எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர், ஜூன்.9 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 67 ஆயிரத்து 850 மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன தலைமை வகித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க அமைச்சர் பேசியதாவது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக 42 வகையான திட்டங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ-4.25 இலட்சம் மதிப்பில் 80 நபர்கள் பயனடைந்துள்ளனர். மனவளர்சி குன்றியோர், கடுமையாக இயலாதோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என 4 வகையான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1495.00 இலட்சம் மதிப்பில் 4509 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.48.00 இலட்சம் மதிப்பில் 2054 எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளி மாணவஃமாணவிகள் பயனடைந்துள்ளனர். பார்வையற்றோர்களுக்கான வாசிப்பாளர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.28 இலட்சம் மதிப்பில் 77 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று நிலைகளைப்பெற்ற கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் மாணவஃமாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 3.16 இலட்சத்தின் 18 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
கை, கால் பாதிக்கப்பட்டோர் காதுகோளாதோர் வாய்பேச இயலாதோர் கண்பார்வையற்றோர்களை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபர்கள் திருமண உதவித்திட்டம், மற்றும் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்துக்கொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு திருமணநிதியுதவி திட்டம் என நான்கு வகையான திட்டங்களின் கீழ் ரூ. 19.50 இலட்சம் மதிப்பில் 112 தம்பதியினர்கள் பயனடைந்துள்ளர். இலவச பேருந்து பயணச ;சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.721.00 இலட்சம் மதிப்பில் 1935 நபர்கள் பயடைந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் பயிற்சி,கணினி பயிற்சி,ஆய்வுக்கூட பயிற்சிகள் போன்ற பயிற்சிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.42 இலட்சம் மதிப்பில் 51 நபர்கள் பயனடைந்துள்ளனர். 6 வயதுக்குட்பட்ட காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகள், மன வளர்ச்சி குன்றிய, மற்றும் கண் பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 11.70 இலட்சம் மதிப்பில் 330 சிறப்பு குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் வாயிலாக ரூ 18.70 இலட்சம் மதிப்பில் 120 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மன வளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் பணிப்புரியும் சிறப்பாசிரியர்களுக்கு மதிப்புூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 17.42 இலட்சம் மதிப்பில் 100 சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்கள் பயனடைந்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ரூ. 500000 மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 90.00 லட்சம் மதிப்பில் 3200 நபர்கள் உபகரணங்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.
பொது பிரிவின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி, செயற்கை அவயங்கள், முடநீக்கியல் சாதனங்கள், பார்வை யற்றோருக்கான மடக்கு ஊன்றுக்கோல், காது கேளாதோருக்கான காதொலி கருவிகள், மோட்டார் பொருதிய தையல் இயந்திரங்கள் போன்ற திட்டங்களின்; வாயிலாக ரூ 43.38 லட்சம் மதிப்பில் 938 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
2011ம் ஆண்டு முதல் 4784 நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் 1414 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2011ம் ஆண்டு முதல் இது வரை ரூ.18 கோடியே 53 லட்சம் 26 ஆயிரத்து 351 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இது வரை 33 ஆயிரத்து 291 நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. விழாவில் 75 நபர்களுக்கு ரூ.7 இலட்சத்து 67 ஆயிரத்து 850 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .
தொடர்ந்து விழாவில் மீன்வளத் துறை சார்ப்பில் 23 மீனவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.46 ஆயிரத்திற்கான உதவி தொகைகளையும், தீண்டாமை கடைப்பிடிக்காத மத நல்லிணக்கத்துடன் வாழும் மாவட்ட அளவில் சிறந்த கிராமத்திற்கான பரிசுத்தொகை ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை பாபநாசம் ஒன்றியம், ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் .க.ஜெய்சங்கர்pடமும் மேலும், ஒரத்தநாடு வட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த .டி.சுமதி-தென்னரசு தம்பதியினருக்கு முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டு பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும் பிறந்த நிகழ்வினை சிறப்பினமாக கருதி முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தை ரூ.15 ஆயிரத்து 200 வீதம் 5 குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக ரூ.76ஆயிரத்திற்கான பத்திரங்களையும் அமைச்சர் வழங்கினார்.
விழாவில் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, (தஞ்சாவூர்), எம்.ரெத்தினசாமி (திருவையாறு), மாநகராட்சி மேயர் .சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சி தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், நிலவள வங்கி தலைவர் .துரை வீரண்ணன், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் .ரவிச்சந்திரன், நகர் மன்ற உறுப்பினர் சண்முகபிரபு, அரசு வழக்கறிஞர் தங்கப்பன், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்கு
13 Aug 2025சென்னை, தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
-
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலையில் ஒருவர் கைது
13 Aug 2025தூத்துக்குடி, நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
-
உயிரிழந்ததாக கூறிய பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் ராகுல் சந்திப்பு
13 Aug 2025புதுடெல்லி, உயிரிழந்ததாக கூறிய பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
-
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்: வரிவிதிப்பு விவகாரத்தில் டிரம்ப்பை சந்திக்கிறார்
13 Aug 2025புதுடெல்லி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.
-
கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
13 Aug 2025புதுடெல்லி : மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.
-
வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார் அமித்ஷா
13 Aug 2025புதுடெல்லி : நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்
-
சென்னையில் மேலும் 2 புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க ஆலோசனை
13 Aug 2025சென்னை : சென்னையில் புதிதாக மேலும் 2 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
-
தெருநாய்கள் தொடர்பான உத்தரவு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
13 Aug 2025டெல்லி : தெருநாய்கள் தொடர்பான உத்தரவு தொடர்பான வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
-
தமிழ்நாட்டில் வாக்காளர் திருத்தம் நியாயமாக நடைபெற வேண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
13 Aug 2025சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க.
-
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு
13 Aug 2025சென்னை, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
-
கூலி திரைப்படம் வெற்றிபெற ரஜினிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
13 Aug 2025சென்னை, கூலி திரைப்படம் வெற்றி பெற நடிகர் ரஜினி காந்த்துக்கு இ.பி.எஸ் வாழ்த்து தெரிவித்தார்.
-
கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து: தி.மு.க. கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
13 Aug 2025சென்னை, நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
-
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் மைத்ரேயன்
13 Aug 2025சென்னை, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்கள் வைத்த கோரிக்கைகள்: மேயர் பிரியா பேட்டி
13 Aug 2025சென்னை, அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்கள் வைத்த கோரிக்கைகள் குறித்து மேயர் பிரியா விளக்கம்.
-
ஜார்க்கண்ட்: மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
13 Aug 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
14 Aug 2025சென்னை : சுதந்திர நாள் விழா முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறை செல்வேன்: கர்நாடக எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
13 Aug 2025பெங்களூரு, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 2,800 நாய்களை கொன்று புதைத்துள்ளேன் அதற்காகவும் நான் சிறைக்கு செல்லவும் நான் தயார் என்று கர்நாடக எம்.எல்.ஏ.
-
சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
14 Aug 2025சென்னை : சுதந்திர நாள் விழா முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
14 Aug 2025சென்னை : சுதந்திர நாள் விழா முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை அமைக்கப்படும் : பார்லி.யில் மத்திய அரசு தகவல்
13 Aug 2025டெல்லி : நடப்பு நிதியாண்டில் 10, 660 கி.மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
நியூஸிலாந்தில் நிலநடுக்கம்
13 Aug 2025வெல்லிங்டன் : நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆபரேசன் சிந்தூரின் போது பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தப்பட்டதா..? அமெரிக்கா பதில் அளிக்க மறுப்பு
13 Aug 2025ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்ற கேள்விக்கு அமெரிக்க பதில் அளிக்க மறுத்து விட்டது.
-
துணைவேந்தர்கள் தேர்வு விவகாரம்: கவர்னருக்கு அதிகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட்
13 Aug 2025புதுடெல்லி, கேரள பல்கலைக்கழகங்களில் இடைக்கால துணைவேந்தர்களை நியமித்த கவர்னரின் முடிவுக்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
-
சற்றே குறைந்த தங்கம் விலை
13 Aug 2025சென்னை, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது.
-
பண மோசடி வழக்கு: சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
13 Aug 2025புதுடெல்லி, : பண மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.