முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய ஆப்

இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிய  ‘மை ஷேக்’ என்ற மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் வருவதை இந்த ஆப் மூலம் எளிதாக முன்கூட்டியே அறியலாம். சீஸ்மோமீட்டர் எனும் கருவியினால் மொபைலில் உள்ள ஜிபிஸ் மூலம் இந்த அதிர்வுகள் உணரப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இது வரை இரண்டு லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

எடை குறைய

கொக்கோ பவுடரில் சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், இதய நோய்களை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளன. கொக்கோ பவுடர் சற்று கசப்பாக இருக்கும். கொக்கோ பவுடரைக் கொண்டு வீட்டிலேயே ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் தயாரித்துக் குடித்தால் விரைவில் எடையை குறைக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை

புரோபயாடிக் கலவை கொண்ட சர்க்கரையை ஜூஸில் சேர்த்து குடிப்பதால், இதில் இருக்கும் நல்ல சத்துக்களும் கூட உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். ஜூஸில் 30 கிராம்க்கு மேல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தளவு முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை எனில் உடல் எடை கூடும்.

செரபியம் காடுகள்

340 ஹெக்டேரில் பரவியுள்ள செரபியம் காடுகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ளது. நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, சுத்திகரித்து குழாய்கள் மூலம் இங்கு அனுப்பி மரங்களை வளர்த்துள்ளனர். இங்கு பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும், சூரிய ஒளியும், இங்கு மரங்களை வேகமாக வளர வைக்கின்றன.

பேரழிவை நோக்கி பூமி

பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் பூமி சுனாமி, சூறாவளி மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு உட்படுமாம். படிப்படியாக இதுபோன்ற அழிவுகளால் பூமி, 2100 ம் ஆண்டிற்குள் முற்றிலும் அழிவை சந்திக்கும் என மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதலில் கடல் இனங்கள் 95 சதவிகிதம் அழியும். இதைதொடர்ந்து, மற்ற இடங்களுக்கு பேரழிவு தொடருமாம். இதுவரை ஆர்டோவிசினியன், டெவோனியன், பெர்மியன் - ட்ராயாசிக், ஜூராஸிக், க்ரட்டாசியஸ் எனப்படும் 5 காலகட்டங்களில், உலகில் உள்ள உயிர்கள் 5 பேரழிவுகளைச் சந்தித்தது. இதற்கு இணையான ஒரு பேரழிவு வரும் 2100ம் ஆண்டுக்குள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அசத்தலாக 5 வண்ணங்களில் நெளிந்தோடும் அதிசய ஆறு

கொலம்பியாவின் லா மக்கரேனாவில் உள்ள கானோ கிறிஸ்டல்ஸ் நதியானது "ஐந்து நிறங்களின் நதி" மற்றும் "திரவ வானவில்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் தெளிவான நீரின் கீழே நீங்கள் காணக்கூடிய பல வண்ணங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஆற்றில் உள்ள நீர்வாழ் தாவரங்களின் இனப்பெருக்க செயல்பாட்டின் போது வண்ணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அவை Macarenia clavigera என்று அழைக்கப்படுகின்றன, இங்கு ஓடும் தூய, தெளிவான நீரால் பொது மக்கள் ஈர்க்கப்பட்டு இப்பகுதியை பார்ப்பதற்காக ஆண்டு தோறும் ஏராளமானோர் வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago