முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் முதல் ஸ்பேஸ் ஹோட்டல்

ஓரியன் ஸ்பேன் எனும்  அமெரிக்க நிறுவனம் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலகின் முதல் சொகுசு  விண்வெளி (ஸ்பேஸ்) ஹோட்டலை அறிமுகப்படுத்தியது. இந்த சொகுசு விடுதிக்கு அரோரா நிலையம் என பெயரிடப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஹோட்டல் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் எனவும், முதல் விருந்தினர் குழு 2022 ஆம் ஆண்டு அனுப்பப்படுவார்கள் எனவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சொகுசு ஆகாய விடுதியில் ஒரே நேரத்தில் ஆறு பேர் மட்டுமே தங்க முடியும். 12 நாட்கள் இந்த விடுதியில் தங்குவதற்கு ஒருவருக்கு 9.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 71.33 கோடி முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்ன ஸ்பேஸ் ஓட்டல் போகத் தயாரா.

எறும்பை விட மிகச்சிறிய பறக்கும் ரோபோ கண்டுபிடிப்பு

காற்று மாசை அறிவதற்காக உலகிலேயே மிகச் சிறிய பறக்கும் ரோபோவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் அளவு எறும்பை காட்டிலும் சிறியது என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காற்று மாசை கண்டறிவதற்காக இந்த குட்டி ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் நீண்ட முயற்சிக்குப் பிறகு தற்போது சிறிய அளவிலான பறக்கும் ரோபோவை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அளவில் எறும்பை விட சிறியதாக இருக்கும் அந்த ரோபோ காற்று மாசை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் கண்டுபிடித்த பறக்கும் கருவிகளிலேயே இதுதான் மிகச் சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

வரிக்குதிரையை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

உடலில் கருப்பு வெள்ளை கோடுகளை கொண்டுள்ளதால் இதை வரிக்குதிரை என்கிறார்கள். இவை சுமார் 30 ஆண்டுகள் உயிர் வாழும் பாலூட்டிகள். மனிதர்களுக்கு கை ரேகை போல இவற்றுக்கு வரிக்கோடுகள் ஒவ்வொரு குதிரைக்கும் மாறுபட்டே காணப்படும். இவை நின்றபடியே உறங்கக் கூடியவை. ஒரு வரிக்குதிரையின் கழுத்தின் மீது, மற்றொன்று தன்னுடைய கழுத்தை சாய்த்தபடி நின்று தூங்கும். சுமார் 2 மீ உயரம், 3 மீட்டர் நீளம், 250 முதல் 500 கிலோ எடையுடையதாக இவை காணப்படும். மணிக்கு 55 கிமீ வேகத்தில் ஓடும். நாள் ஒன்றுக்கு சுமார் 80 கிமீ வரை நடக்கும். இவை கூட்டமாகத்தான் வாழும். இவற்றை தனியே பார்க்க இயலாது. இதன் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்றால் வரிக்குதிரையை பழக்க முடியாது என்பதுதான். அதற்கான பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக விலங்கியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இது மிகவும் ஆச்சரியமானது தானே...

மிகவும் உயரமான மலைப்பிரதேசங்களில் வளரும் அரிய வகை மலர் கண்டுபிடிப்பு

மிகவும் உயரமான இடங்களில் வளரும் அரிய வகை மலரை கண்டறிந்துள்ளனர். சீனாவின் யுன்னான் பிரதேசத்தில் உள்ள துணை ஆல்பைன் மலைப்பகுதியில் சுமார் 3590 மீட்டர் உயரத்தில் இந்த செடி வளர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. Entosthodon elimbatus என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த செடி நான்கு முதல் எட்டி மிமீ உயரம் வரை வளரக் கூடியது. மேலும் பாறைகளின் பிளவுகளில் உள்ள மண்ணில்தான் இது வளருமாம். இந்த விசித்திரமான தாவரம் குறித்த ஆய்வு கட்டுரை அறிவியல் இதழ்களிலும் கடந்த 2020இல் வெளியிடப்பட்டன.

ஒன்றுக்கும் மேற்பட்ட நாசிகளை கொண்ட விலங்கு எது தெரியுமா?

பொதுவாக மனிதன் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு மூக்கு மட்டுமே காணப்படும். ஆனால் ஒரு விலங்குக்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றல்ல, நான்கு மூக்குகளை கொண்டுள்ளது. அவை ஸ்லக்குகள் என்ற ஒரு வகை நத்தைகள் ஆகும். இவற்றின் மூக்கு மனிதனின் நாசிகளைப் போல வாசனைகளை நுகரும் வேலையை மட்டும் செய்வதில்லை. மாறாக நிலத்தில் கலந்துள்ள ரசாயனம், சத்தங்கள், வெளிச்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான செயல்பாடுகளையும் அவை மூக்கினாலேயே மேற்கொள்கின்றன... என்றால் ஆச்சரியம் தானே.

பெண் குழந்தை பிறந்தால் பீஸ் வாங்காத அபூர்வ டாக்டர்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி தனது மனைவியை பிரசவத்துக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். சிசேரியன் மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தன்னிடம் கைவசம் இருக்கும் குடிசை வீட்டையும் விற்றுத்தான் மருத்துவமனை கட்டணத்தை கட்ட வேண்டியிருக்கும் என கவலையுடன் டாக்டரை அணுகியுள்ளார். ஆனால் டாக்டரோ எங்கள் மருத்துவமனையில் தேவதைகள் பிறந்தால் ஃபீஸ் வாங்குவதில்லை என கூறி அந்த தொழிலாளியிடம் அவரது பெண் குழந்தையை மகிழ்ச்சியுடன் கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் 1000க்கும் மேற்பட்ட பிரசவங்களை இலவசமாக செய்து கொடுத்துள்ளார்.  டாக்டர் கணேஷ் ராக் என்பவர்தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். மல்யுத்த வீரனாக மாற விரும்பிய அவரை அவரது அம்மா தான் மருத்துவராக ஆக்கி, பெண் குழந்தை பிறந்தால் ஃபீஸ் வாங்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டாராம். அப்போது முதல் பெண் குழந்தை பிரசவத்துக்கு அவர் கட்டணம் வசூலிப்பதில்லை. அவரை உள்ளூர் மக்கள் நாயகனாக போற்றுகின்றனர். உண்மை தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago