முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் ஆண்டின் சில நாட்கள் மட்டும் உப்பு நீர் உருவாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. என்ன மக்களே.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா.. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், செவ்வாயின் மேற்பரப்பில் நடுவில் அமர்ந்திருக்கும் ஒரு பாறை குளிர்காலத்தில் நிழலை உருவாக்குகிறது. குளிர்காலத்தில் அந்த நிழல் பகுதியில் பனி குவிகிறது. அதில் சூரிய ஒளி படும்போது ​​பனி திடீரென்று வெப்பமடைகிறது. அதன் விரிவான ஆய்வுகளில், கிரகத்தில் காலையில் மைனஸ் 128 டிகிரி செல்சியஸ் இருந்த வெப்பநிலை மதியத்துக்குள் மைனஸ் 10 டிகிரி செல்சியஸாக மாறுகிறது. இது ஒரு நாளில் சில மணி நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய மாறுதலாகும். ஆனால், குறுகிய காலத்தில், உறைபனி அனைத்தும் கரைந்து வளிமண்டலத்திற்கு செல்வதில்லை. இதனால், அப்பகுதியில் இருக்கும் நீரானது உப்பு கரைசலாக இருக்கலாம். ஏனென்றால் உப்பு நிறைந்த தரையில், பனி மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருகிவிடும். பனி அனைத்தும் திரவமாக அல்லது நீராவியாக மாறும் வரை உப்புநீர் இருக்கிறது. இந்த நிகழ்வு நடந்து முடிந்து, அடுத்த செவ்வாய் ஆண்டில் (687 நாட்கள்), இதே செயல்முறை மீண்டும் நிகழ்கிறது என்கிறது அந்த அறிக்கை. ஆச்சரியமாக உள்ளதல்லவா...

20 பில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் லெஸ்போஸ் தீவில் கண்டுபிடிப்பு

கிரீஸ் நாட்டில் உள்ள லெஸ்போஸ் தீவில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிசய மரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட மரம் ஒன்று மட்கி போகாத நிலையில் அப்படியே அதன் ஈரத்தன்மையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான மரம் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை. 20 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மரத்தின் கிளைகளும் வேர்களும் அப்படியே இருந்ததாக அறிஞர்கள் வியப்படைந்துள்ளனர். மேலும், இந்த மரத்தை ஆராய்ச்சி செய்ததில் கிளைகளும் வேர்களும் நல்ல நிலையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.மேலும் ஆய்வில் 20 மில்லியன் ஆண்டுக்கு முன்பு நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மரம் நிலத்தடியில் புதைந்திருக்கலாம் என்றும், அப்போது எரிமலை சாம்பல் அந்த மரத்தின் மேல் பரவி இருக்கலாம், அதனால் இந்த மரம் நல்ல நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்ட அந்த மரத்தின் வயதை ஆய்வு மூலம் கண்டறியலாம்  இது மிகுந்த ஆச்சரியம் தானே..

43 நாடுகளில் மன்னராட்சி

ஜனநாயகம், சோஷலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன யுகத்தில் உலகில் சில நாடுகள் இன்னும் மன்னராட்சியின் கீழ் தான் உள்ளன. அவ்வாறு உலகில் மொத்தம் 43 நாடுகள் இன்றைக்கும் மன்னராட்சியின் கீழ் உள்ளன. அவற்றில் ஜப்பான், ஸ்பெயின், சுவிஸ், பூடான், தாய்லாந்து, மொனாகோ, சுவீடன், நெதர்லாந்து உள்ளிட்ட 43 நாடுகளை உலகில் உள்ள 28 அரச குடும்பங்கள்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்றால் ஆச்சரியம் தானே..

உருகாத ஐஸ்கிரீம்

ஐஸ்க்ரீம் உருகுவதைத் தடுக்க ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கனஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஐஸ்க்ரீம் உருகி அதன் வடிவம் மாறாமல் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் 3 மணி நேரத்துக்கு அந்த ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ட்ராபெரி பழத்திலிருந்து எடுக்கப்படும் பாலிஃபினல் என்ற திரவத்தை ஐஸ்க்ரீமில் செலுத்தி சோதனையில் வெற்றி அடைந்துள்ளனர். இந்த திரவத்தை செலுத்தியபின் ஐஸ்கீரிமை அனல் காற்றில் காண்பித்தாலும் சுமார் 5 நிமிடம் வரை ஐஸ்க்ரீமின் வடிவம் மாறவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எலிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு

இந்தியாவில் 90 வகை எலிகளும் தமிழகத்தில் 15 வகை எலிகளும் உள்ளன. எனினும் வரப்பெலி எனப்படும் கறம்பை எலி, வெள்ளெலி, புல் எலி மற்றும் சுண்டெலி ஆகியவை பயிர்களை அழிக்கும் முக்கிய இனங்கள். ஆண்டுக்கு 70 முதல் 80 லட்சம் டன் உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதன் மூலம் ரூ.800 கோடி அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.  ஒரு மனிதனுக்குத் தேவையான ஒரு நாள் உணவு தானியத்தை மூன்று ஜோடி எலிகள் ஒரு நாளில் தின்று அழிக்கும் திறனுடையவை. வயல் எலிகள் ஒவ்வொன்றும் தங்கள் வளைகளில் உள்ள உணவு அறைகளில் 3 முதல் 5 கிலோ நெல்மணிகள், ஒரு கிலோ உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை சேமித்து வைப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஒரு ஜோடி எலிகள் ஆண்டுக்கு 2 முதல் 5 தடவையாக ஒவ்வொரு முறையும் 6 – 8 குட்டிகள் ஈனுகின்றன. பிறந்த 45 நாளில் இவையும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். இவற்றின் சராசரி வயது 2 ஆண்டுகள். இதனால் ஒரு ஜோடி எலிகள் ஒரே ஆண்டில் 500 எலிகளாக பெருகுகின்றன. செப்டம்பர், அக்டோபர், ஜனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. நுட்பமான அறிவும், தந்திரமும், புத்திசாலித்தனமும் நிறைந்த இவற்றுக்கு வாசனை, ருசி, கேட்டல் மற்றும் தொடுதல் திறன் அதிகம். வயல் எலிகள் நீரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக நீந்தும். 20 முதல் 25 மீட்டர் நீளமும், ஒன்றிற்கு மேற்பட்ட புறவழிகளும் கொண்ட வளைகளைத் தோண்டுகின்றன. உணவின்றி 7 நாட்களும், நீரின்றி 2 நாட்களும் சமாளிக்கும்.

உதவும் தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தீவிரவாதிகளின் தகவல் தொடர்புக்கு உதவுவதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்க்ரிப்டட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுவதால், தகவல்களை அனுப்புவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் ஹேக் செய்ய முடியாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago