முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த திட்டம்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை,ஏப்.19 - வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் 21 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

நிருபர்களிடம் பிரவீன்குமார் கூறியதாவது:_

17 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 'வெப்' கேமரா பொருத்தப்பட உள்ளது. தேர்தல் பணியில் 21 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் <டுபடுத்தப்பட உள்ளனர். மத்தியசென்னை பாராளுமன்ற தொகுதி, ஆலந்தூர் இடைத்தேர்தல் தொகுதி உள்பட 1,200 வாக்காளர்கள் மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் 5 பேரும், மற்ற வாக்குச்சாவடிகளில் 4 பேரும் பணியில் அமர்த்தப்படுவர்.

வனப்பகுதிகள், மலைப்பகுதிகள் உள்பட எளிதில் செல்ல முடியாத 21 வாக்குச்சாவடிகளுக்கு 23_ந்தேதி (புதன்கிழமை) வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடி அருகில் வசிக்கும் அரசியல் கட்சிகளை சாராத 2 பொதுமக்களின் தொலைபேசி எண்கள் பெறப்பட்டுள்ளது. அதன்மூலம் வாக்குச்சாவடியில் நிலவும் சூழல் குறித்த தகவல்கள் அவ்வப்போது பரிமாறி கொள்ளப்படும்.

தேர்தல் பணியில் <ஈடுபடும் ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் வாக்குச்சாவடி குறித்த தகவல் 23_ந்தேதி அறிவிக்கப்படும். வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் முன்பு அரசியல் கட்சிகள் தங்கள் 'பூத்'களை அமைத்துக் கொள்ளலாம். கண்பார்வையற்ற வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

22_ந்தேதி மாலை தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு, அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்காளர்களை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது. கல்யாண மண்டபங்கள், லாட்ஜ்களில் சோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்