ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த Scarlett Ashley Cheng என்ற 6 வயது சிறுமி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்றால் நம்புவதற்கு சிறிது கடினம் தான். ஆனால் அதுதான் உண்மை. அவரும், அவரது சகோதரியான 8 வயது Kaylyn என்ற சிறுமியும் இணைந்து 3 388 உதட்டு தைலங்களை சேகரித்து வைத்துள்ளனர். தற்போது இது கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது. லிப்ஸ்டிக்கை போலவே லிப் பாம் என அழைக்கப்படும் உதட்டு தைலம் நவீன பேஷனில் ஒரு அங்கமாக உள்ளது. உதடுகளில் விதவிதமாக பூசிக் கொள்ளும் 100 கணக்கான பிராண்டுகள் சந்தைகளில் குவிந்து கிடக்கின்றன. தங்களது பாட்டியிடமிருந்து இது குறித்து தெரிந்து கொண்ட குழந்தைகள் படிப்படியாக இதை சேகரிக்க தொடங்கி இன்று உலக சாதனையாக மாறியுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மருதாணி, அருகம்புல், பூவரசு ஆகியவற்றை கொண்டு தோலில் ஏற்படும் பிரச்னைகளை சர் செய்யலாம். மருதாணியின் துளிர் இலைகள் ஒருகைப்பிடி அளவுக்கு எடுத்து, 2 பல் பூண்டு, 6 மிளகு ஆகியவற்றை லேசாக தட்டிபோட்டு, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி 50 மில்லி அளவுக்கு குடித்துவர தோலில் ஏற்படும் அரிப்பு, தொற்று, சிறுகொப்புளங்கள், படர்தாமரை போன்றவை விலகும்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள 2 இடங்களிலிருந்து சிறு மூளையுடைய மனித இனத்தின் படிமங்களை அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இந்த இனம் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது தெரிய வருகிறது. இந்தச் சிறு மூளையுடைய மனித இனம் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன என்று அறிவியலர் நம்பி வந்தனர். ஆனால் இந்தக் குறிப்பிட்ட மனித இனம் 2,36,000 ஆண்டுகளுக்கும் 3,35,000 ஆண்டுகளுக்கும் இடையே வாழ்ந்து வந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மனிதர்களின் நெருங்கிய சகாக்களான சிம்பன்ஸிக்கள், கொரில்லாக்களுக்கு இந்த மனித இனம் அதிக நெருக்கமுடையது. மேலும் இந்த சிறுமூளையுடைய மனித இனம் இறந்தோரை புதைக்கும் வழக்கம் உடையதாக இருந்துள்ளதும் அறிவியலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தங்களது குரல்களை நேரத்துக்கு தக்கபடி மாற்றிக் கொள்ளும் பாலூட்டி விலங்கினங்களில் சீல்களும் ஒன்று. இவை பனி படர்ந்த துருவ பிரதேசங்களில் வாழ்பவை. அண்மையில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் குட்டி சீல்கள் தங்களது குரல்களை மாற்றிக் கொண்டு மனிதர்களைப் போலவும், கிளிகளைப் போலவும் சத்தம் எழுப்புவதை கண்டறிந்துள்ளனர். அவை தங்களது ஒரிஜினல் குரலை மாற்றி, மனிதர்களைப் போல, கிளிகளைப் போல மிமிக்ரி செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். தங்களது குரல்களை ஏற்ற இறக்கத்துடன் மாற்றத் தெரிந்த பாலூட்டி இனங்களில் சீல்களும் தற்போது இணைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். நெதர்லாந்தில் உள்ள Max Planck Institute for Psycholinguistics என்ற ஆய்வகம்தான் தற்போது இந்த ஆய்வை கண்டறிந்துள்ளது. இதற்காக 1 முதல் 3 வாரங்கள் வரையிலான வயதுடைய 8 பேபி சீல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதன் குரல்களை தொடர்ந்து பதிவு செய்து ஆய்வு செய்ததில் இவை தெரியவந்துள்ளது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்டுள்ள Wadden Sea பகுதியில்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூமியில் உயிர்கள் எப்போது தோன்றியது என்பதைக் கண்டறிய உதவும் 160 கோடி ஆண்டு பழமையான தாவரப் படிமம் ஒன்று கிடைத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் என்ற படிமங்கள் நிறைந்த பகுதியில் உள்ள பாறையில் உலகின் மிகப் பழைமையான இந்த தாவர படிமத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ராஜாக்கள், மந்திரிகள், தளபதிகள் போன்றோர் அணியும் கிரீடம் அல்லது தலை கவசங்களை நாம் திரைப்படங்களிலும், அருங்காட்சியகங்களிலும் நாம் பார்த்திருப்போம். வடமேற்கு ஐரோப்பாவில் 8 முதல் 11 நூற்றாண்டு வரையிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி குடியேறிய வைக்கிங் எனப்படும் ஒருவகை கூட்டத்தினரின் கால கட்டத்தில் உருவானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைய ஆய்வுகள் இதில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளன. ஐரோப்பாவில் காணப்பட்ட ெகாம்பு வைத்த கிரீடங்கள் அல்லது தலை கவசங்கள் அதற்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையவையாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பித்தளை கால கட்டம் என வர்ணிக்கப்படும் கிமு 3300 கால கட்டமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. 1942 இல் கோபன்ஹேகனில் இது தொடர்பான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் எதிரொலி: 22 கோடி ரூபாய் வரை இழப்பு
18 Nov 2025சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
ஆந்திராவில் நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை
18 Nov 2025ஐதராபாத்: ஆந்திராவில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை
18 Nov 2025சென்னை; தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
-
சபரிமலை கோவிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் : பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் குவிப்பு
18 Nov 2025சபரிமலை : வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? - வாக்காளர்களுக்கு வந்தது புது சிக்கல்
18 Nov 2025சென்னை : வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? வாக்காளர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் வர்த்தகத்துறை செயலாளர் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தி.மு.க. தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : கோவையில் வெற்றி பெற செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்
18 Nov 2025சென்னை : தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
18 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
-
என்னுடைய கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கர்நாடக சிறுவன்
18 Nov 2025பெங்களூரு: கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி பிரதமர் மோடிக்கு சிறுவன் கடிதம் எழுதியுள்ளது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு பொதுத்தேர்தல் துறை செயலாளருக்கு கடிதம்
18 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
-
துணை ஜனாதிபதியுடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
18 Nov 2025டெல்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் சந்தித்து பேசினார்.
-
வரும் ஜனவரிக்குள் வருமான வரி கணக்கு படிவங்கள் வெளியிடப்படும் நேரடி வரிகள் வாரியம் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: வருமான வரி கணக்கு படிவங்கள் ஜனவரிக்குள் வெளியிடப்படும் என்று நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
-
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம்: அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
18 Nov 2025சென்னை: மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.50 கோடி வரை மானியம் வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு
18 Nov 2025சென்னை: வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
-
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞர் சடலம் மீட்பு- பரபரப்பு
18 Nov 2025சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞரின் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


