முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டிஜிட்டல் ஆடைகள்

எதிர்காலத்தை கலக்க புதிய டிஜிட்டல் ஆடைகள் தயாராகி வருகின்றன. இன்றைய புதிய நூற்றாண்டின் யூத்களின் மனநிலைக்கு ஏற்ப எதிர்காலத்தில் மிகப் பெரிய பேஷன் சந்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் ஆடைகள் என்றால்... வாருங்கள் பார்க்கலாம்..டிஜிட்டல் ஆடைகள் துணி அல்லது உறுதியான எதையும் கொண்டு செய்யப்படவில்லை. கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள் மற்றும் 3டி மென்பொருளைப் பயன்படுத்தி ஜவுளிகளை விட பிக்சல்களில் இருந்து ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே நிஜ வாழ்க்கையில் நீங்கள் டிஜிட்டல் ஆடைகளை அணிய மாட்டீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் டிஜிட்டல் ஆடைகளை ஆன்லைனில் உலாவலாம் மற்றும் நீங்கள் விரும்பும் ஒன்றை ஆர்டர் செய்யலாம்.நீங்கள் இதை வாங்க முடிவு செய்து விட்டால், அதை நேரில் பார்ப்பதற்கு பதிலாக டிஜிட்டல் வடிவில்தான் பார்க்க முடியும். இதை நீங்கள் நேரடியாக தொடவோ அணியவோ முடியாது.  உங்கள் புகைப்படத்தில் தான் அணிய முடியும். இதற்காக பிரத்யேக டிஜிட்டல் ஆடை வடிவமைப்பாளர்கள் உள்ளனர். அவர்களிடம் ஆர்டர் செய்து டிஜிட்டல் முறையில் அவற்றை அணிந்து கொள்ளலாம்.இதில் குறிப்பாக தற்போது ஃபேஷனாக பரவி வருவது என்னவென்றால் வழக்கமான மேல் சட்டை கால் சட்டை என்பதாகஅல்லாமல் பாரம்பரிய உடைகள், வித்தியாசமான உடைகள் என விதவிதமாக கலக்கலாம். இவற்றிற்கும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் தங்களை புதிய அவதார்களாக காட்டிக் கொள்ள விரும்பும் யூத்களுக்கும், நவீன டிஜிட்டல் பேஷன் விரும்பிகளுக்கும் இது மிகப் பெரிய சந்தையாக விரிவடைந்து வருகிறது. தொட்டுணரும் தன்மையிலிருந்து விலகி ஒரு புதிய உலகுக்கான கதவை இது திறந்து விட்டுள்ளது. தற்போது இதை அணியும் இளைஞர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதை அடிப்படையாக வைத்து தற்போது பேஸ்புக்கும் மெட்டாவெர்சன் என்ற புதிய அவதாரத்தை தொடங்கியுள்ளதாகவும் பேஷன் நிபுணர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் புதிய பேஷன் சந்தைக்கான புதிய கதவு திறந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆச்சர்ய தொழில்நுட்பம்

கருவில் சிசு வளரும் போதே அதை, நேரில் காண வழிவகுத்துள்ளது புதியதோர் தொழில்நுட்பம். இதன் மூலம், ஒரு தாய் தன் குழந்தையை கண்டும் உள்ளார். விர்சுவல் ரியாலிட்டிதான் அந்த தொழில்நுட்பம். இதன் மூலமாக இல்லாத ஒன்றையும் காண்பிக்க முடியும். 4D அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து, பிறக்காத குழந்தயை வி.ஆர். தொழில் நுட்பத்தின் மூலம் இதை செயல்படுத்தியும் காட்டியுள்ளனர். 3D அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் படமாக மட்டுமே கருவில் வளரும் சிசுவை பார்த்த நாம், இந்த புதிய தொழில்நுட்பத்தில் காணொளியாகவே குழந்தையை காண முடியுமாம். எதிர்காலத்தில் கருத்தரித்த நாள் முதலே கூட தன் சிசுவுடன் பெற்றோர் வி.ஆர் முறையில் வாழலாம்.

உணவு தேவையை பூர்த்தி செய்ய செயற்கை இறைச்சி - புதிய முயற்சி

ஐஸ்லாந்து நாட்டில் உணவு தேவையை பூர்த்தி செய்ய புதிய முயற்சியாக ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. விலங்குகள், அதற்கான தீவனங்கள், அதை உற்பத்தி செய்வதற்கான தாவரங்கள் என்ற நீண்ட சங்கிலி படிப்படியாக நெருக்கடிக்கு உள்ளாகி வரும் வேளையில் செயற்கை இறைச்சி இவற்றை வெகுவாக குறைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஓ.ஆர்.எஃப் ஜெனிட்டிக்ஸ் நிறுவனத்தின் புரதத் தொழில்நுட்பத்துறை தலைவர் அர்னா ருனாஸ்டாட்டிர் கூறுகையில், மாடுகளின் ஸ்டெம் செல்களை வைத்து ஆய்வுக்கூடங்களிலேயே பீஃப் பர்கர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், வறுத்த இறைச்சியைத் தயாரிக்கும் நிறுவனங்களும் விரைவில் உருவாக உள்ளன.  எனவே இவை விரைவில் சந்தைக்கு வரும் என்கிறார்.ஏற்கனவே செயற்கை சிக்கனுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல விண்வெளி செல்லும் வீரர்களுக்கு நாசா வான்கோழியின் செல்களை பயன்படுத்தி  கோழி இறைச்சியை தயார் செய்து வருவதும் கவனத்தில் கொள்ளக் கூடியதாகும்.

30 ஆண்டுகளாக...

அமெரிக்காவை சேர்ந்த கார்ல் பாடன் (64) என்பவர் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் செல்போன்கள் வருவதற்கு முன்பே ‘செல்பி’ எடுக்க தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாக ‘செல்பி’ எடுத்து வருகிறார். முதலில் சாதாரண 35 எம்.எம். கேமராவில் டிரைபோட் மற்றும் சாதாரண வெளிச்சத்தில் செல்பி எடுத்தார்.

பல்வேறு முத்திரைகள்

யோகாசனம் ஒரு அற்புதமான கலை. கை விரல்களால் செய்வதுதான் முத்திரைகள். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். இந்த முத்திரைகளை உட்கார்ந்திருக்கும் போதோ, நிற்கும்போதோ, நடக்கும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது அதிக நன்மை அளிக்கும். சின் முத்திரை அல்லது ஞான முத்திரை செய்வதால் மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும். வாயு முத்திரை செய்வதால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும். சூன்ய முத்திரை செய்வதால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

பெண்கள் பொது இடத்தில் தொப்பி அணிந்தால் அபராதம்

ஆடை உலகில் இன்றைக்கு ஆண்கள் பெண்களை கடந்து அத்துறை எங்கோ சென்று விட்டது. ஆனால் கடந்த காலங்களில் பெண்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க பல தடங்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்தில் 1500 களில் அரசி முதலாம் எலிசபெத் ஆட்சி நடைபெற்று வந்தது. முதலாம் எலிசபெத் தொப்பி அணிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால் அவர் விதவிதமாக தொப்பிகளை அணிவதுடன், அவற்றை சேகரிக்கவும் செய்தார். இதன் காரணமாக அவரது ஆட்சியின் போது வார இறுதி நாட்களில் பொது இடங்களில் பெண்கள் தொப்பி அணிய தடை விதிக்கப்பட்டது. தவறி அவ்வாறு யாராவது தொப்பி அணிந்து பொது இடங்களுக்கு வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago