எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர், ஜூன்.9 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 67 ஆயிரத்து 850 மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன தலைமை வகித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க அமைச்சர் பேசியதாவது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக 42 வகையான திட்டங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ-4.25 இலட்சம் மதிப்பில் 80 நபர்கள் பயனடைந்துள்ளனர். மனவளர்சி குன்றியோர், கடுமையாக இயலாதோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என 4 வகையான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1495.00 இலட்சம் மதிப்பில் 4509 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.48.00 இலட்சம் மதிப்பில் 2054 எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளி மாணவஃமாணவிகள் பயனடைந்துள்ளனர். பார்வையற்றோர்களுக்கான வாசிப்பாளர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.28 இலட்சம் மதிப்பில் 77 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று நிலைகளைப்பெற்ற கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் மாணவஃமாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 3.16 இலட்சத்தின் 18 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
கை, கால் பாதிக்கப்பட்டோர் காதுகோளாதோர் வாய்பேச இயலாதோர் கண்பார்வையற்றோர்களை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபர்கள் திருமண உதவித்திட்டம், மற்றும் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்துக்கொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு திருமணநிதியுதவி திட்டம் என நான்கு வகையான திட்டங்களின் கீழ் ரூ. 19.50 இலட்சம் மதிப்பில் 112 தம்பதியினர்கள் பயனடைந்துள்ளர். இலவச பேருந்து பயணச ;சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.721.00 இலட்சம் மதிப்பில் 1935 நபர்கள் பயடைந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் பயிற்சி,கணினி பயிற்சி,ஆய்வுக்கூட பயிற்சிகள் போன்ற பயிற்சிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.42 இலட்சம் மதிப்பில் 51 நபர்கள் பயனடைந்துள்ளனர். 6 வயதுக்குட்பட்ட காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகள், மன வளர்ச்சி குன்றிய, மற்றும் கண் பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 11.70 இலட்சம் மதிப்பில் 330 சிறப்பு குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் வாயிலாக ரூ 18.70 இலட்சம் மதிப்பில் 120 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மன வளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் பணிப்புரியும் சிறப்பாசிரியர்களுக்கு மதிப்புூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 17.42 இலட்சம் மதிப்பில் 100 சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்கள் பயனடைந்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ரூ. 500000 மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 90.00 லட்சம் மதிப்பில் 3200 நபர்கள் உபகரணங்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.
பொது பிரிவின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி, செயற்கை அவயங்கள், முடநீக்கியல் சாதனங்கள், பார்வை யற்றோருக்கான மடக்கு ஊன்றுக்கோல், காது கேளாதோருக்கான காதொலி கருவிகள், மோட்டார் பொருதிய தையல் இயந்திரங்கள் போன்ற திட்டங்களின்; வாயிலாக ரூ 43.38 லட்சம் மதிப்பில் 938 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
2011ம் ஆண்டு முதல் 4784 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் 1414 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2011ம் ஆண்டு முதல் இது வரை ரூ.18 கோடியே 53 லட்சம் 26 ஆயிரத்து 351 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இது வரை 33 ஆயிரத்து 291 நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. விழாவில் 75 நபர்களுக்கு ரூ.7 இலட்சத்து 67 ஆயிரத்து 850 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .
தொடர்ந்து விழாவில் மீன்வளத் துறை சார்ப்பில் 23 மீனவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.46 ஆயிரத்திற்கான உதவி தொகைகளையும், தீண்டாமை கடைப்பிடிக்காத மத நல்லிணக்கத்துடன் வாழும் மாவட்ட அளவில் சிறந்த கிராமத்திற்கான பரிசுத்தொகை ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை பாபநாசம் ஒன்றியம், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் .க.ஜெய்சங்கர்pடமும் மேலும், ஒரத்தநாடு வட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த .டி.சுமதி-தென்னரசு தம்பதியினருக்கு முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டு பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும் பிறந்த நிகழ்வினை சிறப்பினமாக கருதி முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தை ரூ.15 ஆயிரத்து 200 வீதம் 5 குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக ரூ.76ஆயிரத்திற்கான பத்திரங்களையும் அமைச்சர் வழங்கினார்.
விழாவில் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, (தஞ்சாவூர்), எம்.ரெத்தினசாமி (திருவையாறு), மாநகராட்சி மேயர் .சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சி தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், நிலவள வங்கி தலைவர் .துரை வீரண்ணன், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் .ரவிச்சந்திரன், நகர் மன்ற உறுப்பினர் சண்முகபிரபு, அரசு வழக்கறிஞர் தங்கப்பன், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
விஜய்யை கைது செய்தால் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும்: டி.டி.வி.தினகரன் பேட்டி
05 Oct 2025சென்னை : “கரூர் சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
-
தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
05 Oct 2025சென்னை : தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு
05 Oct 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
-
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்: வள்ளலார் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு
05 Oct 2025சென்னை : வள்ளலாரின் பிறந்தநாளான தனிப்பெருங்கருணை நாளில், அவர் கூறிய “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும் என்று தம
-
இருமல் மருந்தால் குழந்தைகள் பலி: மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை
05 Oct 2025புதுடெல்லி : இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில செயலாளர்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.
-
கரூர் சம்பவத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை: வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் அவசர ஆலோசனை
05 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து வழக்கறிஞர்கள் குழுவுடன் த.வெ.க. தலைவர் விஜய் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
புதுச்சேரியில் இன்று முதல் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்: தி.மு.க. அறிவிப்பு
05 Oct 2025புதுச்சேரி : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி புதுச்சேரியில் 5-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய இன்று முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடக்குவதாக தி.மு.க.
-
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு : பணிகளை மிக விரைந்து முடித்திட அறிவுறுத்தல்
05 Oct 2025சென்னை : சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
பல அபாயங்கள் நிறைந்துள்ளன: ட்ரம்பின் அமைதி ஒப்பந்தத்திற்கு ஹிஸ்புல்லா தலைவர் எதிர்ப்பு
05 Oct 2025காசா : காசாவில் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த திட்டத்தில் பல அபாயங்கள் நிறைந்துள்ளதாக லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம்
-
இலக்கிய உலகின் மிகச்சிறந்த படைப்பாளி: எழுத்தாளர் கோதண்டம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
05 Oct 2025சென்னை : இலக்கிய உலகில் தடம்பதித்த மிகச்சிறந்த படைப்பாளி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
சிகாகோவில் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்திய கும்பல் : துப்பாக்கிச்சூட்டில் பெண் படுகாயம்
05 Oct 2025சிகாகோ : சிகாகோவில் போலீசாரின் வாகனத்தை வழிமறித்து தாக்கிய பெண் சுடப்பட்ட சம்பவம், நகரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் ஆய்வு : 8 அதிகாரிகள் கூடுதலாக சேர்ப்பு
05 Oct 2025கரூர் : கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.
-
இட்லி கடை திரைப்படம் வெற்றி: கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்
05 Oct 2025தேனி : நடிகர் தனுஷ் இட்லி கடை வெற்றிக்காக கிடா வெட்டி விருந்தளித்துள்ளார்.
-
ம.பி.யில் 11 குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் அதிரடியாக கைது
05 Oct 2025மத்தியப்பிரதேசம் : ம.பி.யில் குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்து கவனக்குறைவாகச் செயல்பட்டதாக மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார்.
-
விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு : பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய திட்டம்
05 Oct 2025சென்னை : பிரசார வாகனத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக மோதிய விவகாரத்தில் விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் பிரசார வாகனத்த
-
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை
05 Oct 2025கேரளா : தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை பயன்படுத்த கேரள மாநில அரசு.தடை விதித்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்பு புலனாய்வுக்குழுவில் மேலும் 8 அதிகாரிகள் நியமனம்
05 Oct 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளா, தேவி ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில
-
தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை நாம் வீழ்த்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
05 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை நாம் வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-10-2025.
05 Oct 2025 -
டார்ஜிலிங் நிலச்சரிவில் பலி 14 ஆனது: உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
05 Oct 2025டார்ஜிலிங் : மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது; மேலும், பலரைக் காணவில்லை.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-10-2025.
05 Oct 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-10-2025.
05 Oct 2025 -
சபரிமலையில் தங்க தகடுகள் அக்.17-ல் மீண்டும் நிறுவப்படும் : தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு
05 Oct 2025திருவனந்தபுரம் : சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் தங்க தகடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: புர்கா அணிந்த பெண்களை சோதனை செய்யுமாறு பா.ஜ. கட்சி வலியுறுத்தல்
05 Oct 2025பாட்னா : பீகார் சட்டசபை தேர்தலின் போது புர்கா அணிந்து வாக்களிக்க வரும் பெண்களின் வாக்காளர் அட்டைகளில் உள்ள புகைப்படத்தை தேர்தல் ஆணையம் பொருத்திப்பார்த்து சோதனையிட வேண்ட