Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

துரித உணவுகள்

துரித உணவுகளை இரவில் அதிகமாகச் சாப்பிடுவதாலும், நேரம் கழித்து சாப்பிடுவதாலும், காலையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். துரித உணவுகளில் இருக்கும் மைதா, சீஸ், சமையல் சோடா போன்றவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, உடலுக்கு அதிக கலோரியைக் கொடுத்து, பசியை அடக்கி, நீண்ட நேரத்துக்குப் பசிஉணர்வே ஏற்படாமல் செய்யும்.

செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து கேட்பது ஏலியனின் குரலா?

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் இன்சைடர் விண்கலம் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தகவலை அனுப்பியது. அதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து தொடர்ந்து ஒரு வித மர்மமான ஒலி தொடர்ந்து இருந்து வருவதை அது பதிவு செய்து அனுப்பியுள்ளது. இது அங்கு வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்களின் எழுப்பும் ஒலியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்த போதிலும் இதை விஞ்ஞானிகள் இதுவரை அதை உறுதி செய்யவில்லை என்ற போதிலும் செவ்வாயிலிருந்து எழும் ஒலியின் மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதுதான் ஆச்சரியமானது.

ஸ்டார் ஹோட்டல்களில் விளையாடப்படும் பவுலிங்

சில பொம்மை போன்ற பின் என்ற ஏழெட்டு வடிவங்களை சற்று தொலைவிலிருந்து ஒரு பந்து மூலம் வீசி பள்ளத்துக்குள் தள்ளச் செய்யும் விளையாட்டை பவுலிங் என்கின்றனர். பெரும்பாலும் திரைப்படங்களில் ஸ்டார் ஹோட்டல்களில் நாயகிகள் விளையாடுவது போன்ற காட்சிகளை நாம் பார்த்து ரசித்திருப்போம். இந்த பவுலிங் விளையாட்டு எங்கு தோன்றியது தெரியுமா.. கிமுவிலேயே எகிப்தில் இந்த விளையாட்டு விளையாடியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆசியா மைனரில் லிடியா மக்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஹெரோடோட்டஸ் குறிப்பிடுகிறார். கிபி 300 இல் ஜெர்மனியில் விளையாடியிருக்கிறார்கள். தனது படைவீரர்கள் இதை விளையாட கூடாது என இங்கிலாந்து மன்னர் 3 ஆம் எட்வர்டு தடை விதித்துள்ளான். அதன் பின்னர் உலகம் முழுவதும் இது பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

தானியங்கி பைக்

மின்சாரத்தில் இயங்கக்கூடிய சைக்ளோட்ரான் என்ற தானியங்கி பைக்கில், ஒரே சமயத்தில் இரண்டு பயணிகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்ளோட்ரான் தானியங்கி பைக்கில் இரு பயணிகளும் நேருக்கு நேர் அமர்ந்து கொண்டு செல்லலாம். எல்லா காலங்களிலும், அதாவது, குளிர்காலம், வெயில்காலம், மழைகாலத்திலும் இந்த வாகனத்தை இயக்கலாம்.

முகம் ஜொலிக்க

ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சை, முகம், கழுத்துப் பகுதியைத் துடைத்து எடுத்து, பின், பாதி தக்காளியை எடுத்து சர்க்கரையைத் தொட்டு, முகம் மற்றும் கழுத்தை 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சரும பொலிவு தக்க வைக்கப்படும்.

'சோடா' எச்சரிக்கை

சோடாவை தினமும் குடிப்பதால் 50% இதய நோய்கள் உருவாகும். தொடர்ந்து ஒருவருடம் குடித்தால் உடல் பருமன் இரட்டிப்பாகும் . சோடாவிலுள்ள மூலப்பொருட்களால் நரம்பு மண்டலம் விரைவில் பலமிழந்து போய்விடும். இதனால் நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக முதுமையில் அல்சீமர் நோய் வரும் ஜாக்கிரதை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago