முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இந்தியா தயாரித்த முதல் ராக்கெட்

அப்போது 1960களின் தொடக்கம். விக்ரம் சாராபாய் இந்தியாவுக்கான ராக்கெட் ஏவுதளத்துக்கான இடத்தை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டுபிடித்ததுதான் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா என்ற இடம். தற்போது அது விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அங்கே இருந்த சர்ச் ஒன்றில்தான் அதன் அலுவலகம் செயல்பட்டது. அவ்வளவு ஏன் நாசா மற்றும் நைக் அப்பாச்சியின் உதிரிபாகங்கள் அங்குதான் ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டன. இந்த பாகங்கள் மாட்டு வண்டியில் எடுத்து வரப்பட்டன என்றால், முதன் முதலாக தயார் செய்யப்பட்ட  ராக்கெட் சைக்கிளில்தான் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..இன்றைக்கு உலக நாடுகளுக்கு இணையாக சந்திராயன் விண்ணில் பாயும் வேளையில் இந்தியாவின் முதல் காலடி இவ்வாறுதான் இருந்தது என்றால் ஆச்சரியம் தானே..

இணையம் வருவதற்கு முன்பே இமெயில்

இன்றைக்கு இமெயிலில் மிக வேகமாக செய்திகளை பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் அதற்கு முன்பு ஒருமுறையாவது யோசித்து பார்த்திருக்கிறோமா... முன்பெல்லாம் ஒரு வரியை அனுப்புவது என்பதே அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. உண்மையில் 80களின் இறுதியில் டேட்டாபேஸ் என்ற தொழில் நுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் ஒரு இமெயிலை எவ்வாறு அனுப்புவது என்பதை செய்து காட்டினர். அதில் ஒரு கம்பியூட்டரையும், தொலைபேசியையும் இணைத்தனர். இது மைக்ரோநெட் என அழைக்கப்பட்டது. இது www  என அழைக்கப்படும் இணையத்துக்கு முந்தைய காலம். அப்போது URL முகவரியெல்லாம் கிடையாது. வெப் பக்கங்களுக்கு வெறும் எண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இமெயில்களுக்கான வெப் எண் 7776. என்ன கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.

கோகோ கோலா கிடைக்காத நாடு

உலகம் முழுவதும் பயணம் செய்தாலும் அங்குள்ள எந்த பெட்டிக்கடையிலும் குடிநீர் பாட்டில் கிடைக்குமோ கிடைக்காதோ.. ஆனால் நிச்சயம் கோகோ கோலா கிடைக்கும். அந்த அளவுக்கு தனது வணிகத்தை பரந்து கடை விரித்துள்ளது. ஆனால் கோகோ கோலா கிடைக்காத நாடுகளும் உலகில் உள்ளன என்றால் நம்புவீர்களா.. இரும்புத்திரை நாடு என அழைக்கப்படும் வட கொரியா, அமெரிக்க சிங்கத்தை சீண்டி பார்த்த கியூபா ஆகிய 2 நாடுகளில்தான் கோகோ கோலா கிடைக்காது. அந்த கம்பெனி காரர்கள் தலைகீழாக நின்று தண்ணி குடித்து பார்த்தும் கூட இந்த 2 நாடுகளும் தங்களது நாடுகளில் அதை விற்க அனுமதி மறுத்து விட்டன. இருந்த போதிலும் தங்களது பக்கத்து நாடுகளான மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து சில வியாபாரிகள் இறக்குமதி செய்து விற்பதாக யூகங்கள் உள்ளன.

பேட்டா பைட் என்றால் என்னவென்று தெரியுமா

கணினி யுகம் வளர வளர அதன் பயன்பாடுகளும் கற்பனைக்கெட்டாத அளவுக்கு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் வெறும் 3 அல்லது 3 எம்பி கொண்ட பிளாப்பி டிஸ்க் சேமிப்பகமே மிகப் பெரியதாக கருதப்பட்டது. காலப் போக்கில் 1 ஜிபி வந்து தற்போது டெர்ரா பைட் அளவுக்கு சேமிப்பகங்களும், ஹார்ட் டிரைவ்களும் வந்து சந்தையை கலக்கி வருகின்றன. 1 ஜிபி என்பது 1024 எம்பி. அதேபோல 1 டெர்ரா பைட் என்பது 1024 ஜிபி. அதேபோல தற்போது புதிதாக வந்துள்ள பேட்டா பைட் என்பது 1 பிபி அதாவது ஒரு பேட்டா பைட் என்பது 1024 ஜிபிக்கு இணையானது. இதன் அளவை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் 13.3 ஆண்டுகள் ஓடக் கூடிய உயர்தர ஹெச்டி வீடியோக்களை இதில் சேமிக்கலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ள வேறு ஒரு வழியும் உள்ளது. அதாவது வரலாறு தோன்றிய காலம் முதல் இன்று வரையிலும் மனிதனால் அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட அனைத்து நூல்களையும் 50 பிபி டிரைவில் அடக்கி விடலாம் என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதாவது மனித வரலாறு என்பது 50 பிபி. அம்மாடியோவ்.

இணைய அடிமை

இந்தியாவில் சுமார் 90% இளைஞர்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்களாம். இதன்மூலம் சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்கள், வழக்கத்தை விட ஒன்றரை மணி நேரம் தாமதமாகவே தூங்க செல்கின்றனர். இதன்மூலம் தூக்க குறைபாடு, மன அழுத்தம், சோர்வு போன்ற நோய்களுக்கு ஆளாவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரே சமயத்தில் 9 பெண்களை திருமணம் செய்த மன்மத ராசா

பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ. மொடலாக உள்ளார். கடந்த ஆண்டு ஒன்பது பெண்களை கூட்டாக திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.இவருக்கு லுவானா கசாகி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. என்றாலும், ஒரு தார மணத்தை எதிர்த்து புரட்சி செய்யவுள்ளதாக அறிவித்து, கடந்த ஆண்டு மேலும் 8 பெண்களை மணந்தார். அந்த மண நிகழ்வில் மனவி லுவானா கசாகியும் இருந்தார். பிரேசிலில் பலதார மணம் சட்டவிரோதமானது. எனவே மற்றைய 8 மனைவிகளுடன் சட்டபூர்வமாக திருமணம் நடக்கவில்லை. திருமணமாகி சில மாதங்களிலேயே மனைவிகளில் ஒருவரான அகதா என்பவர் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். பல மனைவிகளில் ஒருவராக வாழ விரும்பவில்லையென இப்பொழுது காரணம் கூறியுள்ளார். தற்போதைக்கு புதிதாக யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லையென ஆர்தர் கூறினாலும், விரைவில் இன்னும் 2 பெண்களை திருமணம் செய்து, மனைவிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த விரும்புகிறார். அவர் மேலும் கூறியதாவது: என் ஒவ்வொரு மனைவியுடனும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago