முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்-9-ல் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பூச்சொரிதல் விழா

வியாழக்கிழமை, 20 மார்ச் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.21 - மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயிலில் வருகின்ற 9-ம் தேதி புதன்கிழமை பூரிச்சொரிதல் விழா மாலை 6 மணி அளவில் நடக்கிறது. விழாவையொட்டி அன்று மாலை அருள்மிகு மாரியம்மன் மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லாக்கில் எழுந்தருளி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அம்மன் சன்னதி கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி தெரு, கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசிவீதி, வடக்குமாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளிவீதி, கீழவெளிவீதி,காமராஜர் சாலை வழியாக சென்று தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலை வந்தடைகிறது. அதன் பின்னர் மாரியம்மனுக்கு பூச்சொரிதலும் தீபாராதணைகளும் நடைபெறுகிறது.

எனவே பூச்சொரிதல் விழாவை அருள்மிகு மாரியம்மன் மதுரை வீதிகளில் புறப்பாடாகி வரும் சமயத்தில் பக்தர்களும் பொதுமக்களும் மலர்களையும் மாலைகளையும் காணிக்கையாக வழங்கி அருள்மிது மாரியம்மன் அருளை பெற்றுய்யுமாறு இணை ஆணையாளர் பொ.ஜெயராமன், பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்