முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய யுக்தி

சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவுகள் ஏற்படும் போது, ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சைக்கு முன் குழந்தைகளை இயல்பான மனநிலையில் இருக்கச் செய்ய அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ மருத்துவமனை சிறாரே ரிமோட் கண்ட்ரோல் காரில் செல்லும் வகையிலான புதிய வசதியை உருவாக்கி உள்ளனர். இதனால் சிறார் மற்றும் பெற்றோருடைய பதற்றம் தணிகிறதாம்.

அச்சம் தவிர்

இந்தியாவில் பிறந்து உலக நாடுகளை குறிப்பாக ஆங்கிலம் பேசும் மக்களை தனது பேச்சால் ஈர்த்தவர் விவேகானந்தர்.  ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வல்லமையை பெற்றவராக இருந்த போதும் அவர் தனது பள்ளி, கல்லூரி தேர்வுகளில் ஆங்கிப்பாடத்தில் சராசரியாக 45 , 50 என்ற மதிப்பெண்களை தான் எடுத்தார்.

உற்ற நண்பன்

மிரோ எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோ முதியோர், நோயாளிகளுக்கு உதவும் விதமாக லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. நாய், பசு, ஆடு போன்ற உருவத்தில் உள்ள இந்த ரோபோ முதியவர்கள், நோயாளிகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பேச்சுத் துணையாக செயல்படுகிறது.

சுற்றுசூழலின் நண்பன்

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரயிலின் சோதனை ஓட்டம் ஜெர்மனியில் நடந்தது. இந்த ரயிலுக்கு கோராடியா ஐலிண்ட் ரயில் என்று பெயரிட்டுள்ளனர். கார் எஞ்சினை விட சத்தம் குறைவான இந்த ரயிலின் எஞ்சின், நீராவியை மட்டுமே வெளியேற்றும். அதேபோல, ரயிலில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் மின்கலங்களில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், இழுவை சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் ஏன்

நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆப்பிள் பழங்கள் வாங்கும் போது அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அது எதற்காக என யாருக்கும் தெரியாது. அது என்ன? இதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் ஒளிந்துள்ளன.PLU code (price lookup number)  எனப்படும் இதை வைத்து தான் அந்த ஆப்பிள் ரசாயன உரங்களில் விளைவிக்கப்பட்டதா, மரபணு மாற்றம் செய்யப்பட்டதா, இயற்கை உரத்தில் விளைந்ததா என்பதை அறிய இயலும். இதை எப்படி தெரிந்து கொள்வது.. அதில் 4 இலக்க எண் இருந்தால் ரசாயன உரத்தால் ஆனது, ஐந்து இலக்க எண் 8 இல் தொடங்கினால் அது மரபணு மாற்றப்பட்டது. ஐந்திலக்க எண் 9 இல் தொடங்கினால் முழுக்க இயற்கையானது. இனி ஆப்பிளை பார்த்து வாங்குவீர்கள் தானே...

கோவிட் மரணத்தை காட்டிலும் சுற்றுசூழல் மாசால் இறந்தவர்கள் அதிகம்

கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் 59 லட்சம் பேர் கடந்தாண்டில் இறந்தனர். ஆனால் அதை காட்டிலும் அதிகமானோர் சுற்றுச்சூழல் மாசால் உயிரிழப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 லட்சம் சிசுக்கள் குறைபிரசவத்தில் இறந்து போவதாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமெடுத்து வருவதாக ஐநா அலறுகிறது. நீரில் பாதிப்பு, காற்று பாதிப்பு, ரசாயன உரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அது தொடர்பான ரசாயனங்கள் என சுற்றுச்சூழலுக்கான அச்சுறுத்தல் நீண்ட சங்கிலி தொடர் போல நீண்டு செல்வதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இது குறித்து உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க தவறினால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago