முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மாற்றி சேமிக்க....

ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க முடியும். இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாகும் கம்யூட்டர் போட்டோனிக் கம்யூட்டர்  என்றும் அவை தற்போதை கம்யூட்டர்களை விட 20 மடங்கு அதிவேகமாக இயங்குமாம்.

பாதாமின் அற்புதம்

பாதாம் உடல் வலிமையையும், எலும்பின் வலிமையையும் ஊக்கவிக்கிறது.பாதாம் உட்கொள்வதால், இதய கோளாறுகள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன், பற்கள் வலி, பித்தக்கற்கள், இரத்த சோகை, மூளை சோர்வு, மலச்சிக்கல் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு சீரான தீர்வுக் காண முடியும்.  பாதாமை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்பு நன்கு உறுதியாகும்.

கண்டுபிடித்த நாசா!

நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்வதற்காக, 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் சந்திராயன் 1 செயற்கைக்கோளை, 2008-ஆம் ஆண்டு இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதன்பின் சந்திராயன் 1 செயற்கைக்கோள் அனுப்பட்ட பின் ஓராண்டு காலமாக நிலவைப் பற்றிய பல தகவல்களை கண்டறிந்து, இஸ்ரோவிற்கு அனுப்பியது. அதன்பின் 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியுடன் சந்திராயன் 1-இன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சந்திராயன் 1 தொலைந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில் சந்திராயன் 1 செயற்கைக்கோள் இன்னமும் நிலவைச் சுற்றி வந்துகொண்டிருப்பதாகவும், அது தொலையவில்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தற்போது தெரிவித்துள்ளது.

வீடு கட்டும் விலங்கினம் எது தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்

குஞ்சு பொரிப்பதற்கு முன்னால் பறவைகள் கூடுகட்டுகின்றன. அதே போல குட்டி போடுவதற்கு முன்பாக விலங்குகள் ஏதேனும் கூடு அல்லது வீடு கட்டுகின்றனவா.. என்று கேட்டால், ஆம் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பாலூட்டிகளில் ஒரு விலங்கினம் அவ்வாறு வீடு கட்டுகிறது. குச்சிகள், இலைகள், வைக்கோல்கள், பசுந்தழைகள் ஆகியவற்றை கொண்டு வந்து பஞ்சு பொதி போன்ற வீட்டையும், குட்டிகளுக்கு மெத்தென்ற படுக்கையையும் அந்த விலங்கு தயார் செய்கிறது. அது சினையாக இருக்கும் 3 மாத, 3 வார, 3 நாள் கால கட்டத்தில் அது இவ்வாறான கூடு கட்டும் பணிகளில் ஈடுபடுகிறது. நாம் அந்த விலங்கை தினமும் பார்த்து வந்தாலும் நம் அனைவருக்கும் தெரியாத ரகசியமாக இந்த நடவடிக்கை இருப்பதை அறிந்தால் அது ஆச்சரியம் தானே. அந்த விலங்கு வேறு எதுவும் இல்லை. நாம் அன்றாடம் பார்க்கும் சேற்றில் திளைக்கும் பன்றிதான் அது.

உறவுக்கு 'நோ'

சிம்பன்சி வகையைச் சேர்ந்த குரங்குகள், தனக்கு குழந்தை வேண்டும் என்றால், தனது ரத்த சம்பந்தம் இல்லாத சிம்பன்சிகளுடன் உறவு வைத்துக் கொள்ளுமாம். இதற்கு காரணம், தனது ரத்த உறவுகளை தவிர்த்து பிற ரத்த வகையை சேர்ந்த சிம்பன்சிகளுடன் கூடும் போது பிறக்கும் குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பதால்தான்.

உணவை செரிக்க 4 வாரம் எடுத்துக் கொள்ளும் விலங்கு எது தெரியுமா?

உலகிலேயே சோம்பேறியான விலங்கு என்று அழைக்கப்படுவது ஸ்லாத் எனப்படும் ஒரு வகை சிறிய கரடி இனமாகும். அசையாக்கரடி (sloth) தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி என்றும், பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் அனைத்துண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது. இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் இதனை "அசையா"க் கரடி என்கிறோம். இந்த கரடிதான் தான் சாப்பிட்ட உணவை செரிப்பதற்கும் சோம்பேறித்தனமாக இருக்கும். இது உண்ட உணவு உடலில் செரிமானம் ஆக 2 முதல் 4 வார காலம் வரை ஆகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago