ற கேள்வி விஞ்ஞானிகள் மட்டுமின்றி பொது மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரடிகளை காப்பாற்றிய நாய்க்கு சர்வதேச விருது

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயிலிருந்து 100 கோலா கரடிகளை மீட்க உதவிய துணிச்சலான நாய்க்கு சர்வதேச விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் காட்டுத் தீ பரவியது. இதில் ஏராளமான மரங்கள், செடிகள், கொடிகள் கருகியதுடன், பறவைகள், விலங்குகளும் பாதிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட அரிய வகை விலங்கான கோலா கரடிகளை மீட்கும் பணியில் சிறப்பு குழுவினர் ஈடுபட்டனர். இதில் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களுடன் இணைந்து  பயிற்சி பெற்ற நாய் ஒன்றும் அவர்களுக்கு இணையாக தீரமாக போராடி உதவியது. பீர் (Bear) எனப் பெயரிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியன் கூலி இன நாய்தான் இந்த வீர சாகசத்துக்கு சொந்தக்காரி.  இதற்காக ஆஸ்திரேலியாவின் Sunshine Coast பகுதியில் அமைந்திருக்கும் University of the Sunshine Coast பல்கலை கழகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீர தீர சாகசத்தை புரிந்த பீருக்கு International Fund for Animal Welfare என்ற சர்வதேச விலங்குகள் தன்னார்வ அமைப்புதான் விருது வழங்கி கவுரவித்துள்ளது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இந்த நாய் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

செல்ஃபி எடுக்க

செல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள அல்காரிதம், செல்ஃபி எடுக்கும் போது கேமிராவை எங்கு வைப்பது, எந்த திசையில் சரியான ஒளி கிடைக்கிறது, முகத்தின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது. அதன்மூலம் சிறந்த செல்ஃபிக்களை எடுக்க பயனாளர்களுக்கு உதவுமாம்.

உலகிலேயே மிகவும் டெர்ரரான நாய்

புல் வகை நாயும் டெர்ரிஸ் வகை நாயும் சேர்ந்த கலப்பின நாய்தான் பிட்புல். நம்மூரில் நடத்தப்படும் சேவல் சண்டைகளைப் போல ஐக்கிய நாடுகளில் இந்த நாய்களைப் பயன்படுத்தி பிட்புல் சண்டைப்  போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1835-ம் ஆண்டு பிட்புல்லை பயன்படுத்தி போட்டிகள் நடைபெறுவதற்கு  அமெரிக்கா  மற்றும் பிரிட்டன் நாடுகள் தடைவிதித்தன. ஆனாலும், இப்போது வரை சட்டத்துக்குப் புறம்பாக பிட்புல் சண்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  பிட்புல் நாய்கள் அடிப்படையில் மூர்க்க குணம் கொண்டவை. இவ்வகை நாய்களை ஒருகாலத்தில் வேட்டையாடுவதற்குப்  பயன்படுத்தியிருக்கிறார்கள். சண்டைகளுக்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்பட்டதால் இவ்வகை நாய்களை பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பதில்லை.  உலகிலேயே மிக ஆபத்தான நாய் பிட்புல் தான். அந்நாய், மனிதர்கள், மிருகங்கள் என்று பாரபட்சமின்றி வாயில் கவ்வ தொடங்கி விட்டால் உயிர் போகும் வரை விடாது. இந்த நாயால், கடந்த 2005 ஆம் வருடத்திலிருந்து 2014ஆம் வருடம் வரை, அமெரிக்காவில் சுமார் 508 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 203 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

புதிய கிரகம்

பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில், உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது.  இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிசய கோயில்

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு ஏற்ற ஸ்தலமாக கருதப்படுவது திருநாகேஸ்வரம். இங்கு ராகுவுக்கு அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறிவிடுகிறது. இந்த அதிசயக் காட்சியை பக்தர்கள் கண்குளிர காணமுடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago