முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பொறாமை உணர்வு

பண்டிகைக் கொண்டாட்டம், விடுமுறைக் காலங்களில் எடுத்த புகைப்படங்களைப் நாம் ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்யும் போது, அதைப் பார்க்கும் முக நூல் நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமை உணர்வு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

காற்று தூய்மை

மன அழுத்தம் மட்டுமல்ல, காற்று மாசுபாடு கூட தூக்கமில்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. மூக்கு, தொண்டையின் பின்புறப் பகுதிகள் மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டு தூக்கமின்மைக்கு காரணமாக மாறுவதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

மனித முகங்களை வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளும் பறவை எது தெரியுமா?

மனிதர்களை அவர்களின் முகங்களை பார்த்தால் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளும் பறவை எது தெரியுமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. அது வேறு எதுவும் இல்லை... நாம் அன்றாடம் பார்க்கும் காகம் தான் அது. அது மனிதர்களின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டால் தனது வாழ் நாள் முழுவதும் மறக்காமல் அடையாளம் காணும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் நம்மால் ஒரு காகத்தை ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் நம் முன்னால் வந்தால் நம்மால் அடையாளம் காண முடியுமா.. நிச்சயம் முடியாது. அதே போல தன்னுடன் நட்பாக பழகும் மனிதர்களுக்காக அவை பரிசு பொருள்களை கொண்டு வந்து கொடுக்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கின்றனவாம்.  என்ன ஓர் ஆச்சரியம் பாருங்கள்.

இந்தியாவின் மர நகரம் எது தெரியுமா?

ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முகத்தை செல்போனால் ஸ்கேன் செய்தால் கொரோனா இருப்பது தெரிந்து விடும்

உலகதத்திலேயே முதன் முறையாக செல்போனால் முகத்தை ஸ்கேன் செய்தால் கொரோனா இருப்பதை கண்டறியும் தொழில் நுட்பம் அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று பாதிப்புகள் உள்ள கண்டறியப்படும் நிலையில் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பேருந்து, ரயில், விமான நிலையங்கள் என மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்கள் அனைத்திலும் கொரோனா சோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அபுதாபியில் கொரோனா சோதனை செய்ய புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அபுதாபியின் இடிஇ ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக செல்போன் கேமராவை கொண்டே முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடியும். ஸ்கேன் செய்யும்போது பச்சை வண்ணம் காண்பித்தால் நெகட்டிவ் என்றும், சிவப்பு வண்ணம் காட்டினால் பாசிட்டிவ் உள்ளதாகவும் கொள்ளப்படுகிறது. அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால்கள், கடைகள் மற்றும் பொது வெளிகளில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.

சூரியன் மறையாத அதிசய தீவு எங்குள்ளது தெரியுமா?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்படையில் உலகின் மற்ற பகுதியில் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்த தீவில் நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருட்டாகவே இருக்கும். அதே போல் ஆண்டில் சில மாதங்கள் இதற்கு நேர் எதிரானதாக இருக்கும். அதன்படி தற்போது அந்த தீவில் சூரியன் மறையாத காலம். அங்கு மே மாதம் 18- ஆம்தேதி நள்ளிரவு முதல் சூரியன் மறையாத காலகட்டம் தொடங்கும். ஜூலை 26- ஆம் தேதி வரை 69 நாட்களுக்கு இப்படித் தான் இருக்கும். இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை நிறையவே மாறியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago