முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புற்றுநோய் ஆபத்து

உதட்டை பளிச்சென்று காட்டும் லிப்ஸ்டிக் தொடர்ந்து போடுவதால் புற்று நோய் வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உதட்டுக்கு பூசப்படும் லிப்ஸ்டிக்கில் கிட்டத்தட்ட 33 ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாகவும், இந்த ரசாயனங்கள் மிக எளிதாக நம் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளதால் புற்றுநோய் ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மக்கள் தலைவன்

பல கி.மீ. தூரம் கிளைச்சாலைகள் வழியாக நடந்து பிரதான சாலைக்கு வந்தால் மட்டும் பேருந்துகளை பிடிக்கமுடியும் என்றிருந்த குக்கிராமங்களுக்கு முதன்முதலாக டவுன் பஸ்களை ஓடவிட்டவர் முறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.

சந்திரனில் கிராமம்

ஐரோப்பிய விண்வெளி கழகத்தில் உள்ள 22 உறுப்பு நாடுகள் சந்திரனில் கிராமம் அமைத்து அங்கு சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக 2020-ம் ஆண்டு அங்கு ‘ரோபோ’ மூலம் கிராமத்தை உருவாக்க தீவிர முயற்சியில் இரங்கியுள்ளதாம். சேஞ்ச்-5 என்ற விண்கலத்தை அங்கு அனுப்பி மண், பாறை போன்றவற்றை எடுத்து வந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ் மொழி, Tamil language

இந்தியாவுக்கு வெளியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ். முதலில் அச்சில் ஏறிய இந்திய மொழி தமிழ். உலகில் அதிகம் பேரால் பேசப்படும் ஆங்கிலத்தில் 10 லட்சம் சொற்கள் உள்ளனவாம்.  தமிழில் 6 லட்சம் சொற்கள் உள்ளதாக நிகண்டுகள் கூறுகின்றன. தனது நிலத்துக்கு வெளியே கல்வெட்டுகள், தொல்படிமங்கள், சான்றாதரங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்.

செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்

இந்தியாவைப் பற்றி பேசினால், உலகிலேயே அதிக வாழைப்பழம் (Banana) உற்பத்தி செய்யும் நாடு. இங்கு சுமார் 4.5 லட்சம் ஹெக்டேரில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 180 லட்சம் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகில் காணப்படும் 300 வகையான வாழைப்பழங்களில் சுமார் 30-40 வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. செவ்வாழை பழம் உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்த எண்ணற்ற பல மருத்துவ குணங்களை கொண்டது.  செவ்வாழையில் பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, தொலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.  நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் 1 முறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர்  கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

பாம்பு கடித்தும் சாகாத மனிதன்

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் 1910 இல் பிறந்தவர் பில் ஹாஸ்ட். இவருக்கு சிறுவயது முதலே பாம்புகள் மீது ஆர்வம் ஏற்பட்டு வந்துள்ளது. 1947 முதல் 1984 வரை புளோரிடாவின்மியாமி செர்பென்டேரியத்தின் உரிமையாளராக இருந்தார். அங்கு வாடிக்கையாளர்களுக்கு பாம்புகளிடமிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் வேலையை செய்து வந்தார். பாம்புகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மித்ரிடாடிசம்(mithridatism) என்ற அணுகுமுறையைப் பயன்படுத்தவும் பில் முடிவு செய்தார். அது அவரை பாம்புக்கடியிலிருந்து பாதுகாத்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி அல்லது விஷ எதிர்ப்பை வளர்ப்பதற்காக அதிக அளவில் நச்சுத்தன்மையை உட்கொள்வதற்கான ஒரு நுட்பமாகும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக 32 வகையான பாம்புகளின் விஷத்தின் கலவையை தினமும் ஊசி மூலம் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டதே அவரது பாம்பு விஷத்தை எதிர்க்கும் வெற்றியின் ரகசியம் என சொல்லப்படுகிறது.யானையைக் கொல்லும் அளவுக்கு விஷத்தை கக்கும் திறன் கொண்ட ஒரு பாம்பின் கடியில் இருந்து கூட அவர் உயிர் பிழைத்தார். ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த அபாயகரமான அனுபவங்கள் தவிர்க்க முடியாத மரணத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் வாழ்வில் 173 முறை கொடிய விஷமுள்ள பாம்பு கடியிலிருந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago