தங்க ஆபரணங்களை அணிவதில் பெரும்பாலானோருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. ஆனால் அதே வேளையில் உடலில் யாரும் கிலோ கணக்கில் தங்கத்தை நகைகளாக செய்து அணிந்து கொண்டு வலம் வருவதில்லை. வியட்நாமைச் சேர்ந்த 39 வயது இளைஞர் இதில் சற்று வேறு ரகம். இவர் தங்கத்தின் மீது தீராத மோகம் கொண்டவர். இவரது உடலில் இவர் அணிந்திருக்கும் தங்க நகை மட்டும் எவ்வளவு தெரியுமா 2 கிலோ. ஆன் ஜியாங் மாகாணத்தில் வசித்து வரும் டிரான் டக் லோய் என்ற இளம் தொழில் முனைவோர்தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். இவருக்கு விதவிதமான உருவங்களை தங்க ஆபரணங்களாக செய்து அணிந்து கொள்வதில் தீராத ஆர்வம் உடையவர். ஆப்பிரிக்க பல்லி, டிராகன் போன்ற பல்வேறு உருவங்களை தங்கத்தால் செய்து விரலில் மோதிரமாகவும், கழுத்தில் சங்கிலியாகவும் அணிந்துள்ளார். அது மட்டுமா, தனது காரை முழுக்க முழுக்க தங்கத் தகடுகளால் வேய்ந்துள்ளார். காரின் டயரில் இருக்கும் இரும்பு பிளேட்களுக்கு பதிலாக தங்கத்தில் செய்து பொருத்தியுள்ளார். அது மட்டுமா தங்கத் தகடுகளால் வேயப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் இவர் வைத்துள்ளார். இதற்காக அந்நாட்டு பணத்தில் மில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளார். இதை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மில்லியன் கணக்கானோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலக சுகாதார அமைப்பின் படி உலகில் மொத்தம் 28.5 கோடி பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இந்தியாவில்தான் அதிக பார்வையற்றோர் இருக்கிறார்களாம். இந்நிலையில் உலகின் முதல் முறையாக பார்வையிழந்தோருக்கென வரைபடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தை, பார்வையற்றோர் உணர முடியும். கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மொத்தம் 84 பக்கம் கொண்ட வரைபடம் A-3 வகை காகிதம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடம் உருவாக்குவதற்கான திட்டப்பணிகள் 1997 ஆம் ஆண்டு துவங்கி தற்சமயம் நிறைவுற்றிருக்கிறது. முதற்கட்டமாக ஆங்கிலம் மட்டுமில்லாமல் பெங்காலி, குஜராத்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நாடுகளுக்கு இடையே நல்ல தண்ணீரை பகிர்ந்து கொள்வதில்தான் மிகப்பெரிய சவால்கள் அடங்கியுள்ளதாக அடிக்கடி சூழலியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். தற்போது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரால் நமக்கு பயன் என்றாலும் பாவம் பூமி பந்து படாத பாடு படுகிறது. தற்போது அதற்கு முடிவு கட்ட வந்து விட்டது Ooho water. லண்டனை மையமாக வைத்து இயங்கி வரும் ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் என்ற ஆய்வகம் கடற்பாசி மற்றும் தாவரங்களை பயன்படுத்தி திட வடிவிலான தண்ணீரை கண்டுபிடித்துள்ளது. இதனால் தண்ணீரை பாட்டிலில் அடைக்க வேண்டிய தேவை இருக்காது. மேலும் தாகம் எடுக்கும் போது இதை அப்படியே எடுத்து மெல்ல வேண்டியதுதான். பார்ப்பதற்கு நிறமற்ற நம்மூர் ஜவ்வுமிட்டாய் போல காணப்படும் இந்த Ooho வாட்டர் வாயில் போட்டதும் அப்படியே கல்கண்டாய் கரைந்து விடுகிறது. இயற்கையான முறைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.
இணையத்தில் இயங்கும் நூலகங்களில் ஒரு வியக்கத்தக்க பயனுள்ள நூலகம் டிஜிட்டல் மீடியா நூலகம். அதன் லிங்க் http://www.wdl.org/en/. அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம், இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் வடிவில் பதிந்து தருகிறது.உலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள், ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் மீடியாக்களாக இந்த ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன.இந்த நூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர் வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள், கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப் பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை நீங்கும். தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம் இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். கண் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம். சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு தொண்டைப் புண்ணும் குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கீரை ஆம்லெட்![]() 2 days 6 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 6 days 6 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 1 week 2 days ago |
-
தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட் பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
23 Mar 2023புதுடெல்லி: சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு
-
காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பு நிறைவு
23 Mar 2023ஜம்மு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் ஷ்ரேயாஸ்?
23 Mar 2023ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்.
-
நாட்டிலேயே முதல் முறையாக ராஜஸ்தானில் சுகாதார உரிமை மசோதா நிறைவேற்றம்
23 Mar 2023ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நாட்டிலேயே முதல் முறையாக சுகாதார உரிமை மசோதாவை நிறைவேற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது ராஜஸ்தான்.
-
தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மணிகா பாத்ராவின் பி.எஸ்.பி.பி. அணியை வீழ்த்தியது தமிழ்நாடு
23 Mar 2023ஜம்மு: நடப்பு தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் மணிகா பாத்ரா இடம்பெற்று விளையாடி வரும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் போர்டு (PSPB) அணியை வீ
-
தினசரி பாதிப்பு மேலும் அதிகரிப்பு- புதிதாக 1,300 பேருக்கு கொரோனா பாதிப்பு
23 Mar 2023புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 718 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 997 பேர் குணமடைந்துள்ளனர்.
-
தமிழகத்தை தொடர்ந்து விரைவில் புதுச்சேரியிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடைச் சட்டம்
23 Mar 2023புதுச்சேரி: மத்திய அரசு அனுமதி பெற்று ஆன்லைன் விளையாட்டுகளை புதுச்சேரியில் தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித
-
தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரிப்பு
23 Mar 2023சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 23) சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.44,320-க்கு விற்பனையானது.
-
கடைசி ஒருநாள் போட்டியில் சரியான பேட்டிங் இல்லாததால் தோல்வி: ரோகித் சர்மா விளக்கம்
23 Mar 2023சென்னை: கடைசி ஒருநாள் போட்டியில் சரியில்லாத பேட்டிங்கால் இந்தியா தோல்வியடைந்ததாக கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
-
ஹாட்ரிக் டக் அவுட்: மோசமான சாதனை பட்டியலில் இணைந்தார் சூர்யகுமார் யாதவ்
23 Mar 2023சேப்பாக்கம்: ஹாட்ரிக் டக் அவுட்டால் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.
கடைசி போட்டி...
-
தோல்வியை மறந்து விடக்கூடாது: ரோகித் சர்மா - டிராவிட்டுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தல்
23 Mar 2023மும்பை: தோல்வியை மறந்து விடக்கூடாது என்று ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டுக்கு சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-24-03-2023.
24 Mar 2023 -
மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்துவோம் ஹிண்டன்பர்க் அறிவிப்பால் பரபரப்பு
23 Mar 2023புதுடெல்லி: அதானி குழும மோசடியை தொடர்ந்து விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் என்று அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மதுபானம் அத்தியாவசிய பொருளா? டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஐகோர்ட் கிளை கேள்வி
23 Mar 2023விருதுநகர்: விருதுநகரில் மதுபானக்கடையை அகற்றக்கோரிய வழக்கில் ஐகோர்ட்டு மதுரை கிளை இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
-
8 அடி 3 அங்குலத்திற்கு தாடி வளர்த்த கனடா சீக்கியர் : தனது சாதனையை தானே முறியடித்தார்
24 Mar 2023சுவீடன் : சுவீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்திருந்தார். இதுதான் ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்தது.
-
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: கவர்னர் ரவிக்கு அனுப்பி வைப்பு
24 Mar 2023தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நேற்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
நாட்டை தவறாக வழி நடத்தி விட்டேன்: மீண்டும் மன்னிப்பு கோரினார் ஜான்சன்
24 Mar 2023லண்டன் : நாட்டை தவறாக வழி நடத்தியற்காக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
கியூப் விளையாட்டில் 9 வயது சீன சிறுவன் புதிய சாதனை
24 Mar 2023பெய்ஜிங் : சீனாவை சேர்ந்த இளம் வீரரான யிஹெங் (9), கியூப் விளையாட்டில் புதிய வேக சாதனையை படைத்துள்ளார்.
-
நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா
24 Mar 2023சியோல் : கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
-
மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
24 Mar 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிட
-
அமெரிக்க, சீன செயலிகளை கட்டுப்படுத்த பிரான்ஸ் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்
24 Mar 2023பாரீஸ் : அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
-
உலகக்கோப்பை வென்ற வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
24 Mar 2023லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை சந்தித்து உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.
-
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4: தேர்வு முடிவு வெளியீடு
24 Mar 2023குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாயின.
-
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை எதிரொலி: எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்
24 Mar 2023பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து க
-
புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது: மத்திய அரசுக்கு எதிராக 14 எதிர்க்கட்சிகள் மனு: சுப்ரீம் கோர்ட்டில் ஏப்ரல் 5-ல் விசாரணை
24 Mar 2023புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.