முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நீங்களும் எளிதாக வானொலி தொடங்கலாம்

ஃபேஸ்புக், பிளாக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் மிக எளிதாக போட்காஸ்டிங் (Podcasting) எனப்படும் வானொலியைத் தொடங்க முடியும். பிளாக்கை எப்படி இலவசமாகத் தொடங்க முடிகிறதோ, அதே போன்று போட்காஸ்டிங் வானொலியையும் இலவசமாகவே தொடங்க முடியும். தனியாக நாமே ஒரு பக்கத்தை அமைப்பதற்குப் பெரிய சர்வர்கள் தேவைப்படும்; அதனால், முதலில் ஏதேனும் ஒரு போட்காஸ்டிங் எனப்படும் சேவை இணையதளத்தை நாடலாம். இதற்குப் பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன. மேலும், செயலியை செல்பேசியிலும் பதிவிறக்கிக்கொள்ள முடியும். நம் செல்பேசியிலேயே நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து, அதிலேயே எடிட்செய்யும் வசதியும் உள்ளன. எனவே ஸ்மார்ட்போன் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் போட்காஸ்டிங் எனப்படும் வானொலியைத் தொடங்க முடியும். இதற்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. இதற்காக ‘ஆங்கர்’ (anchor.fm), ‘ஸ்பாட்டிஃபை’ (open.spotify.com), ‘கூகுள் பாட்காஸ்ட்’ (google.com/podcasts), ‘ஆப்பிள் பாட்காஸ்ட்’ (podcast.apple.com), ‘பிரேக்கர்’ (breaker.audio), ‘காஸ்ட் பாக்ஸ்’ (castbox.fm), ‘ஓவர் காஸ்ட்’ (overcast.fm), ‘பாக்கெட் காஸ்ட்’ (pca.st), ‘ரேடியோ பப்ளிக்’ (radiopublic.com) போன்ற இணையதளங்கள் இலவசமாகவே இடம் தருகின்றன. ஆனால், அரசின் ஒலிபரப்புக் கொள்கைகளுக்கு உட்பட்டே போட்காஸ்டிங் எனப்படும்ஒலிபரப்பும் இருக்க வேண்டும். ஒலிபரப்புக் கொள்கைகளை ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளத்துக்குச் (mib.gov.in/broadcasting/air-broadcast-code) சென்று பார்த்துக்கொள்ளலாம்.

2 டம்ளர் போதும்

ரத்த அழுத்தம் சீராக, அதிக உடல் எடையை விரைவில் குறைக்க, வாயுத் தொல்லையிலிருந்து விடுபட, உடலில் இன்சுலின் அளவு சீராக, மலச்சிக்கல் பிரச்சினை இவை அனைத்தும் நீங்க, நாம் தினமும் எழுந்ததும் வெறும் 2 டம்ளர் தண்ணீர் குடித்தாலே போதும்.

கேஸ் அடுப்பால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா? / விஞ்ஞானிகளின் ஆய்வில் புது தகவல்

கேஸ் அடுப்புகள் பழசானாலும் சரி, புதுசானாலும் சரி, அவை தொடர்ச்சியாக மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றன. இந்த தனிமம்தான் இயற்கை எரிவாயு தொகுப்பில் முக்கியமான ஒன்றாகும். தற்போது தோராயமாக நாடு முழுவதும் சுமார 40 மில்லியன் கேஸ் அடுப்புகள் நாள்தோறும் பயன்படுத்தப்படுகின்றன. அதே போல அரை மில்லியன் எரிவாயு வாகனங்கள் சாலையில் பறக்கின்றன. இப்போது நினைத்து பாருங்கள். அவற்றிலிருந்து வெளியாகும் மீத்தேன் அளவு குறித்து. புவிவெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணியாக இது உள்ளது என ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் மேற்கொண்டுள்ள புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக அதன் விஞ்ஞானிகள் குழு தலைவர் எரிக் லேபெல் (Eric Lebel). இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெளியாகும் மீத்தேனில் முக்கால்வாசி பங்கு கேஸ் அடுப்பில் இருந்துதான் வெளியாகிறது என்பதை கண்டறிந்துள்ளோம் என எச்சரிக்கிறார்.

உறங்கும் போது எப்படி படுக்க வேண்டும்

முந்தைய இரவு உறக்கத்தைப் பொருத்தே அடுத்த நாளின் செயல்திறன் நிர்ணயிக்கப்படுவதால் உடலுக்கு தூக்கம் தவிர்க்க முடியாதது. ஆனால், எந்த நிலையில் தூங்கினால் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் நல்லது என்பது முக்கியமானது. உங்களுடைய முதுகெலும்பை சரியாக சீரமைக்கும் நிலையில் தூங்குவதன் மூலம் மட்டுமே தூக்கம் மேம்படும். உடலில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது. முதுகு படுக்கையில் படும்படி கிடைமட்டமாக படுத்துத் தூங்குவது முதுகெலும்பை சரியான நிலையில் பராமரிக்கிறது. இது கீழ் முதுகு மற்றும் கழுத்துத் தசைகள் இரண்டையும் தளர்த்தும். இந்த நிலையில் தூங்குவது ஒரு நிம்மதியான தூக்கத்தைத் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மெல்லிய மெத்தை, தலையணையை உபயோகித்தால் தோள்பட்டை அல்லது கழுத்து வலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

கம்பீரமான விலங்கு

இதன் முடி வெள்ளையாக காணப்பட்டாலும் இதன் தோல் கருப்பாக இருக்கும். இது நீர் நாய்களை வேட்டையாடும் போது கடல் பணியை ஒரு தளமாக பயன்படுத்துகின்றது. இதற்கு 42 பற்கள் இருக்கும் மற்றும் பெண் கரடி ஆண் கரடியை விட பாதி எடை மட்டுமே இருக்கும். ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் போலார் கரடிகளுக்கு அருமையான வாசனை சக்தி உள்ளது,கிட்டத்தட்ட ஒன்றறை மைல் தூரத்தில் இருக்கும் கடல் நாய்களின் வாசனையை கண்டுபிடித்துவிடும். இதன் குட்டிகள் பிறக்கும்போது மனித குழந்தைகளை விட சிறியதாக இருக்கும் அதாவது ஒரு எலி அளவு மட்டுமே இருக்கும். அவைகளுக்கு உணவு நிறைய கிடைத்தால் அவை ஒரே ஆண்டில் முழு மனிதன் அளவு வளர முடியும்.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago