முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

டோக்கியோ, ஜன.- 2 - ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஜப்பான் தீவு நாடானது, பூகம்ப மண்டலத்தில் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி லேசானது முதல் சக்திவாய்ந்த நில நடுக்கம் வரை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பலியானார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.  இதில் புகுஷிமா என்ற அணு மின் நிலையமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு பல நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.   இந்த நிலையில் சிறிது கால இடைவெளிக்கு பிறகு நேற்று புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவையில் 7 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த நில நடுக்கத்தினால் தலைநகர் டோக்கியோவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியில் அலறி அடித்துக்கொண்டு வீடுகளைவிட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இதேபோல சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதாக தகவல் இல்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்