எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர், ஜூன்.9 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 67 ஆயிரத்து 850 மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன தலைமை வகித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க அமைச்சர் பேசியதாவது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக 42 வகையான திட்டங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ-4.25 இலட்சம் மதிப்பில் 80 நபர்கள் பயனடைந்துள்ளனர். மனவளர்சி குன்றியோர், கடுமையாக இயலாதோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என 4 வகையான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1495.00 இலட்சம் மதிப்பில் 4509 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.48.00 இலட்சம் மதிப்பில் 2054 எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளி மாணவஃமாணவிகள் பயனடைந்துள்ளனர். பார்வையற்றோர்களுக்கான வாசிப்பாளர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.28 இலட்சம் மதிப்பில் 77 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று நிலைகளைப்பெற்ற கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் மாணவஃமாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 3.16 இலட்சத்தின் 18 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
கை, கால் பாதிக்கப்பட்டோர் காதுகோளாதோர் வாய்பேச இயலாதோர் கண்பார்வையற்றோர்களை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபர்கள் திருமண உதவித்திட்டம், மற்றும் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்துக்கொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு திருமணநிதியுதவி திட்டம் என நான்கு வகையான திட்டங்களின் கீழ் ரூ. 19.50 இலட்சம் மதிப்பில் 112 தம்பதியினர்கள் பயனடைந்துள்ளர். இலவச பேருந்து பயணச ;சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.721.00 இலட்சம் மதிப்பில் 1935 நபர்கள் பயடைந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் பயிற்சி,கணினி பயிற்சி,ஆய்வுக்கூட பயிற்சிகள் போன்ற பயிற்சிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.42 இலட்சம் மதிப்பில் 51 நபர்கள் பயனடைந்துள்ளனர். 6 வயதுக்குட்பட்ட காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகள், மன வளர்ச்சி குன்றிய, மற்றும் கண் பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 11.70 இலட்சம் மதிப்பில் 330 சிறப்பு குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் வாயிலாக ரூ 18.70 இலட்சம் மதிப்பில் 120 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மன வளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் பணிப்புரியும் சிறப்பாசிரியர்களுக்கு மதிப்புூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 17.42 இலட்சம் மதிப்பில் 100 சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்கள் பயனடைந்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ரூ. 500000 மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 90.00 லட்சம் மதிப்பில் 3200 நபர்கள் உபகரணங்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.
பொது பிரிவின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி, செயற்கை அவயங்கள், முடநீக்கியல் சாதனங்கள், பார்வை யற்றோருக்கான மடக்கு ஊன்றுக்கோல், காது கேளாதோருக்கான காதொலி கருவிகள், மோட்டார் பொருதிய தையல் இயந்திரங்கள் போன்ற திட்டங்களின்; வாயிலாக ரூ 43.38 லட்சம் மதிப்பில் 938 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
2011ம் ஆண்டு முதல் 4784 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் 1414 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2011ம் ஆண்டு முதல் இது வரை ரூ.18 கோடியே 53 லட்சம் 26 ஆயிரத்து 351 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இது வரை 33 ஆயிரத்து 291 நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. விழாவில் 75 நபர்களுக்கு ரூ.7 இலட்சத்து 67 ஆயிரத்து 850 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .
தொடர்ந்து விழாவில் மீன்வளத் துறை சார்ப்பில் 23 மீனவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.46 ஆயிரத்திற்கான உதவி தொகைகளையும், தீண்டாமை கடைப்பிடிக்காத மத நல்லிணக்கத்துடன் வாழும் மாவட்ட அளவில் சிறந்த கிராமத்திற்கான பரிசுத்தொகை ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை பாபநாசம் ஒன்றியம், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் .க.ஜெய்சங்கர்pடமும் மேலும், ஒரத்தநாடு வட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த .டி.சுமதி-தென்னரசு தம்பதியினருக்கு முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டு பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும் பிறந்த நிகழ்வினை சிறப்பினமாக கருதி முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தை ரூ.15 ஆயிரத்து 200 வீதம் 5 குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக ரூ.76ஆயிரத்திற்கான பத்திரங்களையும் அமைச்சர் வழங்கினார்.
விழாவில் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, (தஞ்சாவூர்), எம்.ரெத்தினசாமி (திருவையாறு), மாநகராட்சி மேயர் .சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சி தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், நிலவள வங்கி தலைவர் .துரை வீரண்ணன், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் .ரவிச்சந்திரன், நகர் மன்ற உறுப்பினர் சண்முகபிரபு, அரசு வழக்கறிஞர் தங்கப்பன், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 days ago |
-
புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பஸ் நிலையம் இன்று திறப்பு
01 May 2025புதுச்சேரி, புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று (மே 2) திறக்கப்படுகிறது.
-
பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியில் மாற்றம் வருமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
01 May 2025திருச்சி: கோடை விடுமுறை முடிந்து வெயிலைப் பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
54-வது பிறந்தநாள்: நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து
01 May 2025சென்னை, 54-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கேரளா, தமிழக பகுதிகளில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
01 May 2025சென்னை: இந்த மாத இறுதியில் கேரளா, தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாகவும், மே 15-ம் தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகு
-
போர் பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வ
-
ஆந்திராவில் பயங்கரம்: வீடு மீது கார் மோதிய விபத்தில் ஐந்து மருத்துவ மாணவர்கள் பலி
01 May 2025நெல்லூர், ஆந்திராவில் வீடு மீது கார் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது: டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்
01 May 2025சென்னை, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது என டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ: இஸ்ரேலில் தேசிய அவசர நிலை
01 May 2025ஜெருசலேம், ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டதால் இஸ்ரேலில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்: ராகுல் காந்தி
01 May 2025புதுடெல்லி, சாதிவாரி கணக்கெடுப்புஅறிவிப்பை வரவேற்றுள்ள, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதற்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
ஓரிரு நாட்களில் வெளியாகிறது: 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்
01 May 2025சென்னை, 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பஹல்காம் தாக்குதலில் தொடர்பில்லை: பாகிஸ்தான் மீண்டும் மறுப்பு
01 May 2025இஸ்லாமாபாத், பஹல்காம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மீண்டும் மறுத்துள்ளது.
-
பஹல்காமுக்கு முன்பு மூன்று இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்? விசாரணையில் திடுக் தகவல்
01 May 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அங்கோலா அதிபர் இந்தியா வருகை
01 May 2025அங்கோலா: அங்கோலா நாட்டு அதிபர் 4 நாள் பயணமாக இந்தியா வந்தார். இருநாடுகளுக்கும் இடையிலான ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அட்சய திருதியை நாளில் தமிழ்நாட்டில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை
01 May 2025சென்னை: அட்சய திருதியை நாளில் 27,440 பத்திரப்பதிவின் மூலம் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
அமலுக்கு வந்த ஏ.டி.எம். கட்டண உயர்வு
01 May 2025புதுடெல்லி, ஏ.டி.எம். கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கரும்புக்கு ரூ.355 ஆதாய விலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 May 2025புதுடில்லி, கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.355 வீதம் 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிதத்துக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
பிரதமர் என்னை பின்தொடர்வதால் பா.ஜ.க. தலைவர்களுக்கு பொறாமை: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
01 May 2025ஐதராபாத், பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பின் தொடர்வதினால் உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் காந்தி கோரிக்கை
01 May 2025புதுடில்லி, பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு
01 May 2025சென்னை, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை முடிவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு எச்சரிக்கை
01 May 2025சென்னை, தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
01 May 2025சென்னை, சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் திருமண மண்டபம், பள்ளி வகுப்பறை, கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
-
பஹல்காம் தாக்குதல்: விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க பாக்.கிற்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் தாக்குதல் விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது.
-
மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம்: வேவ்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
01 May 2025மும்பை, மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம் என்று மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாடு 2025-இல் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
இ-பாஸ் சர்வரில் சிக்கல்: நீலகிரி சுற்றுலா பயணிகள் அவதி
01 May 2025நீலகிரி: இ-பாஸ் சர்வரில் திடீரென சிக்கல் ஏற்பட்டதால், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் இ-பாஸ் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர்.
-
ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலி
01 May 2025கீவ்: உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.