முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பூமிக்கடியில் நகரம்

இங்கிலாந்தின் பர்லிங்டன் நகரம், 35 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. 1950 களின் இறுதியில் பூமிக்கடியில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் பனிப்போர் நிலவி வந்த காலத்தில், அணுகுண்டு தாக்குதலில் இருந்து அரசு உயரதிகாரிகள், ஊழியர்களைக் காப்பதற்காகவே இந்த நகரம் உருவாக்கப்பட்டது.

செயற்கையால் ஆபத்து

ஆப்பிள்கள் சீக்கிரம் கெடாமல் இருக்கு இயற்கையாகவே மெழுகுப் பூச்சு இருக்கும். ஆனால், தற்போது செயற்கையாக பூசப்படும் மெழுகில் சேர்க்கப்படும் நைட்ரேட், ‘நைட்ரைஸோ மார்போலின்’ என்ற ரசாயனத்தை உருவாக்குகிறது. இது கேன்சர் நோய்க்கான முக்கிய காரணியாக இருக்கிறது. எனவே கவனமாக இருக்க வேண்டும்.

மறதி நோய் நல்லது

தற்போது அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருந்து மூலம் பல் சம்பத்தப்பட்ட பிரச்னைகளை குணமாக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து மூலம் பற்களை புதிதாக முளைக்க செய்ய இயலும் என்றும் பற்களுக்கு இடையே உள்ள துவாரங்களை சரி செய்ய முடியும் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பற்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இந்த மருந்து மூலம் சிகிச்சை அளித்தால் ஆறு மாதங்களில் பற்சிதைவு சரியாகி பற்கள் முன்பு இருந்தது போல் மாறிவிடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே அதிகமான ரசிகர்கள் திரண்ட இசை கச்சேரி எது தெரியுமா?

அது 1993 இல் நடைபெற்றது. பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் புகழ் பெற்ற கோபகபானா என்ற பீச்சில் அந்த கச்சேரி நடைபெற்றது. கச்சேரியின் நாயகன் ராட் ஸ்டீவர்ட் என்ற ராக் மற்றும் பாப் இசை பாடகர். இவர் எந்த அளவுக்கு பிரபலம் என்றால் இவரது இசை ஆல்ப சீடிக்கள் மட்டும் உலகம் சுமார் 2.5 கோடிக்கும் மேலாக விற்று தீர்ந்துள்ளன. அன்றைக்கு அந்த பீச் இசை கச்சேரிக்கு திரண்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 45 லட்சம் பேர். பிறகென்ன.. கச்சேரி கின்னஸிலும் இடம் பிடித்தது. உலக மக்களின் மனதிலும் இடம் பிடித்தது.

எல்லாம் வல்ல சித்தர்

ஈசன் வழக்கம்போல் தன் திருவிளையாடல்களைக் காட்ட மாறுவேடம் பூண்டு எல்லாம் வல்ல சித்தராக மதுரைக்கு வந்தார். அப்போது மதுரையை ஆண்டவர் மன்னர் அபிஷேகப் பாண்டியன். இப்படி ஒரு சித்தரைப் பற்றி அறிந்ததும் அவரை சந்திக்க ஓடோடி சென்று, அவரின் பலத்தை சோதிக்கவேண்டும் என்று கூறி, சிலையாக இருந்த யானையை கரும்பு சாப்பிட வைத்து உங்கள் வல்லமையை நிரூபியுங்கள் என்றாராம். உடனே கல் யானை கரும்பை திண்றது. உடனே சித்தரின் மகிமையை புரிந்த மன்னர் மன்னிப்பு கேட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகில்தான் இந்த ‘எல்லாம் வல்ல சித்தர்' சன்னிதி உள்ளது.

டைட்டானக்கில் நாயகி ஓவியத்தை வரைந்தது யார் தெரியுமா

டைட்டானிக் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம். இதில் மைய பாத்திரங்களாக லியோனார்டோவும், கதே வின்ஸ்லெட்டும் நடித்திருப்பர். ஒரு சந்தர்ப்பத்தில் நாயகியை நாயகன் ஓவியமாக தீட்டுவது போன்ற காட்சி இருக்கும். அப்போது அந்த ஓவியத்தை வரைவது போன்ற கரங்கள் மட்டுமே காட்டப்படும். அந்த ஓவியத்தை வரைந்தவர் வேறு யாருமல்ல... படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனேதான். அவர் ஒரு மிகச் சிறந்த ஓவியர் என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago